Thursday, July 20, 2006

பரிணாம ஏணியில் ஒரு பசு...



வீராணம்
காவேரி
குழாயடிச் சண்டை
என்று பிய்ந்து நைந்து போன
மனித மனம்
ஒரு பசுவின்
பரிணாம ஏற்றத்தை
ரசிக்க மறந்து போனது...!

26 comments:

Sivabalan said...

தெகா

ஆகா மிக அருமை...

படம் சூப்பர்...

ஏரி அருகே அமர்ந்து பரிமானச் சிந்தனாயா?

கலக்கிடீங்க........

Anonymous said...

அந்த போட்டோ எடுத்த கையோட ரெண்டு கொடம் தண்ணி எடுக்க க்யூவிலெ நின்னுருந்த தெரியும் வுமக்கு...

Anu

Santhosh said...

ஆகா அடுத்த பரிமாணமா? இப்ப தான் இ.கொ ஒரு பரிமாண வளர்ச்சியை கண்டாரு அடுத்து நீங்களா? :))

Thekkikattan|தெகா said...

siva,

இந்த படம் எடுத்து ஒரு 10 வருசம் இருக்கும், ஏதாவது செய்யணுமின்னு காத்துகிட்டு இருந்தேன் அதுக்கு இப்பொழுதான் சந்தர்ப்பம் கிடைச்சுது.

அது ஒரு வட இந்திய பசு (!?) ரிஷிகேஷத்திலெ எடுத்தது.

Thekkikattan|தெகா said...

அனு,

//அந்த போட்டோ எடுத்த கையோட ரெண்டு கொடம் தண்ணி எடுக்க க்யூவிலெ நின்னுருந்த தெரியும் வுமக்கு...//


க்யூவிலென்ன மைல் கணக்க சைக்கிள்லெ வைச்சு குடம் குடமா தண்ணியடிச்சிருக்கோமே... இப்ப நான் பாஸா ஃபெயில

பொன்ஸ்~~Poorna said...

தெகா, கவிதையில் இறங்கியாச்சா?!! கலக்குங்க..

நாகை சிவா said...

காவேரி சண்டை போட்டு இருக்கோம்
வீராணம் கிடைக்க பெற்றுக் இருக்கோம்
ஆனால் பசுவின் பரிணாம் ஏற்றத்தை ரசிக்காமல் இருந்து இல்லை

பசு மட்டும் இல்லை, நாய், பூனை, அணில், குரங்கு மற்ற விலங்குகளின் பரிணாம ஏற்றத்தை பலமுறை நின்று ரசித்து இருக்கின்றேன். இனியும் அப்படி தான்....

கொத்துஸ், பரிணாம வளர்ச்சிக்கு போட்டியா பரிணாம் ஏணி(ஏற்றம்) யை தெ.கா.கொண்டு வருகின்றார். கவனிக்கவும்.

நாமக்கல் சிபி said...

//க்யூவிலென்ன மைல் கணக்க சைக்கிள்லெ வைச்சு குடம் குடமா தண்ணியடிச்சிருக்கோமே//

பெரிய ஆளுதாம்யா நீர்!
நாங்கள்ளாம் வெறும் குவாட்டருக்கு பண்ணுற அலம்பலே தாங்க முடியாது!

G.Ragavan said...

ஆகா....பிரமாதமா இருக்கே....சூப்பரப்பு....

இலவசக்கொத்தனார் said...

யாரோ என்னமோ போட்டிப் பதிவுன்னு சொன்னாங்க. வந்தேன். இங்க வந்து பாத்தா கவுஜ. அச்சூ! அச்சூ! அட இந்த அலர்ஜி வேற.

படம் நல்லாத்தான் இருந்துது! :)

Thekkikattan|தெகா said...

சந்தோஷ், அடுத்த பரிமாணத்துக்குள்ளே பிரவேசிக்கத்தான் இத்துனைப் பாடு. எல்லம் இ.கொவோட ஆசீர்வாதத்தோடத்தான்.

ஒரே தூசியமா சிலர் பேர் இந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்சா... அதுவும் கவுஜான்ன... :-)

VSK said...

அருமையான படத்தில் எழுந்த அபூர்வக் கவிதை!
மிகவும் ரசித்தேன்!

துளசி கோபால் said...

நம்ம வூட்டு நாய், குழாயிலே தண்ணி குடிக்கிற போட்டோ இருக்கே!

எந்த ஆல்பம்னு தெரியலை. கண்டு பிடிச்சால் போடறேன்.

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

//நம்ம வூட்டு நாய், குழாயிலே தண்ணி குடிக்கிற போட்டோ இருக்கே!

எந்த ஆல்பம்னு தெரியலை. கண்டு பிடிச்சால் போடறேன். //

கண்டுபிடிச்சு இது மாதிரி நீங்களும் ஒரு கவுஜ போடணும் சரியா...
:-)

இங்கே என்ன ஆச்சிரியமுன்ன நாமலே அந்த டைப் குழாய்லெ தண்ணி குடிக்கிறது கஷ்டம், ஒரு கையால் தூக்கி பிடிச்சுகிட்டு இன்னொரு கையால் குடிக்கணும் இந்த மாடு ரொம்ப பக்காவ செய்றத பார்த்தவுடன் ஒரு அட அப்புறம் க்ளிக்.

Thekkikattan|தெகா said...

பொன்ஸூ,

//கவிதையில் இறங்கியாச்சா?!! கலக்குங்க//

வேற என்னங்க பண்றது, குமிழ் குமிழ சிந்தனை பட் பட்டுன்னு சிதறி விழுதுங்க...hehehe, அதான் இப்படி... அதான் அப்பபொ உங்களுக்கும் வருதே படிச்சுருக்கினே...

ரவி said...

நீங்க படம் எடுத்து பத்துவருஷம் ஆகுதுன்னு சொல்லிட்டீங்க...அதனால லேட்டஸ்ட் மாற்றம் என்ன அப்படீங்கறதை நான் சொல்லுறேன்...

பசு டாஸ்மார்க்குல் சரக்கு வாங்கி சாப்பிடுது...

அதனால தான் பாலை குடிச்சா நமக்கு கி
றுகிறுன்னு வருது...

Thekkikattan|தெகா said...

ரவி,

//பசு டாஸ்மார்க்குல் சரக்கு வாங்கி சாப்பிடுது...

அதனால தான் பாலை குடிச்சா நமக்கு கி
றுகிறுன்னு வருது... // :-))

வாங்க வாங்க புதுசா நம்ம வீட்டுப் பக்கம் வந்து கலாய்க்கிறீங்க...

அது நல்ல ட்ராக்கிலதான் போகுதுங்கிறத எனக்கு கண்டுப் பிடிச்சு சொன்னதற்கு நன்றி :-))

அப்புறம் இது கூட கேள்விப் பட்டேன், அரசியல் வாதீங்க இந்த மாடுங்கள ட்ரெயின் பண்ணி எதிராளி ஆளுங்க போஸ்டர திங்க வுடுறாங்கன்னு, அப்படியா?

கொஞ்சம் அப்படியெ அதையும் பார்த்து சொல்லிடுங்க... ;-))

Thekkikattan|தெகா said...

சிபி,

//பெரிய ஆளுதாம்யா நீர்!
நாங்கள்ளாம் வெறும் குவாட்டருக்கு பண்ணுற அலம்பலே தாங்க முடியாது//

ஓ, அந்த தண்ணிய சொல்லுறீர, அது பீப்பாய் பீப்பாய, ட்யூப் ட்யூபா... அதுக்கு மேல நான் சொன்ன அப்புறம் போலிஸ வுட்டு கேக்கச் சொல்லுவீகங்கிறதல நாம அடுத்த வருஷம் தொழில் முறையில பேசிக்குவோம் ;-))

இயற்கை நேசி|Oruni said...

நாகை சிவா,

//பசு மட்டும் இல்லை, நாய், பூனை, அணில், குரங்கு மற்ற விலங்குகளின் பரிணாம ஏற்றத்தை பலமுறை நின்று ரசித்து இருக்கின்றேன். இனியும் அப்படி தான்....//


அப்படியே என்னென்ன பார்த்தீருன்னு எங்களொட கொஞ்சம் பகிர்ந்துகிறதுதானே...

நாங்களும் தெரிஞ்சுகுடுறமையா, எங்க ஒவ்வொரு மிருகம என்ன பண்ணிச்சுன்னு எந்த ஊருல அப்படின்னு சொல்லுங்க, நான் சுடானும்மு ரெண்டு பொரிடோ அனுப்பி வைக்கிறேன்... :-))

Thekkikattan|தெகா said...

:-) வாங்க ராகவன்,

இதெல்லாம் கூட படிப்பீங்களா... சரி சரி அடிக்கடி இங்க வந்து படிச்சுட்டு "சூப்பரப்பு" ;-) சொல்லிட்டு போகணும்.

Thekkikattan|தெகா said...

இ.கொ,

வுமது நட்பை எப்படி பாரட்டுறதுன்னே தெரியலையே, இப்படி தும்மி கிட்டே வந்து என் கவுஜ தூறல்லெ நனைஞ்சதுமில்லமே அதில வேற நின்னுகிட்டு பின்னுட்டம் வேற...
hairs are in poikiloerection :-)))

Thekkikattan|தெகா said...

எஸ்.கே அய்யா,

நீங்களும் இந்த பக்கம வந்திருக்கிறத நினைச்ச ரொம்ப சந்தோஷம இருக்கு. வாழ்துகளை அன்புடன் ஏற்றுகொள்ளும், தெகா.

ILA (a) இளா said...

துளசி, SK, இ.கொ, ஜி.ரா அப்படின்னு பெரிய மக்களெல்லாம் வந்து பின்னூட்டம் போடும்போது ஏழை விவசாயி நான் என்னான்னு சொல்ல? தமிழ்நாடுலதான் மனுஷந்தான் தண்ணிக்கு அல்லாடுறோமுன்னா வட இந்தியாவுல மாடும் தண்ணிக்கு அல்லாடுது போல இருக்கு.

கைப்புள்ள said...

படம், கவிதை இரண்டுமே அருமை.

Thekkikattan|தெகா said...

வாங்க "கோவை" விவசாயி,

//துளசி, SK, இ.கொ, ஜி.ரா அப்படின்னு பெரிய மக்களெல்லாம் வந்து பின்னூட்டம் போடும்போது ஏழை விவசாயி நான் என்னான்னு சொல்ல? //

இப்பாவது என்னோட ஒரு பதிவு இந்த "பாவப்பட்ட" தமிழகத்து விவசாயி கண்ணுக்கு பட்டதே அப்படின்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷம இருக்குங்க.

//தமிழ்நாடுலதான் மனுஷந்தான் தண்ணிக்கு அல்லாடுறோமுன்னா வட இந்தியாவுல மாடும் தண்ணிக்கு அல்லாடுது போல இருக்கு. //

நம்மூரு மாடு, ஆடுங்க மற்றும் கழுதப் பசங்க ஒரு படி பரிணாம ஏணியில மேலேயே போயிட்டானுங்க அப்படின்னு சொல்லலாம், சுவர் ஒட்டிங்கள (போஸ்டர்ஸ்) எல்லாம் கஷ்ட மில்லாம சுத்தம் பண்ணி அடுத்த ஆளுங்க புதுச ஒட்டுறதுக்கு ஏற்பாடு பண்ணி கொடுதுருறுதுங்க...

அதுனால அங்கேயும் ஒரு "சிம்பாயோசிஸ்" நடக்குது பாருங்க :-)) அப்ப "பரிணாமத் தியரி" உண்மைதானே...?

Thekkikattan|தெகா said...

கைப்புள்ள,

//படம், கவிதை இரண்டுமே அருமை. //

என்னங்க முதல் தடவைய வீடு மிதிச்சதாலே கொஞ்சம் சங்கடப் பட்ட மாதிரி கண்ணாடியை வேற நெர்வஸ்லெ அட்சீஸ்ட் பண்ணிகிறியெ, அப்புறம் அலுத்துப் போய் சொன்ன மாதிரி... ரெண்டு நல்லாத்தான் ஓய் இருக்கின்னு சொல்லிட்டீங்க...

உங்க சங்கம் சார்ப "கலாக்கியாலாஜி" கோர்ஸ்வோட சீப்ங்கிற முறையிலே காமிச்சுருக்க வேண்டாம்... ;-)) (லூசுல விடுங்க இந்த லூச)

Related Posts with Thumbnails