Tuesday, April 25, 2006

*ஐஸ்வர்யா ராய்-சுஷ்மிதா சென்-உலகமயமாக்கலின் தந்திரம்!*

இந்த பதிவு முழுக்க முழுக்க தர்க்கத்திற்காக பதிவிக்கப் படுகிறது நண்பர்களே, அதனால் படித்து விட்டு நீங்கள் எல்லோரும் என் சிந்தனையுடன் எப்படி முரண்படுகிறீர்கள் அல்லது ஒத்துப் போகிறீர்கள் என்பதனை காண எனக்கு ஆவல்.

நான் சொல்லப் போகும் விசயம் என்னவென்றால் நமது நாடு என்று தாரளமயமாக்கப்பட்டு அன்னிய நாடுகளின் முதலீடும் அவர்களின் கடைவிரிப்பும் ஜோராக அமலுக்கு வந்ததோ அன்றைக்கே இந்த "வியபார காந்தங்கள்" இந்தியாவின் மக்கட் தொகையையும், பொருளதார வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு (இது வெள்ளாக் கார துரைகளுக்கு கைவந்த கலை, இல்லையா) ஒரு மார்க்கெட்டிங் உத்தியாக நம்மளை கையக படுத்த தொடர்ந்து இரண்டு முறை உலக அழகிகள் பட்டம் நம் நாட்டு பக்கம் திருப்பி விடப்பட்டது என்று நான் கருதுகிறேன்.

அதனால் நான் ஐசும், சென்னும் நல்ல அறிவு சார்ந்த அழகிகள் அல்ல என்று மறுக்கவில்லை, இவர்களுக்கு முன்னரும் நம் நாட்டிலிருந்து நல்ல மேற்கூறிய தகுதிகளுடன் பெண்கள் சென்றிருக்க வேண்டுமல்லவா! அப்படியெனில் அப்பொழுது இல்லாத கிரக்கம் இந்தியர்களின்மேல் ஏன் இப் பொழுது? ஏதோ இந்த படத்தில் கொஞ்சம் கோளாறு உள்ளதாக இல்லை! நன்கு சிந்தியுங்கள். அவ்வாறு உலக அழகி தேர்ந்து எடுக்கும் நபர்கள் வேற்று கிரகங்களிலிருந்து இரங்கி வந்து தேர்ந்து எடுப்பது கிடையாது, இல்லையா, எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தான்.

உங்களுக்கு தெரியுமா அமெரிக்காவில் உள்ள மெக்டொனல்ஸ் என்கிற விரைவு உணவகம், ஒரு ஊரில் ஒரு கிளை திறக்கும் முன்னர் சாட்டிலைட் படம் எடுக்கச் சொல்லி அந்த ஏரியாவின் மக்கட் தொகை, எது மாதிரியான மக்கள் அங்கு வசிக்கிறார்கள் அவர்களின் வருமானம் இத்தியாதிகளை ஆய்ந்து ஆராய்ந்து அந்த இடத்தில் ஒரு கடை போடுவார்களாம். அது அப்படி இருக்கும் பொழுது அவன விட பெரியா ஆள் சீப்பு, சோப்பு, ஷாம்பு, இப்பதான் மூஞ்சிலா மட்டும் மேக்கப் போட ஒரு 50 விசயங்கள் இருக்கே, அப்படி இருக்கும் போது நமள கொஞ்சம் அழகுங்கிர விசயத்த வைச்சு சுருட்டிப் புட்டாய்ங்காங்யா, சுருட்டிப் புட்டாய்ங்காங்யா, ஊத்துக்குளியில ஆரம்பிச்சு, கூவங்கரை முடிய ஒரே ஆழகிங்க போட்டிதான் போங்க அதோட by product என்னன்னு கேளுங்க மக்களே ஆள் பாதி மேக்கப் பாதி...மத்ததை நீங்க நிரப்பிக்கங்க மக்களே இப்ப நான் வர்டா....

6 comments:

துளசி கோபால் said...

எல்லாம் வியாபாரத்தந்திரம்தான்.
கூட்டம் இருக்குல்லே. ஒரு அஞ்சு சதமானம் விற்பனைன்னாலும் போதுமே! பிச்சுக்கிட்டுப் போயிராதா?
கண்ட மேக்கப்பையும் மூஞ்சுலே தேய்ச்சுக்கிட்டு தோல்வியாதி வந்து கஷ்டப்படுத்துங்க ஜனங்க.
நம்ம ஊரோ சூடா இருக்கு. இதுலே வியர்வைச் சுரப்பியை அடைச்சுட்டா எப்படி?

நிறைய மேக்கப் செய்யறவங்களுக்கு சீக்கிரம் முகத்துலே சுருக்கம் வந்துரும். ஆனா ஒவ்வொரு பொண்ணுக்கும்
தான் பேரழகின்ற எண்ணம் இருக்குல்லே. அதைப் பயன்படுத்திக்கிட்டாங்க.

இதுலே 'இந்த சாமான்கள்' விற்கும் கடைக்குப் போயிருக்கீங்களா? நுழைஞ்சதும் புடுங்கி எடுத்துருவாங்க.
போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு ஹெர்பல் ப்ராடக்ட்ஸ்னு உள்ளூர் அட்டகாசம் தனிக்கதை.

Sam said...

இதே சிந்தனையை மற்றவர்கள் சொல்லியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
Makes sense.
அன்புடன்
சாம்

Sivabalan said...

My view will be

1. Commercial
2. Long term planning (May be for business or which ever they want to force on)
3. Most important - to promote MNC's FMCG

Thekkikattan|தெகா said...

துள்சி முதலாவதாக வந்ததுமில்லாமல் ரொம்ப பளிச்சுன்னு உண்மையை உள்ளபடியே படீர்ன்னு போட்டு உடைச்சு சொல்லிட்டீங்க. நன்றி...!! மீண்டும் மீண்டும் என்னை உற்சாகப் படுத்துவதற்க்கு.

அன்புடன்,

தெகா.

Thekkikattan|தெகா said...

அன்பு சாம், எனக்கும் அது போன்று ஒரு எண்ணம் ஒரு இரண்டு மூன்று ஆண்டுகளாவே இருந்தது. அவ்வப்பொழுது யாகூ அரட்டை அறையில் சென்று உளறி வைத்துவிட்டு வருவது. எப்படியிருப்பினும், வியபாரயுக்தி கருதியே "உலக அழகி" ஸ்டண்ட் நடந்தேறியாதாக நான் கருதுகிறென்.

தாங்களின் வருகைக்கு நன்றி சாம்...!

தெகா.

Thekkikattan|தெகா said...

Dear Siva, Whatever you have listed all of them are true!!!

The motivational drive behind this thing is another international political stunt.

TheKa.

Related Posts with Thumbnails