Monday, July 23, 2007

அபோகலிப்டோ என் பார்வையில்: Apocalypto...!


மெல் க்ப்சனின் படமென்றாலே கொஞ்சம் திரையைத் தாண்டியும் இரத்த வாசம் கசிந்து நம் நாசிகளை வருடிச் செல்லும் என்பதற்கேற்ப அவரின் முன்னய படங்களான Brave Heart and Passion of the Christ போன்றவைகளை பார்த்திருந்தால் தெரியும். அது போலவே இந்த Apocalyptoவும் அந்த தாக்கத்தை விட்டுச் செல்ல தவறவில்லை.

இந்த படத்தை இப்பொழுதுதான் ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு டி.வி.டியில் எடுத்துப் பார்த்தோம். அன்று இரவு தூக்கத்தை தொலைத்ததை மறுப்பதற்கில்லை. இருந்தாலும், மறுநாளும் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது. பார்த்தும் வைத்தேன்.

இந்தப் படத்தைப் பற்றிய முழுமையான விமர்சனம் நம்ம கப்பியார் இங்கு கொடுத்திருக்கிறார் கதைக்கு அங்கு சென்று படியுங்கள்.

ஆனால் நான் பேசப் போகும் விசயம் வேறு. இந்தப் படத்தின் கதைக் கரு கொஞ்சம் சர்ச்சைக்குறியது. எகிப்தின் மம்மிகளைப் போன்று தோண்டி எடுக்க எடுக்க கதையாக வரலாற்றை எழுதுவதற்கும் (மேலும் மம்மிகளை தொடர்ந்து பல சுவற்றில் எழுதி வைக்கப்பட்டுள்ள படக் குறியீடுகளை கொண்டும்), இந்த தென் அமெரிக்காவில் இருந்து வந்த மாயா இன நாகரீகத்துக்கு அடையளமாக சில எஞ்சி நிற்கும் கட்டடங்கள், இன்னமும் அகழ்வாரயச்சியில் தோண்டி அதுவும் வனப்பகுதிகளில் எடுத்த சில விசயங்களைக் கொண்டும் இப்படி ஒரு படம் எடுத்திருப்பது இன்னும் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதனைப் பொருத்து ஆச்சர்யப் படுவதற்கு ஒன்று மில்லைதான்.

இதில் வனத்தினுள் வாழும் மக்கள் எப்படி அங்கு கிடைக்கும் உணவுகளைக் கொண்டு நாகரீகமாக வாழக் கற்றுக் கொண்டார்கள் என்பதிலிருந்து தொடங்கி, வெட்ட வெளியில் முன்னமே அதனை விட நாகரீகமடைந்தாகவும், கட்டடக் கலையிலும் மற்றும் அடிமைகளை கையாண்டு எப்படி தனது நாகரீகத்தை உச்சத்திற்கு எடுத்துச் சென்று வாழ்பவர்கள், அவர்களாகவே அவர்களது நாகரீகம் அழிந்து நாசமாவததுற்கு காரணமாகிறார்கள் என்பதனை சற்றே மிகைப் படுத்தப் பட்ட காட்சி அமைப்புகளுடன், காட்டு மிராண்டிகளாக ஒரு தொன்மையான நாகரீகம் காட்டப் படுகிறது deliberately right from the beginning.

காட்சியின் இறுதி கட்டத்தில் தான் எனக்கு, ஏன் அந்த மாதிரியான ஒரு கதையமைப்பே தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதனைப் பொருத்து கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. மெல் க்ப்சனின் பக்தி மாலை, என்னாடா நரி அம்மணமாக போகிறது என்று யோசித்துக் கொண்டிருந்த எனக்கு பிடிபட்டது என்னான்னா - காட்டு வாசி ஹீரோவை நாகரீமடைந்த மாயா வீரர்கள் துரத்திப் பிடித்து வெட்டிக் கொல்ல எத்தனிக்கும் பொழுது வருகிறது நமது "சொர்க்கத்திற்கு ஆள் சேர்க்கும் படை" கப்பல்கள் கட்டிக்கொண்டு.

அந்த காட்சி அமைப்பின் மூலமாக நான் புரிந்து கொண்டது, மெல் க்ப்சனின் பார்வையில் இந்த மாயா இனமே ஒரு காட்டு மிராண்டிக் கூட்டமாகவும், இந்த ஸ்பானியார்ட்ஸ் மக்களும் அவர்களின் மிஷனின் மூலமாகத்தான் எஞ்சியிருந்த மக்களை அறிவூட்டி, பண்பாடு புகுத்தி, உண்மையான நாகரீகம் கத்துக் கொடுக்கிறவங்க அப்படிங்கிற மாதிரியும் படம் முழுக்க ரத்தமும், சதையுமா காமிச்சு, கடைசியில் கடவுளின் தூதர்களை அனுப்பிச்ச மாதிரி ஒரு diffuser lense போட்டு காமிச்சதெ வைச்சுப் பார்த்தா அட மெல் க்ப்சனா கொக்காங்கிற மாதிரி இருந்துச்சு (இதே மாதிரியே இங்க ஒரு வரலாற்றுப் பேராசிரியர் உணர்ந்திருக்கிறார் பாருங்க.... ).

வேற யாராவது அப்படி இந்தப் படம் பார்த்து முடிஞ்சவுடன் இப்படி நினைக்கத் தோணுச்சா? இல்லை எனக்குத்தான் இப்படியெல்லாம் அஷ்ட கோனலா எல்லாம் தெரியுதா?










பி.கு: இது தொடர்பாக நம்ம "நோஷனல் ஜியோக்ரஃபி' என்ன நினைக்கிறது என்பதனை இங்கு பதிந்து வைத்திருக்கிறேன் - National Geography Vs Mel's Apocalypto...!

54 comments:

Unknown said...

தெகா ஏற்கனவே தண்ணியடித்து விட்டு வண்டி ஓட்டியது அமெரிக்க போலீஸை திட்டியது என தன் இனப் பற்றைக்காட்டிய கிப்ஸனுக்கு இதெல்லாம் ஒன்னுமே இல்ல அதோட மட்டும் இல்ல ஆச்திரேலியாவிலயும் ஆள் தன்னோட "மதத்தை " பரப்புகிறாராம் ஏன்னா சொந்த ஊரு சொர்க்கம் தானே

Unknown said...

தெகா மெல் கிப்ஸனின் எல்லா படங்களும் குறிப்பாய் அவர் இயக்கத்தில் வந்த ப்ரேவ் ஹார்ட் பேஸன் ஆப் க்ரைஸ்ட் போன்ற இந்த அபோகலிப்டிகா வரைக்கும் கதாநாயகன் கடேசியில் கையாலாகாதவனாய் கட்டிவைத்து மரணதண்டனைக்கு உள்ளாக்கப் படுபவனாய் காட்டப் படுகிறது?. அதோடு மட்டும் இல்லை கதாநாயகன் இறந்து போவது போல் காட்டுவது ( எல்லா படங்களும் கதாநாயகன் காட்டுமிராண்டி கும்பல்) வெற்றி அடையாதது போல் காட்டப் படுவது கொஞ்சம் உறுத்தலாய் இல்லை? அதாவது நாகரீகம் கொண்ட கும்பல் வெற்றி பெருவது போல?
பேட்ரியாட் பார்த்தீர்களா? அதிலும் அப்படியே

Thekkikattan|தெகா said...

ஹும், நல்ல கேள்வியாத்தான் கேட்டு வைச்சுருக்கீங்க. எனக்கு தெரிஞ்ச மட்டும் சொல்றேன்.

இந்த மெல்' வந்து கொஞ்சம் மதச் சார்பாக ரொம்பவே பக்தி மானாக இருப்பதனைப் போன்ற தோற்றத்தை வழங்கி வருகிறார். வயசாகிக் கொண்டு வருகிறாத என்ன, சொர்க்கத்தில் துண்டு போட்டு இடம் பிடித்துக் கொள்ள இப்பவே :-).

இருந்தாலும், நல்லா நடிப்பார் அதில் ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்ப இங்க யாரும் வந்து உங்களின் பார்வைக்கு பதில் சொல்லலைன்னா நீங்களே ஏன் அப்படி நினைக்கிறீங்கன்னு சொல்லிப்புடணும்.

சிவபாலன் said...

தெகா

படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் விமர்சனங்களும் உங்களுடைய பார்வையும் படம் பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது.

ilavanji said...

தெகா,

எனக்கு அப்படி தோனலைங்க!

வலிமையுள்ள மக்களின் நாகரீகம் எப்படி வலிமையற்ற மக்களின் நாகரீகத்தினை அழித்தொழிக்கிறது என்பதுதான் கதை. ஒரே வரியில் சொல்வதென்றால் "கலாச்சார படையெடுப்பு!"

கடைசி காட்சியில் வருவது, கதாநாயகனின் காட்டுக்கும்பலை விட நாகரிகமான வலிமையுடைய நாகா கும்பல், அவர்களை விட வலிமையுடைய கடல்கடந்து வரும் அன்னியரால் எப்படி அழித்தொழிக்கப் பட்டிருக்கும் என்ற குறியீடாக உணர்த்துவது.

கடைசியாக மனைவி அவர்களிடம் போவோமா எனக்கேட்க கதாநாயகன் மறுத்து காட்டினூடாக குடும்பத்துடன் சென்று மறைவதாக காட்டுவது அவன் அவனது வாழ்க்கைமுறையை அன்னியரமிருந்து காப்பாற்றவேயென காட்டப்பட்டதாக எனக்குப்பட்டது.

ஒருவரின் நியாயம் மற்றொருவருக்கு அநியாயம்! அடிமைகளாக கூட்டிவந்தவர்களது தலையை வெட்டி அந்த குருதியை தமது குழந்தைகள் நல்லபடியாக இருக்கவேனுமென வேண்டிக்கொண்டு அவர்களுக்கு தாய்மார்கள் பூசி விடுவது! இந்த ஒரு காட்சி போதும்! அந்த படத்தின் கதையை விளக்க!

இனப்பற்று, கடவுள் பரப்பு இயக்கம்.. இதெல்லாம் விட்டுடுங்க. கண்மூடி சில நேரம் இந்த படம் கொடுக்கும் பாதிப்பில் மனித நாகரீகங்கள் என்பது எப்படியெல்லாம் மாறி மாறி வந்திருக்குமென கற்பனை செய்து பாருங்கள். நாமெல்லாம் எந்த வாழ்க்கை முறையிலிருந்து மாறி எந்த வாழ்க்கை முறையை இப்பொது கைக்கொண்டிருக்கிறோமென்பது கூட புலப்படும்! :)

Thekkikattan|தெகா said...

இளவஞ்சி,

இதுதான் நானும் எதிர்பார்த்தேன். முதலில் மிக்க நன்றி நீங்கள் இங்க வந்து தங்களின் பார்வையை பகிர்ந்து கொண்டமைக்கு. கொஞ்சம் கேள்விகள் மிச்சமிருக்கிறது, அதனையும் தீர்த்து வைத்துவிடுங்கள்.

வலிமையுள்ள மக்களின் நாகரீகம் எப்படி வலிமையற்ற மக்களின் நாகரீகத்தினை அழித்தொழிக்கிறது என்பதுதான் கதை. ஒரே வரியில் சொல்வதென்றால் "கலாச்சார படையெடுப்பு!" //

அது தான் பரிணாம வரலாறு என்பது நம் யாவரும் அறிந்ததுதானே. இருப்பினும் இவ் பழம் பெரும் நாகரிகங்கள் சம காலத்தில் வாழ நேரிட்டு, இந்த வலிமையுள்ள நாகரீகம் துப்பாக்கிகளும், நன்கு பண்பூற்றமிக்க சூழ்ச்சிகளும், குள்ள நரித்தனங்களையும் கொண்டு ஒரு அமைதியை விரும்பும் கூட்டத்தை வெற்றிக் கொள்ள நேர்ந்து அதற்கு பக்க பலமாக தன் கண்டுபிடித்த அச்சு எழுத்துக்கள் மூலமாக எதிர் மாறான கற்பனைக் கதைகளை உண்மைகளாக புனைந்திருந்தால், நமக்கும் கிடைக்கும் எச்சம் என்ன?

அவர்களே பிள்ளையையும் கிள்ளி விட்டுவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கதைதானே?

இந்தியாவுக்குள் வந்தவர்கள் வாணிபம் நடத்தத்தான் அங்கு இருக்கும் சிறு, சிறு கலாச்சார குளறுபடிகளைக் கொண்டு பின்பொரு சமயத்தில் குடித்தனம் நடத்த வில்லையா. என்ன ஒரே ஒரு வித்தியாசம், இங்கு வட அமெரிக்காவில் செவ்விந்தியர்களுக்கு நடந்த கொடுமை நமக்கு அந்தளவில் நடைபெற வில்லை (கொன்று குவித்தது). இல்லையென்றால் இந்தியாவின் அன்மைய வரலாறு அவர்கள் எழுதிதான் நமக்கு தெரிய வந்திருக்கும்.

இரண்டாவது இந்த "நாகரீக படையெடுப்புக்களை" இப்படியும் காண முடியும். புது விதமான எந்திர யுத்திகளைக் கொண்டு படையெடுக்கும் ஓர் நாகரீகம், சற்றே தொழிற் நுட்பத்தில் பின் தங்கியிருக்கும் ஓர் நாகரீகத்தை சூரசம்ஹாரம் பண்ணிய பிறகு அந்த பின் தங்கிய நாகரீகம் ஒரு காட்டு மிராண்டிக் கூட்டம் என்று தன்னிலை படித்தி படித்துக் கொள்ளாலமில்லையா, தானே எழுதிய வரலாறுகளின் மூலமாக, இல்லையா இளவஞ்சி? இதுதான் நடந்தது செவ்விந்தியர்கள் கூட்டத்தை கண்டபொழுது ஐரோப்பியர்களுக்கு...

இல்லை புரியுது நீங்க சொல்ல வருவது ஒவ்வொரு 3000 அல்லது அதற்கு மேலும் வரலாற்றில் நடக்கக் கூடிய நாகரீக படையெடுப்புகள் அதனை தொடர்ந்த மாற்றங்கள். நான் இங்கே கூறுவது ஒரு குறிப்பிட்ட இனத்தவர் எப்படி தங்களுக்கு வேண்டியது போல தான் செய்யும் தவறுகளை justify பண்ணி புத்தகங்கள் எழுதி கொள்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் :-))

மீண்டும் வாங்க இளவஞ்சி...

Anonymous said...

தெகா,

மீண்டும் வந்தேன்! :)

தேசப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று இதெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தேசத்துரோகிகளாக கொஞ்சநேரம் பேசலாமா? :)

கொஞ்சநாளைக்கு முன்பு கூகிளில் ஒரு டாக்குமெண்டரி பார்த்தேன். பீகாரில் இருக்கும் சாதிக்கொடுமையை பற்றியது. பிராமணர்கள் உட்பட (மட்டுமல்ல!) நிலச்சுவாண்களாக இருக்கும் மேல் சாதியினர் எப்படி கொத்தடிமைகளாக கீழ்சாதியினரை அடிமைப்படுத்தி சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகளுக்கு பிறகும் உழைப்பை உயிரை உறிஞ்சுகிறார்கள் என்பது! பார்க்கவே கொடுமையாக இருந்தது. அவர்கள் எந்தக்காலத்திலும் அங்கே நிலம் வாங்க முடியாது! ஊரைவிட்டு ஓடிப்போகத்தான் வேண்டும். உள்ளூரிலே புரட்சிபேசி வாழ முடியாது. எதிர்த்து குரல் கொடுத்தால் உயிருக்கு உத்திரவாதமில்லை! சம்பளமெல்லாம் கிடையாது. மூனு வேளையும் நொய்க்கஞ்சி தான் நிதர்சனம். இவர்களை வாய்திறவாமல் வைக்கவும்,அடக்கி ஒடுக்கவும், மீறி எதிர்த்தால் உயிரை எடுக்கவும் கூலிப்படைகள் உண்டு! அதிலுல்லவர்கள் எல்லா சத்திரியர்களாம். மேல் சாதிக்கும் கீழ் சாதிக்கும் இடைப்பட்டவர்கள்.

இதையெல்லாம் பார்த்து நொந்துகொண்டிருந்த போதுதான் க்ளைமாக்சு! அடுத்தவேளை சோற்றுக்கே வழியில்லாமல் எஜமானன் ஊத்தும் நொய்க்கஞ்சினை குடித்துக்கொண்டு அடிமைகளாக வாழும் மக்கள் செய்யறது என்ன தெரியுமா? அவர்களுக்கும் கீழாக ஒரு சாதியை வைச்சு ஆண்டு வருவது! அவர்களுடைய வேலை வயல்களில் எலி பிடிப்பது. எலி பிடிப்பதற்கான கூலி பிடிச்ச எலியை அவங்களே சமைச்சு திங்கறதுக்கு உரிமை கொடுக்கறதாம்! :(

மனிதன் எந்தக்காலத்திலும் எந்தவிதமான வாழ்க்கையிலும் தமக்குக் கீழாக ஒருத்தனை அழுத்தி வாழவே விரும்புகிறான்! அதுக்கு இந்த சாதி அமைப்பு மிகச்சரியான அமைப்பாக இருப்பதால் இன்னமும் புடிச்சுக்கிட்டு தொங்கறோம்!

உலகத்தில் உண்மை என்று எதனைச் சொல்வீர்கள்? கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேப்பதும் பொய்! துல்லியமாக எடுக்கப்பட்ட புகைப்படம்கூட உண்மையைச்சொல்லாது. அது பார்ப்பவரின் அறிவைப்பொறுத்தும் பார்வையைப்பொருத்தும் தான் செய்தியினை பரிமாறுகிறது! கலைஞரின் நள்ளிரவுக்கைது கட்சிக்காரர்களுக்கு "அய்யோ! இது என்ன அநியாயம்!" அம்மா கட்சிகாரவுகளுக்கு "நல்லா வோணும்! எங்கம்மவை செயிலுல போட்டல்ல?!" இதில் எது செய்தி சொல்லிய உண்மை? வாய்ப்புக் கிடைத்தால் அனைவருமே வரலாற்றை ஒருபக்கச்சார்பாக எழுதறதுதான்! இந்தியாவுக்குள் விற்கும் இந்திய வரைபடத்தில் காஷ்மீர் ஏன் முழுசா இருக்கு? BBC செய்திகளில் ஏன் இந்தியா தலையான காஷ்மீரை பாதியா வெட்டிட்டு காட்டறாங்க? எது உண்மை? BJP ஏன் வரலாற்றுபாட புத்தகங்களில் தகவல்களை மாற்றி எழுத முனைந்தது? காவிரிப்பிரச்சனையின் போது நம் ஊடகங்கள் ஏன் கர்நாடகா மொத்தத்தையும் "கன்னட வெறியர்கள்" என விளிக்கின்றன?

வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி உணர்வுபூர்வமாக கதை, பாட்டு, படமெடுத்து மகிழ்கிறோம். இதே நிகழ்ச்சியை வெள்ளைக்காரன் எப்படி எழுதியிருப்பான்? "During that time we hanged a king and brought his land under our control" என்று எழுதியிருப்பானோ? அவனளவில் ஒரு அரசனை தூக்கிலிட்டு அவன் நாட்டை ஆட்சிக்குள் கொண்டுவந்தது வரலாறு. நம்மளவில் கட்டபொம்மனின் வீரமிக்க போராட்ட வாழ்க்கை வரலாறு. இதில் எது உண்மை எது பொய்?

இங்கே ஒரு அருங்காட்சியகத்தில் ஒரு ராணுவ அதிகாரியுடைய சீருடையையும் அவருக்கு கொடுக்கப்பட்ட மெடலையும் வைத்திருந்தார்கள். மெடல் எதுக்கு தெரியுமா? அவர் இண்டியாவில் ஆன்சைட் பெபுடேஷன் கர்னலாக இருந்தபோது சிப்பாய்கள்
அடங்காப்பிடாரிகளாக செயல்பட்டு சிப்பாய்க்கலகம் உண்டாக்கிய பொழுது மிகச்சிறப்பாக கடுமையாகச் செயல்பட்டு அதனை அடக்கி "நாட்டுக்காக" பற்றுடன் உழைத்ததற்காக கொடுக்கப்பட்டதாம் அந்த பதக்கம்! அதைப்பார்க்கும்பொழுது நமக்கு ரத்தம் கொதிக்குமா இல்லையா? பக்கத்துல நின்னு பார்த்துக்கிட்டு இருந்த வெள்ளைக்கார துரை அதை பெருமையா படிச்சுக்கிட்டு இருந்தான்! எப்படி? நாம் எப்படி சிப்பாய்க்கலகம் மூலம் இந்திய சுதந்திரப்போராட்டத்துக்கு அடியெடுத்து வைச்சோம்னு பெருமையா படிக்கறோம்? அப்படி!

செவ்விந்தியக் கூட்டங்களை கொன்று குவித்து நாட்டைப்பிடித்து பிறகு காலனியாதிக்க துரைமாருகிட்ட இருந்து நாட்டை போராடி மீட்டதற்காக ஜீலை 4க்கு வெடிவைச்சி கொண்டாடறப்ப செவ்விந்தியர்களுக்கு எப்படி இருக்கும்? இப்படியெல்லாம் மாத்தி யோசிச்சித்தான் என் தலை இப்படி ஆயிருச்சி :)

// தான் செய்யும் தவறுகளை justify பண்ணி புத்தகங்கள் எழுதி கொள்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் :-)) //

இமயம் வென்றான்! கடாரம் கொண்டான் கதைகளையும் நாம் இப்படித்தான் எழுதியிருப்போமோ! :)))

Thekkikattan|தெகா said...

இளவஞ்சி,

நீங்க போட்ட போடுல கை, கால் நடுங்கி உங்க பின்னூட்டத்த செலக்ட் பண்ணிட்டு ரிஜெக்ட் பண்ணிட்டேன் :D , திரும்பவும் ரிவர்ஸ் அடிச்சி காபி பண்ணி போடுற மாதிரி ஆயிப் பூச்சு கதை ;-))

சிவபாலன் said...

இளவஞ்சி,

Excellent Comment! Great!

Thekkikattan|தெகா said...

சிவா,

இன்னும் நீங்க பார்க்கவில்லையா. அவசியம் பாருங்க. ஆமாம், இளவஞ்சிக்கு என்ன பதில் வைச்சிருக்கோம் ;-)

ஸ்ரீ சரவணகுமார் said...

தெகா,

எனக்கும் படம் பார்த்தவுடன் இந்த எண்ணம் தோன்றியது.
கடைசியில் இவர்கள் புத்தியைக் காட்டி விட்டார்களே என்று

எனக்கு ஒரு சந்தேகம்
கிறித்துவ மதம் தோன்றியது? எப்போது மயன் நாகரீகம் இருந்தது எப்போது?

நன்றி

Thekkikattan|தெகா said...

ஸ்ரீசரண்,

கிடைத்த தகவல்களைக் கொண்டு இதோ இங்கே இருக்கிறது, சில வரலாற்று குறிப்புகள்...

இது இந்த வலைத் தளத்தில் இருந்து அங்கும் இங்குமாக சேகரித்து இங்கே கொண்டுவரப்பட்டது...

...About 1,750 years ago, ancient Maya reached what we call their Classical Period (see map). They raised buildings and constructions in the middle of the jungle that today amaze us. They fed their people with a stable system of food production, based on the cultivation of the maize (specially adverse conditions of their habitat notwithstanding), from the Yucatᮠto what is today known as Honduras.

With primitive instruments they devised a calendar system more precise than the Julian calendar used by the Romans, even more precise than the corrected Gregorian calendar (the Gregorian correction took place in the XVI Century, many years after the last great ceremonial center of the Maya was abandoned). Their numeric system, based on the number 20 (they surely counted using fingers and toes), which included the notion of positional value, handled concepts that no other culture, except the Hindu, managed to find.

The Maya discovered the vital concept of zero at least 300 years before the Hindu did so.

After that, forced by causes we don't yet clearly understand, between the years 900 and 1000 the cultural push slowed to almost a stop. Their civilization did not vanish, but it never reached the heights attained in the past. The ritual of erecting stone estelas to commemorate significant dates, with the so called "long count" of the days, fell into disuse. The ceremonial centers were abandoned, and the creators went away.

And then they arrived, the whites from the East.

"Just because of the crazy times, because of the crazy priests, is it that sadness overtook us, that 'Christianity' overcame us. Because the 'very Christians' came here with the true God, but that was the beginning of our misery, the beginning of the tribute... the cause of the hidden discord to come out, the beginning of the fighting with firearms, the beginning of the outrages... Oh! Let us grieve, because they arrived!"

"They [the Spanish] taught us to fear; and they came to fade the flowers. For their flowers to live, they damaged and sucked dry the flowers of the others... There was no High Knowledge, nor Sacred Language, neither Divine Teachings in the substitutes of the gods that came here. To castrate the Sun! That is what the foreigners came here for. And the sons of their sons stayed here, among the people, and they receive their bitterness" ....

நாடோடி said...

இந்த படத்தை நான் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன் பார்த்துவிட்டேன். எனக்கு அவ்வளவாக திரைவிமர்சனம் எழுததெரியாதாலும் ,நேரமின்மையாலும் எழுதமுடியவில்லை. மற்றபடி இது மெல்கிப்ஸன் மற்றொரு நேர்த்தியான படம் என்றே கொள்ளலாம், கடைசி காட்சியை தவிற.
படத்தில் மாயன் சமூகம் என்று சொல்லப்பட்டாலும், ஆது உண்மையில் மாயன் சமூகத்தின் எச்சமே. மாயன் சமூகம் வெளிஉலகத்துக்கு தெரியவரும் முன்பே அழிந்த இனம் நமது சிந்துசம்வெளி நாகரீகம் போல். மாயன் சமூகம் சமூக சிந்தனைகளும், அவர்களிடம் அபரிமிதமாக இருந்த தங்கங்ளும் இன்றுவரை கேள்விகுறியே..படத்தில் காட்டப்படும் அந்த கோவில் (பிடமிட் போன்ற அமைப்பு) "நிலா கோயில்" என்று அழைக்கப்பட்ட ஒன்று என்று கேள்விபட்டுள்ளேன். அங்கு நரபலிகள் நடந்ததும் உண்மையே. ஆனால் படத்தில் காட்டப்படுவதுபோல் அல்ல. இரு வீரர்களுக்கு இடையே போட்டி வைத்து தோற்பவர்கள் நரபலி இடபட்டுள்ளனர்(Like Romans Gladiator Ring Fight). உண்மையான மாயன் சமூகம் அழியும் சமயத்தில் அதிக நரபலி கொடுக்கப்பட்டுள்ளது. இது போரினால் தோற்ற வீரர்களா இருக்காலாம் என நம்பப்படுகிறது.(இந்தியாவில் 17ஆம் நூற்றாண்டுவரை நரபலி இருந்ததாக கேள்விபட்டுள்ளேன்).
படத்தில் கடைசியில் கப்பலில் வருபவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல. அது Spanish invasion என்று அழைக்கப்படும் ஒன்று. தற்போதைய பெரு நாட்டின் அன்றைய மன்னனுக்கு இவர்கள் செத்த துரோகம் இன்றளவும் மிகப்பெரிய துரோகமாக கருதப்படுகிறது.
(முடிந்தால் இதைப்பற்றி கூகுளிடம் கேளுங்கள் அது ஒரு தனிப்பெரும் கதை.)
மெல்கிப்ஸன் இங்கிலாந்துற்கு எதிரான கருத்து கொண்டவர். இவரின் Brave Heart,Patriot படங்களில் நன்றாக தெரியும்.

படத்தில் நாயகன் கடைசியில் கூறும் வாசகம் மட்டுமே சிறிது குழப்பம் ஏற்படுத்தும் கிப்ஸன் ஸ்பெயினை தூக்கிபிடிக்கிறா இல்லையா என்று. எனக்கும் இதே போன்று எண்ணம் ஏற்பட்டது. ஸ்பனிஷ் மக்களை காணும் போது. ஆனால் காட்சி அமைப்புகளும், மொழியும் இதில் மிக அருமையாக இருக்கும்.

கொண்டோடி said...

தெ.கா,
இடுகை நன்று.
படம் பார்க்கத் தொடங்கும்போதே மெல் ஏதாவது குசும்பு செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் தான் பார்த்தேன். ஆனால் எதிர்பார்த்தது போல் எதுவும் இருந்ததாக படம் பார்த்தபோது தெரியவில்லை. ஐரோப்பியரின் வருகையை நாயகன் விரும்பவில்லை என்பதாகவே எனக்கு விளங்கியது. நாங்கள் அவர்களிடம் போவோமா என்று மனைவி கேட்கும்போது அவனது பதிலும் பார்வையும், 'இவர்கள் எங்களை அழிக்க வந்தவர்கள்' என்பது போன்று எனக்குத் தோன்றியது. மெல் எதைச் சொல்ல வந்தாரென்று விளங்கவில்லை.

இறுதிக்காட்சியில், நாயகனைத் துரத்திவரும் இருவரும் அவனை விட்டுவிட்டு கடற்கரையில் தரையிறங்கும் கலங்களை நோக்கிச் செல்வர். எதற்காக?
ஐரோப்பியரை எதிர்க்கவா? மண்டியிடவா?

இவரின் இறுதி இரண்டு படங்களுமே, ஒருவனின் வாழ்க்கையில் சிலமணி நேரங்களை மட்டும் சித்தரிப்பவை. விலாவாரியான கதையிழுப்பு இல்லை.
ஒருவருக்கும் புரியாத மொழியிலேயே முழுப்படத்தையும் எடுத்து துணைத்தலைப்புக்களின் உதவியோடு படமோட்டுவது
ஒரு சிறப்பு. இப்படியான படங்களுக்கு மொழி புரியாமை என்பது குறையாகத் தெரியாத அளவுக்கு காட்சிப்படுத்தல் அருமை.

Thekkikattan|தெகா said...

இளவஞ்சி,

தேசப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று இதெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தேசத்துரோகிகளாக கொஞ்சநேரம் பேசலாமா? :) //

தேசத்துரோகிகளாக... :-))) அப்ப, பேசினாவே முத்திரை குத்திடுறாங்கன்னு சொல்லுறீங்களா...

நீங்க பேசின உள்ளூர் விசயங்களிலிருந்து அயல் நாட்டு விசயங்கள் வரை சொன்னவை அனைத்தும் nest, sub-nest ஒண்ணுக்குள் இன்னொன்னை அடுக்கி வைப்பதனைப் போன்றுதான் இந்த "ஆதிக்கங்கள்" நிகழுகின்றன வரலாற்றில். இன்றைய நிகழ்வுதானே நாளைய வரலாறாக பரிணமிக்கிறது, இல்லையா?

இருந்தாலும் எனக்கு சின்னதா ஒரு ஆசை, இப்பொழுது ஒரு குறிப்பிட்ட இனம் கொஞ்சம் பின் தங்கி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதனை அதன் போக்கிலேயே விட்டு வைத்தால் அந்த நாகரீகம் நாளை எதுவாக பரிணாம ஏணியில் இருக்கும் என்பதனை கூடவே இருந்து பார்க்கலாமில்லையா?

ஆனா, விடுவோமா இன்னிக்குன்னு Mcdonalds' நாகரீகம் தான் மூலை முடுக்கெல்லாம் விட்டேனா பார் என்று ஆதிக்கம் செலுத்த அரம்பிச்சுடுச்சே. அது அப்படியாக ஆகும் பொழுது கவலை வேண்டாம் இனிமேல் யாரும் நம்மூரில் எலி பிடித்து உண்ண வேண்டிய நிலை வராது, ஏனெனில் ரூபாய்க்கு இரண்டு கோழிக் கறி சான்விச்சுகள் கிடைக்கலாம் :-)

இருந்தாலும் உங்களின் பின்னூக்கிகள் நிறைய விசயங்களை ரொம்ப எளிமையான உதாராணங்களை கொண்டு விளக்கி இருந்தது.

ரொம்ப யோசிச்சு மண்டையில இருக்கிற ஒண்ணு, ரண்டு முடியையும் தண்ணியில அடிச்சுட்டு போயிடாம பார்த்துக்கோங்க ;-)

Thekkikattan|தெகா said...

நாடோடி,

வருகைக்கும் தங்களின் எண்ண பதிப்பிற்கும் நன்றி!

மற்றபடி இது மெல்கிப்ஸன் மற்றொரு நேர்த்தியான படம் என்றே கொள்ளலாம், கடைசி காட்சியை தவிற. //

நீங்கள் கூறியபடியே என்னை இரண்டாவது முறை பார்க்கச் சொல்லி உந்தியதும் அதே மெல் க்ப்சனின் அபார திறமைதான். உப தலைப்பில் படம் பார்க்கிறோமென்ற உணர்வே இல்லாமல் பார்த்துக் கொண்டது.

இருந்தாலும், அந்த கடைசிக் காட்சின்னு சொன்னீங்கள்ல அங்கதான், ஒரு ப்ரேக் போட்டு அட'ன்னு நிமிர்ந்து உட்கார வைச்சிருந்துச்சு.

மாயன் சமூகம் வெளிஉலகத்துக்கு தெரியவரும் முன்பே அழிந்த இனம்//

உண்மையாக இருக்கலாம், ஒரு நாகரீகம் பல அன்றைய தினத்து மாற்றங்களை சந்தித்து, மீண்டும் சந்தித்து பயணித்துக் கொண்டே வரும் பொழுது தேவையானது எஞ்சி அடுத்த தலை முறைக்கு மிஞ்சி நிற்கும் தேவையற்றது கரைந்தே போயிவிடும். இதில், அன்னிய ஆக்கிரமிப்பு இல்லாத வரையிலும் அம் மாற்றங்களின் தாக்கம் எஞ்சி இருக்கும் மக்களின் வாழ்வு முறையினை கொண்டு அறியலாம்தானே (கொஞ்ச, நஞ்ச பழக்க வழக்கங்கள்... மொழி, தொழில் நுற்பம் இத்தியாதி விசயங்கள்...).

உண்மையான மாயன் சமூகம் அழியும் சமயத்தில் அதிக நரபலி கொடுக்கப்பட்டுள்ளது. //

தற்போதைய பெரு நாட்டின் அன்றைய மன்னனுக்கு இவர்கள் செத்த துரோகம் இன்றளவும் மிகப்பெரிய துரோகமாக கருதப்படுகிறது.//

ஹும், நீங்கள் சொல்வதை கேக்கும் பொழுது இன்னமும் நிறைய இது தொடர்பான புத்தகங்கள் படிக்க வேண்டுமென ஆவலை தூண்டுகிறது. இருப்பினும், கலப்படமற்ற செய்தி கிடைப்பது எங்கே என்றும் தேடித்தான் படிக்க வேணும், இல்லையென்றால் ஒரு தவறான புரிதல்தான் எஞ்சி நிற்கும். :-) .

மீண்டும் நன்றி நாடோடி!

ilavanji said...

தெகா,

மாயன் நாகரீகத்தின் வரலாற்றை 1 மணி நேர BBC டாகுமெண்டரியாக இங்கே பார்க்கலாம்

Lost Civilizations: The Maya

ilavanji said...

// அதனை அதன் போக்கிலேயே விட்டு வைத்தால் அந்த நாகரீகம் நாளை எதுவாக பரிணாம ஏணியில் இருக்கும் என்பதனை கூடவே இருந்து பார்க்கலாமில்லையா? //

இதை படிக்கும் பொழுது பாலகுமாரனின் ஒரு கவிதை நினைவுக்கு வந்தது. முழுதாக நினைவில் இல்லை! ஆனால் அதன் கருத்தாக்கம் இதுதான்.

கடல்தாண்டி போரிட்டு
மனைவியை மீட்டுவந்த ராமன்
ராமச்சந்திர மூர்த்தியாக அருள்பாளித்தான்.

மீண்டுவந்த சீதாவும்
சீதாப் பிராட்டியானாள்

பாலம்கட்டிய குரங்குகள் மட்டும்
வரலாற்றில் குரங்குகளாகவே!

Thekkikattan|தெகா said...

சம்பந்தப்பட்ட கப்பியாருக்கும், தெகாவுக்கும் மின்னரட்டையில் நடந்த சம்பாஷனையை இங்கு இடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்...

Theka: கப்பி

Kappi: vaanga thala

Theka: வம்பில மாட்டீக்கிட்டேனே :-)

Kappi: இப்ப தான் உங்க பதிவு ஓப்பனிங் :) என்னாச்சு?

Theka: அப்படியா எனக்கு ஒரு ஆங்கில் கிடைச்சுச்சு
போட்டுத் தாக்கியாச்சு படம் பார்த்து முடிஞ்சவுடனே கை பரபரன்னு இருந்துச்சு

Kappi:

ஆகா...ரைட்டு..
என்ன ஆங்கில்? மாயன் அழிஞ்சது பத்தியா?

Theka: படிச்சுப் பாருங்க, தெரியும்

Kappi: ஓ!

Theka: நீங்க அங்க வேற இருந்திருக்கீங்க

Kappi: அங்கயா?? நான் இருந்தது ரொம்ப கீழ :)

Theka: நீங்க ஏதாவது சொல்வதற்கு இருக்கும் கொடுங்க
அவசியம், ரிஜீஸ்டர் பண்ணி வைப்போம்

Kappi: படிக்கறேன்..கண்டிப்பா எனக்கும் இந்த படம் பத்தி சில ஆங்கில் இருக்கு :))

Kappi: தல..இப்பத்தான் பதிவை படிச்சேன்..பின்னூட்டம் ஒவ்வொன்னும் பதிவு சைஸுக்கு இருக்கே...இன்னிக்கு வேட்டைதான் :)

Theka: ஆமாம் நிறைய மக்கள் படிச்சிருக்கு மாயான் நாகரீகத்தைப் பத்தின்னு தெரியுது புதுசு, புதுசா கொஞ்சம் இன்ஃபர்மேஷன் கிடைக்குது.

Kappi: எனக்கு நீங்க சொல்ற மாதிரி தோணல
மெல் கிப்சன் கடைசி காட்சியில் காமிச்சது அவனோட மத்சார்பு மட்டும் காரணமா சொல்ல முடியாது...ஏன்னா ஒரு இனம் அழியுதுன்னு கதை சொல்லும்போது அழிஞ்சதும் என்ன நடக்கும்னு ஒரு கேள்வி தொக்கி நிக்கும்..அதுக்கான தொடர்ச்சியாத்தான் எனக்கு அது தோனுச்சு...அது மட்டுமில்லாம கதாநாயகன் மணைவியோட காட்டுக்குள்ள போகறதைக் காட்டும்போது மாயனை அழிச்சு ஐரோப்பியர்களால நாகரீகம் வந்ததுன்னு சொல்ற மாதிரி இல்லயே..அவன் இனத்தை காக்க அவன் விரும்பறான்னு தானே காட்டியிருக்கான்?

Theka: ஹும், சரிதான் நீங்க சொல்றது, அதுக்குப் பின்னாடி
த மஸ்கிடோ ஐலண்ட் அப்படின்னு ஒரு படம் நம்ம
ஹரிசன் ஃபோர்டு நடிச்சி வந்தது

Kappi: ம்ம்

Theka: பாருங்க... அமெசான் காட்டுக்குள்ள என்ன நடக்கிறது இன்னிக்குன்னு பளிச்சின்னு காமிச்சுருப்பாங்க
முழுமையா நீங்க சொல்றது புரியுது.

Kappi: நீங்க சொல்றது கரெக்ட் தான்...அவர்களால தான் முக்காவாசி இனங்கள் அழிஞ்சது..அதை மறுக்கவே முடியாது

Theka: கடைசியா அப்படிச் சொன்னதான் அந்த கேள்விக்கு விடை பார்க்கிறவங்களுக்கு கிடைக்கும்.

Kappi: மாயன் மட்டுமில்ல


Kappi: சிலில மச்சுபிச்சு கட்டின இகுவாவா? பேரு மறந்துபோச்சே..அவங்க கூட இன்னைக்கு அதிகம் இல்லயே

Theka: இருந்தாலும், சின்னதா வரலாற்றில இந்த புத்தகங்களில் சிறுவர்களுக்கென எழுதும் பொழுது
எப்படி நம்ம கொலம்பஸ் வட அமெரிக்காவை கண்டுபிடிச்சதுனாலேதான் இங்க நாகரீகமில்லாம வாழ்ந்துட்டு இருந்தவங்களுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்க
ஆரம்பிச்சதுன்னு சொல்லி ஸ்கூலில் வரலாறு பாடம் நடத்துறாங்க.


Kappi: infact, அவங்க நாகரிகம் இல்லாமலே இல்ல
மாயன் உட்பட அந்த இனத்தவருக்கு அறிவியல் அறிவு இருந்ததா கட்டிடக்கலைல சிறப்பா இருந்ததா நானும் படிச்சேன்

Theka: அது மாதிரி படத்தை பார்க்கிறவங்களுக்கு அது மாதிரி ஒரு இன்ஸ்பிரேஷன் வார மாதிரி ஏன் அந்த கடைசி கட்ட கோரத்தை மட்டும் காமிக்கணும்... அதுக்கு முன்னாடி எப்படி நெறியோட ரொம்ப அட்வான்சுடா வாழ்ந்த மாதிரி எடுத்திருக்கக் கூடாது அப்படின்னு காட்டான் பாணியில ஒரு திங்கிங்
:-)

Kappi: நீங்க சொல்றது கரெக்ட்தான்..ஆனா மெல் கிப்சனும் அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்துல படிச்சு வந்தவன் தானே :))

Theka:

கரெக்ட், அதான் என் கேள்வி, சோ, பார்க்கிறவங்களுக்கு அப்பாடா இந்தா வந்துட்டாங்க இந்த ப்ளட் ஷெட்டீங்கு ஒரு தீர்வு கொடுக்க
அப்படின்னு நினைக்கிற மாதிரி... மனச் சுமையை இறக்கி வைக்கிற மாதிரி இருந்துச்சு படம் பார்த்துட்டு ஒரு ரீஃலிப் பா எனக்கே.
இப்ப புரியுதா நான் சொல்ல வராது... அந்த ஐயோரொப்பியர்களை கண்டதும்... நல்ல ட்ரஸும் கிஸ்ஸுமா அப்படித்தான் எல்லோருக்கும் தோனி இருக்கும்

Kappi: ஒரு கோணத்துல நீங்க சொல்றது கரெக்ட் தான்..அந்த கடைசி காட்சி படம் பிடிக்கப்பட்ட விதமும் அப்படித்தான் இருக்கும்....கதாநாயகனை துரத்தி வந்த இருவரும் அப்படியே அமைதியா நின்னுட மாதிரியும்
அவன் மணைவியும் அவர்களுடன் இணைவதை விரும்புவது மாதிரியுமே காட்டியிருப்பாங்க

Theka: வேற வழி இல்லாதமாதிரி... ;-)

Kappi: அங்க தான் கொஞ்சம் இடிக்குது

Theka: டபுல் திங்கிங்

Kappi: அவன் அவங்க வேண்டாம்னு சொல்லி தானே கூட்டிட்டு போறான்?

Theka: வெவரமான ஆளுங்க, இதுக்குப் போறுதான்
Media propaganda

Kappi: :)

Theka: they say what they wanted to say... becoz everything is based on speculation, with a couple of standing evidences we are writing history here...

Kappi: இதுதானே எல்லா காலத்துலயும் நடக்குது :(

Kappi: அதே தான் u dont even need evidences power irundhaale pothume

Theka: what the majority say u got to believe (the majority = money ppl) அதே தான் கப்பி அவங்க எழுதினத் தான் படிக்கிறோம். அவங்கதான் ஆராய்ச்சியிலயும் இறங்கிராங்க
இப்படி எல்லாமே...

Kappi: நான் படம் பாக்கும்போதே பின்னாடி இருந்த அம்மணி Disgustingனு குரல் விட்டுட்டேதான் படிச்சுது, antha lady mattum illa..en friendum kooda..he doesnt find it disgusting ஆனா அவங்க காட்டுமிராண்டிங்கன்னு தான் நினைச்சுட்டிருந்தான் :)


Theka: பாருங்க அதான் சொல்றேன் அந்த எபக்ட் வரணும்

Kappi: அவங்களைப் பொறுத்தவரை மாயன், செவ்விந்தியர்கள் எல்லாருமே இப்படித்தான்னு ஆயிடும்

Theka: கொமட்டிகிட்டு வரணும். இப்படியும் மக்களான்னு
ஏன், ஆப்ரிக்காவில இருந்து எப்படி கருப்பினத்தவரை கட்டி இங்க அமெரிக்கா எடுத்துட்டு வந்தாங்கன்னு தத்ரூபமாக காட்ட வேண்டியதுதானே ஆமாம்... நீங்க சொல்றதேத்தான்
இப்ப எழுதுங்க உங்க பின்னூட்டத்தை ;-D

Kappi: ஆகா :))

Theka: அட, பயப்பிடாதீங்க

Kappi: பயமென்ன தல கண்டிப்பா எழுதுவேன்....அது உங்க டைமிங்குக்கு சிரிச்சது :))

Theka: அப்படிச் சொல்லும் பொழுது கப்பிக்கு நிறைய உலக வரலாறு தெரியும் போலடைன்னு யாரும் கிட்ட வர மாட்டாங்க
:-))))

Kappi: :))))

Theka: ஹ்ஹா

Kappi: கூடவே இப்படித்தான் உருகுவேல-ன்னு நானே ஒரு கதை கிளப்பிவிடறேன் :))

Theka: ஹா ஹா :-)))) நீங்களே ஹிஸ்டரி எழுதிட வேண்டியதுதான் பணமிருந்தால் நீங்களும் ஒரு புத்தகம் எழுதி
ஒரு 1000 பேர நம்ப வைக்கலாம் :-)))

Kappi: ம்ம்..அதான் நடக்குது :(

Theka: யப்

Kappi: படத்துல இது மட்டும் குறையில்ல...பல வரலாற்று சான்றுகள் இல்லைன்னு போட்டிருக்காங்க
படத்தோட விக்கி பக்கம் பார்த்தீங்களா?

Theka: கண்டிப்பாக... நம்பறேன் இயக்குனரின் இலக்கு அந்த கொமட்ட வைக்கிறதுதான் மத்தபடி உலக வரலாற்றை எடுத்து மக்களுக்கு கல்வியூட்டுவதில் இல்லை...

Kappi: கரெக்ட்

கொமட்ட வைக்கன்னு மட்டுமே எடுத்துக்க முடியாது...ஏன்னா மெக்ஸிகோ பகுதிலயே வாழ்ந்த வேற ஒரு இனம் நரபலி கொடுப்பாங்களாமே?

Theka: எங்குதான் இல்லை கப்பி இந்த வெள்ளைக்காரங்க மாதிரி
புதுசு புதுசா மனுசனை கொல்லுறதில யாரும் அடிச்சுக்க முடியாது
இந்த மிடியீவல் டைம்ல விட்ச் ஹண்டிங் தெரியும் தானே...

Kappi:

இன்னொரு கதை படிச்சேன்...கொலம்பஸ் வரதுக்கு கொஞ்ச நாள் முன்ன இந்த பகுதிக்கு வந்த ஒருத்தர் பத்தி எங்கன்னு மறந்துபோச்சு

mm..theiryum

Theka: சொல்லுங்க

Kappi: அவன் கப்பல்ல படையோட வந்திருக்கான்...நூறு பேரோ என்னவோ தான் இவங்க ஆயிரக்கணக்குல அரசனை பார்த்ததுமே பயந்து கிறித்துவ பாதிரியார புக்கோட முன்னாடி அனுப்பிட்டான்
அவர் புக்கை தூக்கிபிடிச்சுட்டே வந்திருக்கார் அரசன் அசந்த நேரத்துல கூட வந்த வீரர்கள் அவனை கொன்னுட்டாங்களாம்.. அப்புறம் மக்களையும் அடிமை படுத்தியிருக்காங்க இது இப்பதான் சமீபத்துல படிச்சேன் மெக்ஸிக ஏரியாவில தான் தேடிப்பார்த்தா கிடைக்கும்.

Theka: ஒரு புத்தகம் இருக்கு, கப்பி, பேரு வந்து
Steel, guns and germs by Jared Diamond

Kappi: இன்னொரு முக்கியமான இழப்பு மொழிகள்...இப்ப அங்க முழுக்கு முழுக்க ஸ்பானிஷ் தான்....ஆதி மொழிகள் எதுவும் இல்லை நீங்க ஏற்கனவே சொல்லியிருக்கீங்களோ?

Theka: நீங்க சொன்னதுதான் அந்த புத்தகத்தின் அட்டைப் படமே
ஆமாம்.
டைவர்சிடி ஆஃப் எவரிதிங், கப்பி.
போதுமான கால அவகாசம் கொடுக்கிறதில்ல
ஒவ்வொரு கண்டத்தில் இருப்பவங்களுக்கும் அவர் அவர்களின் பரிணமிப்பின் படி வளர

Kappi: நல்ல பாயிண்ட்..ஆனா மனுசன் எப்பவும் அவசரக்குடுக்கை தானோ? :)

Theka: அப்படித்தான் கப்பி, யார் வரலாற்றை எழுதுவது
ஒரு தனிப்பட்ட வழுக்கைத் தலை மனிதன்
அவனுக்கு கிடைத்த எக்ஸ்போசர், வளர்ப்பு முறை, தான் சார்ந்திருக்கும் இனம், மதம் எல்லாமும் கலந்து தான் அவரின் பார்வையில் கொஞ்சம் சாய்வாக கொடுக்கிறார்.

Kappi: கண்டிப்பா...இதை யாராலும் மறுக்கவே முடியாது..நாம் எழுதற ஒரு பதிவே நீங்க சொன்னவற்றை சார்ந்திருக்கும்போது, வரலாற்றை எழுதும்போது இவற்றோட இம்பேக்ட் ரொம்பவே இருக்கும்
ரைட்டு :))

Theka: ரைட்.

Thekkikattan|தெகா said...

இளவஞ்சி,

அந்த பி.பி.சி சுட்டிக்கு ஒரு பெரிய நன்றிங்கோவ்வ்வ்...

Thekkikattan|தெகா said...

இளவஞ்சி,

அந்த டாகுமெண்டரி பார்த்த கையோட எழுதுறேன். எப்பொழுதும் போலவே ரொம்ப அருமையாக பண்ணியிருக்கிறார்கள். ஆனால், அந்த டாகுமெண்டரியில் கூறியதைப் போல அமைதியை விரும்பிய ஒர் நாகரீகமே அவர்களை வைத்து ஆளும் மன்னர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை வைத்துத்தான் என்பதாக தங்களது ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அந்த நம்பிக்கையே ஆளும் மன்னர்களின் இரத்த இழப்பின் மூலமாக அந்த நாகரீகத்திற்கு சாப்பாடு தருவிச்சாதாகவும், இரண்டாயிரம் வருடங்கள் அப்படி நம்பி கொழித்த நாகரீகம் திடீரென்று ஒரு 70 வருடங்களே வாழ்ந்த ஒரு மன்னரின் ஆட்சியில், சரியான படி விளைச்சல் இல்லாததால் மன்னரின் மீது இருந்த நம்பிக்கை மக்களுக்கு போனதால் அந்த மன்னருக்கு மரியாதை போய், மக்கள் நகரங்களை விட்டுவிட்டு காட்டுக்குள் சென்று விட்டதாக கூறுவது...

நாம் இன்னமும் நிறைய ஆராய்ச்சி நிதி திரட்டி கொடுத்து அவர்களை மீண்டும் ஆராய்ச்சிகள் நடத்தி நமக்கு கதை சொல்ல பணிக்க வேண்டும் என்பது போல் இருக்கிறது :-))

பி.கு: ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அருமையான பி.பி.சி டாகுமெண்டரி. என்ன இருந்தாலும் அந்த பாதிரியார் அப்படி முட்டாத்தனமாக அத்தனை புத்தகங்களையும் தீயில் போட்டு கொழுத்தியிருக்கக் கூடாது, இளவஞ்சி... பற்கள் நற, நற ... ;)

துளசி கோபால் said...

தெ.கா,
(மன்னிக்கணும்)

உங்க பதிவைவிட நம்ம இளவஞ்சியின்
பின்னூட்டம்தான் கூடுதல் சுவாரசியம்.

//வாய்ப்புக் கிடைத்தால் அனைவருமே வரலாற்றை ஒருபக்கச்சார்பாக
எழுதறதுதான்! //

அதிலும் இது அதி சூப்பர்.

ஒரு பத்து வருச வரலாறுகூட 'திரிச்சு' எழுதப்படுது(-:

Thekkikattan|தெகா said...

இளவஞ்சி,

இங்க பாருங்க ச்சும்மா யூ ட்யூப்ல போயி தடவிப் பார்ப்போமின்னு போன அங்க நம்ம ஹிஸ்டரி ட்டி.வி சானல் மக்கள் வேறு விதமான கதை வச்சு இருக்காங்க, இளவஞ்சி. அது பி.பி.சி காரங்க சொன்னத விட இன்னும் நல்லவே இருக்கு. எப்படி இந்த ஸ்பானியர்ட்ஸ் வெட்டி பொலி போடடாங்க மிச்சமிருந்த மாயாக்களைன்னு... இங்கே போயி பாருங்க அத

http://www.youtube.com/watch?v=SgcuwjKVqNQ

Thekkikattan|தெகா said...

கொண்டோடி,

மிக்க நன்றி! இதுவே தங்களின் முதல் வருகை நமது என்று நினைக்கிறேன்.

அழகாக தங்களின் பார்வையை முன் வைத்திருக்கிறீர்கள். இது வரைக்கும் பின்னூக்கிக் கொண்ட விசயங்களே போதுமான அளவிற்கு விசயங்களை கொடுத்திருக்குமென்று கருதுகிறேன்.

வாங்க, வாங்க வந்துகிட்டே இருங்க :-)

நாடோடி said...

//அவன் கப்பல்ல படையோட வந்திருக்கான்...நூறு பேரோ என்னவோ தான் இவங்க ஆயிரக்கணக்குல அரசனை பார்த்ததுமே பயந்து கிறித்துவ பாதிரியார புக்கோட முன்னாடி அனுப்பிட்டான்
அவர் புக்கை தூக்கிபிடிச்சுட்டே வந்திருக்கார் அரசன் அசந்த நேரத்துல கூட வந்த வீரர்கள் அவனை கொன்னுட்டாங்களாம்.. அப்புறம் மக்களையும் அடிமை படுத்தியிருக்காங்க இது இப்பதான் சமீபத்துல படிச்சேன் மெக்ஸிக ஏரியாவில தான் தேடிப்பார்த்தா கிடைக்கும்.//

இதுதான் நான் சொன்ன அந்த உலகின் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்.

அந்த நாட்டு மன்னன் அங்கே வந்த ஸ்பெனிஸ் படைத்தலைவனை கடவுளின் தூதுவன் என்று எண்ணி தன் அருகில் அனுமதித்திருந்தான்( அவர்களின் உருவ அமைப்பு, நிறம் இதை கொண்டு). அப்பொழுது அங்கு இருந்த ஸ்பெனிஸ் வீரர் 200 பேர். மன்னனின் மெய்காவல் படையே 2000 பேர் இருந்தனர். படைத்தலைவன் வஞ்சகமாக அரசனை பிணைக்கைதியா பிடித்து தங்கங்ளை பெற்று அரசனையும் கொன்று விட்டு ஸ்பெயிக்கு தப்பிவிட்டதாக படித்துள்ளேன்.

"Road to Eldrado"(அனிமேஸன்) படமும் இதை சார்ந்த கதையே.

Thekkikattan|தெகா said...

தெ.கா,
(மன்னிக்கணும்)

உங்க பதிவைவிட நம்ம இளவஞ்சியின்
பின்னூட்டம்தான் கூடுதல் சுவாரசியம்.//

எதுக்குங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. சொன்னாலும், சொல்லலைன்னாலும் இளவஞ்சி அடிச்ச அடியில நான் சொன்ன மாதிரி கை, கால் உதறி அவரோட ஒரு பின்னூட்டத்தை தவறுதலாக ரிஜெக்டே பண்ணிட்டேன்னா பார்த்துக்கங்களேன்.

வாய்ப்புக் கிடைத்தால் அனைவருமே வரலாற்றை ஒருபக்கச்சார்பாக
எழுதறதுதான்! //

இது மட்டுமா சொன்னார் //மனிதன் எந்தக்காலத்திலும் எந்தவிதமான வாழ்க்கையிலும் தமக்குக் கீழாக ஒருத்தனை அழுத்தி வாழவே விரும்புகிறான்! அதுக்கு இந்த சாதி அமைப்பு மிகச்சரியான அமைப்பாக இருப்பதால் இன்னமும் புடிச்சுக்கிட்டு தொங்கறோம்! // இப்படி பலப் பல உண்மைகளை அள்ளித் தெரித்திருக்கிறாரே :-)

எப்படியோ இந்தப் பதிவ நீங்களும் படிச்சிப்புட்டீங்களே... உங்க ஊரில் மட்டும் என்னாவாம்... நீங்கள் அபார்ஜினல் நியூசிஸ்-ஆ நாடு பிடிக்கும் பொழுது என்ன செய்தீர்கள் :-))

நாடோடி said...

6 வருடத்திற்கு முன் discoveryல் இதை பற்றி ஒரு டாக்குமென்றி பார்த்துள்ளேன். அதில்தான் 12,13 நூற்றாண்டில் நிலா கோயிலில் நடந்த நரபலி பத்தி கேள்விடட்டேன். அச்சமயத்தில் பஞ்சம் கொடுமை அதிகமாக இருந்ததால் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. நரபலி கொடுக்கப்பட்ட பிணங்களை ஒழுங்கு முறையில் அடக்கம் செய்வதுதான் எந்த ஒரு சமுதாயத்தின் கடைபிடிப்பாக இருக்கும். ஆனால் இந்த நிலாக் கோயிலில் அம்மாதிரி இல்லை. கொல்லப்பட்ட உடல்கள் அப்படியே விடப்பட்டு இருந்தது. இது இன்றுவரை ஏன் என்ற கேள்விக்குறியே?..நிலாக் கோயிலின் அடிவாரத்தில் நடந்த அகழ்வராய்ச்சியில் இந்த பிணக்குவியல்கள் கண்டறியப்பட்டது.

இன்றும் பெரு நாட்டில் இருகிராமங்களுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட நாளில் இருப்புக்கம்பிகளாளும் ,கற்களாலும்(பார்த்து பல வருடம் ஆகிவிட்டதால் exactஆக சரியா தெரியவில்லை)அடித்துக்கொள்ளும் பழக்கம் உள்ளாதாம். இது அன்றைய மாயன் சமுகத்தில் இருந்த ஒரு பண்டிகை போன்றதே..இந்த பண்டிகையில் இன்றளவும் ஓன்று, இரண்டு பேர் இறப்பது நடைபெறுகிறதாம்.

coincidence இந்தியாவில் வடமாநிலத்தில் இதேபோல் இரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் அது போல் இல்லை கற்களை வீசும் பழக்கம்.இதற்கு ஏதொ ஒரு காரணம் உண்டு டீவியில் பார்த்தபோது சொன்னதாக நினைவு.

நாடோடி said...

//உண்மையாக இருக்கலாம், ஒரு நாகரீகம் பல அன்றைய தினத்து மாற்றங்களை சந்தித்து, மீண்டும் சந்தித்து பயணித்துக் கொண்டே வரும் பொழுது தேவையானது எஞ்சி அடுத்த தலை முறைக்கு மிஞ்சி நிற்கும் தேவையற்றது கரைந்தே போயிவிடும். இதில், அன்னிய ஆக்கிரமிப்பு இல்லாத வரையிலும் அம் மாற்றங்களின் தாக்கம் எஞ்சி இருக்கும் மக்களின் வாழ்வு முறையினை கொண்டு அறியலாம்தானே (கொஞ்ச, நஞ்ச பழக்க வழக்கங்கள்... மொழி, தொழில் நுற்பம் இத்தியாதி விசயங்கள்...)//

நான் சொல்லவந்தது என்னவெனில் வெளி உலகம் தென் அமெரிக்க செல்லும்போது இருந்த மக்களின் நிலையைவிட,சமூகத்தைவிட மாயன் சமூகம் பல்வேறு முன்னேற்ங்கடோ இருந்துள்ளது. அகழ்வராய்ச்சிகள் இன்றும் மயன் சமுகத்தை பற்றி முழுமையாக அறியமுடியவில்லை. தீடீரென ஏன் தேக்கம் ஏற்பட்டது என்பது தான் புரியாத புதிர். மேலும் தென் அமெரிக்கவில் மனித இனம் வட அமெரிக்காவிற்கு சென்ற பின்னே சென்று இருக்க வேண்டும். ஆனால் வட அமெரிக்காவில் இல்லாத பெரும் நாகரீக வளர்ச்சி தென் அமெரிக்காவில் ஏற்பட்டது எப்படி?.. அதேபோல் காணாமல் போனது எவ்வாறு என்பதே புதிராக உள்ள ஒன்று.இதுதான் மாயன் சமுகத்தை பற்றி மிகப்பெரிய கேள்வி.

Thekkikattan|தெகா said...

நாடோடி,

நிலாக் கோயிலின் அடிவாரத்தில் நடந்த அகழ்வராய்ச்சியில் இந்த பிணக்குவியல்கள் கண்டறியப்பட்டது.//

ரொம்ப பக்தியான(நரபலி) மக்களா இருந்துருப்பாங்க போல இருக்கு.

இன்றும் பெரு நாட்டில் இருகிராமங்களுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட நாளில் இருப்புக்கம்பிகளாளும் ,கற்களாலும்(பார்த்து பல வருடம் ஆகிவிட்டதால் exactஆக சரியா தெரியவில்லை)அடித்துக்கொள்ளும் பழக்கம் உள்ளாதாம். //

அப்படியா, இன்னொன்னும் கேள்விப் பட்டிருக்கேன். மெக்ஸிகோவில் இது போன்ற ஒரு திருவிழாவில் துப்பாக்கிகளை கொண்டு காற்றில் சுடுவார்களாம். இதில் தவறிப் போயி ஆட்கள் சூடு வாங்குவதும் உண்டாம் ;-)

நிறைய செய்திகள் வச்சு இருக்கீங்களே. பின்னால வந்து ஒண்ணு ஒண்ணா சந்தேகங்களை கேட்டு தெளிஞ்சுக்கிறேன்... நன்றி நாடோடி உங்க நேரத்தை இங்கு கொஞ்சம் செலவு செய்வதற்கு.

இன்னும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். The information that you are sharing is simply mesmerizing...

பெத்தராயுடு said...

மாயன் கலாச்சாரம் தவிர inca, aztec நாகரீகங்களும் ஸ்பானிய படையெடுப்பால் அழிக்கப்பட்டன. ஏதோ ஒரு டாகுமெண்டரியில பாத்தது (டோரண்ட்ஸ் தளங்களில் பிராய்ஞ்சு பாருங்க, நிறைய அருமையான டாகுமெண்டரிகள் கிடைக்கும்) பெருவில் இருந்த இன்கா நாகரீகம் மலைப்பாறையைக் குடைந்து ஒரு இயற்கையான குளிர்சாதன வசதியை கண்டுபிடித்திருந்தது. இவர்கள் தங்கள் விவசாய விளைச்சலில் ஒரு பகுதியை எதிர்காலத்துக்காக சேமித்து வைப்பார்களாம். அங்கு ஒரு வகையான சமத்துவம் இருந்திருக்கின்றது.

அடுத்து எப்படி இந்த நாகரீகங்கள் வெகு காலம் முன்பே முன்னேறி இருந்தன என்ற கேள்வி எழுகிறது?

அங்கு இருக்கும் புவியியல் அமைப்பு இயற்கையுடன் அதிகம் மல்லுக்கட்டாமல் மக்கள் வாழ வழிசெய்திருக்கலாம்.


அபோகாலிப்டோ காட்டும் காலத்தில் மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்பார்களா எனக் கேட்டால் இப்போதும் அந்தமான், நிகோபார் தீவுகளிலும், இந்தோனேசியக் காடுகளிலும் மனித வேட்டையாடும் இனங்கள் உள்ளனவே?

மத்தபடி, movie is awesome. For the uninitiated, it might project an incorrect perspective of the Latin american native civilizations.

-பெத்தராயுடு

Thekkikattan|தெகா said...

நாடோடி,

இன்றும் பெரு நாட்டில் இருகிராமங்களுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட நாளில் இருப்புக்கம்பிகளாளும் ,கற்களாலும்(பார்த்து பல வருடம் ஆகிவிட்டதால் exactஆக சரியா தெரியவில்லை)அடித்துக்கொள்ளும் பழக்கம் உள்ளாதாம்.//

coincidence இந்தியாவில் வடமாநிலத்தில் இதேபோல் இரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் அது போல் இல்லை கற்களை வீசும் பழக்கம்.//

பிறகு மத்திய கிழக்கு நாடுகளில் கத்தியாலும், செயினாலும் அடித்துக் கொண்டு கடவுள் வேண்டுதல் செய்வது, நம்மூரில் இந்த அலகு குத்துறது, தீ மிதிக்கிறது இன்னும் என்னவெல்லாமோ உடம்பை வருத்திக் கொண்டு நடக்கும் வழிபாடுகள் இன்னமும் புழக்கத்தில் தானே இருக்கிறது. அப்பப்ப குழந்தைகளை தூக்கிட்டுப் போயி நரபலின்னு பேசிக்கிறது, அப்படிப்பார்த்தா மாயா நரபலியை கொஞ்சம் நல்லாவே வெளிய தெரிய செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

ஆனா, ஒண்ணு பாருங்க அந்த காலத்து மாயா நாகரீக மக்கள் மனித நரபலி செஞ்சு கடவுளை கூல் பண்ணி வைச்சிருந்திருக்காங்க. இப்ப கொஞ்சம் நல்ல வளர்ச்சி அடைஞ்ச நம்ம அதனையே கொஞ்சம் ட்ரிக் பண்ணி கோழி, ஆடு, மாடுன்னு வெட்டி அதன் ரத்தத்தை காவு கொடுத்துப்புட்டு புத்திசாலித்தனமா மிச்ச, மீதாறிய சாப்பிட்டுபுடுறோம்... சாமீக்கே அல்வா கொடுக்கிற அளவிற்கு வந்துட்டோம் :-))

இதுவும் ஒரு நாகரீக மேம்பாடு தானோ?

ilavanji said...

// மாயன் கலாச்சாரம் தவிர inca, aztec நாகரீகங்களும் ஸ்பானிய படையெடுப்பால் அழிக்கப்பட்டன. ஏதோ ஒரு டாகுமெண்டரியில பாத்தது //

கீழே உள்ள சுட்டியை அழுத்தினீர்களென்றால் அழிந்து போட 6 நாகரீகங்களைப் பற்றிய 1 மணிநேர டாகுமெண்ட்டரிகள் கிடைக்கும்!

Lost Civilizations

என்னடா இவன் பைரசி லிங்கா கொடுக்கறானேன்னு திட்டாதீக! பார்த்துட்டு ஒருதடவை கண்ணத்துல போட்டுக்கிட்டு அழிச்சிருங்கப்பு! :)

ilavanji said...

தெகா,

பெரு நாட்டுக்கதைக்கு சுட்டிக்கொடுக்க விட்டுட்டேன்! மொத்தமா இங்க! நம்பகிட்ட தொழில் சுத்தம் ஜாஸ்திங்க! ஹிஹி...

1. The Lost Civilization Of Peru
2. Lost Civilizations: The Inca
3. Lost Civilizations: The Maya
4. Lost Civilizations: Africa
5. Lost Civilizations: Ancient Egypt
6. Lost Civilizations: Mesopotamia

Thekkikattan|தெகா said...

பெத்தராயுடு,

For the uninitiated, it might project an incorrect perspective of the Latin american native civilizations..//

அதேதான் நான் நினைச்சதும். நன்றி! ரொம்ப நாட்களாக ஆளைப் பார்க்க முடியவில்லை.

Thekkikattan|தெகா said...

இளவஞ்சி,

வாவ், எத்தனை சுட்டிகள், எவ்வளவு சுத்தமாக. நேற்றிலிருந்து இது வரைக்கும் ஒரு மூன்று பார்த்தாயிவிட்டது. :-))

உங்களுக்கு கோடி புண்ணியங்கள் என் பக்கமிருந்து. பார்த்து முடித்தவுடன் எஞ்சி நிற்பது கேள்விதான்... is there anything permanent in constantly changing world? where are those elite, powerful and glorious Kings, queens and their ppl, today? I see every where around me only the skeleton :D

Sivakumar said...

தெகா ன்னா சும்மாவா?

மாயன் said...

இந்த படத்தில் வரும் மாயன்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.. :-)

தெகா.. இளவஞ்சி.. அருமையான விவாதங்கள்.. நன்றி

இளங்கோ-டிசே said...

தெ.கா:
இந்தபடம் டிவிடியில் வந்த சில நாட்களில் பார்த்துவிட்டு, மேலதிகத் தகவலகளுக்காய் இணையத்தை குடைந்தபோது, சில forumsகளில் இரண்டுவிதமான கருத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆகவும் கலாசார வன்முறையாளர்களாய் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்களே என்பதே அதிகமானவர்களின் ஆதங்கமாய் இருந்தது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டதுமாதிரி படத்தின் முடிவைப் பார்க்கும்போது எனக்கும் தோன்றியது. பின்னூட்டங்களில் நண்பர்கள் குறிப்பிட்டமாதிரி மெல் கிப்சனின் இங்கிலாந்து எதிர்ப்பு புரிந்துகொள்ளக்கூடியதெனினும், அவரது நேர்மை இவ்வாறான ஸ்பானிய கடலோடிகளால் எப்படி மாயா இன்கா நாகரீகங்கள் முற்றாக சூறையாடப்படது என்பது குறித்துமாய் இருக்கவேண்டும் (அப்படியான படங்கள் எடுப்பார் என்று நம்புவோமாக). Patriot போன்ற அமெரிக்க சிவில் யுத்தங்களைக் காட்டிய மெல் கிபசன் அதற்கு முன் எப்படி அமெரிக்கப் பூர்வீகக்குடிகள் அழிக்கப்பட்டிருந்தார்கள் என்பது குறித்தும் அக்கறைகாட்டவேண்டும் (அப்படியே ஆஸ்திரேலியாப் பூர்வீகக்குடிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்). இல்லையெனில் இவ்வாறு படங்களை எடுத்தால் மட்டுமே நன்கு வியாபாரரீதியில் ஓடுமென்று படங்களை எடுக்கும் ஒரு வியாபாரக் கலைஞர் என்றுதான் மெல் கிப்சனை எடுத்துக்கொள்ளவேண்டி வரும். மிக எதிர்பார்த்து போய்ப்பார்த்த பூர்வீக குடிகள் X ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த இன்னொரு படமாகிய The New world கூட ஏமாற்றத்தையே தந்திருந்தது (மெல் கிப்சனிடையது அல்ல).

மனிதர்களை பலியிடும் மாயா இன்கா நாகரீகங்களை சற்று ஒதுக்கிவிட்டு, இப்போது ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நரவேட்டையாடும் நவீன இரட்சகர்கள் பற்றியும், அந்த வேட்டையில் வீணாய் உயிரிழக்கும் தம் நாட்டவர் குறித்தும் -அமெரிக்க/ஆஸ்திரேலியா வீரதீரச்செயல்கள், கதாநாயகத்தனங்கள் இல்லாது- உள்ளதை உள்ளபடி வைத்து மெல் கிப்சனைப் போன்றவர்கள் படங்களை எடுப்பார்களா?

Thekkikattan|தெகா said...

வாங்க டிசே தமிழா,

ஆனால் நீங்கள் குறிப்பிட்டதுமாதிரி படத்தின் முடிவைப் பார்க்கும்போது எனக்கும் தோன்றியது.//

நம்மளுக்கு மட்டுமில்லை, இது போன்று கொஞ்சம் யோசிக்கும், இந்த மேற்கத்திய நாகரீகங்களை தாண்டியும் சிறந்த நாகரீகங்கள் இருந்திருக்கக் கூடுமென்று நம்பக் கூடிய யாவருக்கும் இது போன்று நினைப்பு தவறாமல் தோன்றும்.

மேலும் இது போன்ற படங்களின் மூலமாக ஒரு தவறுதலான எண்ண ஓட்டத்தை மக்களிடையே பரப்பியும் விட முடியும் என்று உண்மையாக உலக வரலாறுகளின் மீது நம்பிக்கையை வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய சவால், அது அப்படிக் கிடையாது என்பதனைப் பொருட்டு விழிப்புணர்வேற்றுவதும்.

இதோ அது போன்ற ஒரு ஆசிரியையின் ஆதங்கம்...


Austin American-Statesman: You looked truly disturbed after the movie.

...Julia Guernsey: My first reaction was to the extraordinary, gratuitous violence. And the ending with the arrival of the Spanish (conquistadors) underscored the film's message that this culture is doomed because of its own brutality. The implied message is that it's Christianity that saves these brutal savages. I think that's part of Gibson's agenda, sort of, "We got the Jews last time (in 'The Passion of the Christ'), now we'll get the Maya." And to highlight that point there's a lot of really offensive racial stereotyping. They're shown as these extremely barbaric people, when in fact, the Maya were a very sophisticated culture...

//மனிதர்களை பலியிடும் மாயா இன்கா நாகரீகங்களை சற்று ஒதுக்கிவிட்டு, இப்போது ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நரவேட்டையாடும் நவீன இரட்சகர்கள் பற்றியும், அந்த வேட்டையில் வீணாய் உயிரிழக்கும் தம் நாட்டவர் குறித்தும் -அமெரிக்க/ஆஸ்திரேலியா வீரதீரச்செயல்கள், கதாநாயகத்தனங்கள் இல்லாது- உள்ளதை உள்ளபடி வைத்து மெல் கிப்சனைப் போன்றவர்கள் படங்களை எடுப்பார்களா?//

இப்படியும் ஒரு ஆசையா? நடக்குமா அது. ஈராக்கில் கைதிகளை சிறையில் வைத்து துன்புறுத்திய அந்த காட்சிகளே மெல் க்ப்சனின் படத்திற்கு போதுமானதாச்சே, எங்க எடுத்து காமிக்கச் சொல்லுங்கப் பார்ப்போம்.

Thekkikattan|தெகா said...

சிவகுமார்,

என்னது :-)), பார்த்தீங்களா நீங்க நினைச்சது மாதிரியே நிறைய பேருக்கு அப்படித்தான் ஒரு பிம்பத்தை இந்தப் படம் வழங்கியிருக்கிறது.

Thekkikattan|தெகா said...

மாயன்,

இந்த படத்தில் வரும் மாயன்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.. :-) //

உங்க பெயரை படிக்கும் பொழுதெல்லாம் தென் அமெரிக்கா மாயன்களை பற்றி நினைவுக்கு வருவதில்லை, மாறாக உங்களுக்கு பிடித்த நம்ம நடிகர் நாசர் நடித்து வெளி வந்த அவதாரம் படத்தின் நாயகன் பெயரான "மாயன்" தான் என் ஞாபத்திற்கு வரும்.. . :-))))

நன்றி மாயன் :-P

அசுரன் said...

Informative article and Comments.

Thanks to Theeka and Ilavanchi and others.

The other post (About National Geography) also useful one.

When there are many Mokkai posts eating out the Thamizmanam Public forum, These kind of posts are encouraging.

Asuran

VIKNESHWARAN ADAKKALAM said...

சிறப்பாக திறனாய்வு செய்து போட்டிருக்கிங்க.... மிக்க நன்றி...

பினாத்தல் சுரேஷ் said...

அந்தக் காலத்தில எப்படி இதைப் படிக்காம விட்டேன்னு தெரியலை. அருமையான பதிவு, பின்னூட்டங்கள், குறைந்தது 6 மணி நேரம் தாங்கும் லின்குகள் :-)) ஒண்ணை விடாம பாக்கப்போறேன். (ஆமா, இப்ப பின்னூட்டம் போட்டா உயிர் வருமா?)

சமீபத்துலதான் அபோகாலிப்டோ பாத்தேன். கடைசி காட்சி முடிஞ்சதும் அருகில் இருந்த ஆளுகிட்ட நான் சொன்னது.. இது பாஷன் ஆப் தி க்ரைஸ்ட் இன்னொரு ஆங்கிள்லே எடுத்து விட்டுருக்காம்பா!

குமட்டுதல் முக்கிய நோக்கம் என்பதையும் மறுப்பதற்கில்லை :-)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இப்போ தான் பாத்து முடிச்சேன்.. :) அவ்வவ்.. அந்தாளோட ப்ரேவ் ஹார்ட் பாத்த பாதிப்பே இன்னமும் இருக்கு.. அதுவும் அந்த க்ளைமாக்ஸ் quartering சீனு :) (அந்தக் காலத்துல யூ கே ல உண்மையாலுமே தேசத் துரோகிகளுக்கு அந்த தண்டனை தான்னு விக்கில போட்டிருக்காங்க..)

முழு படத்தையும் forward பண்ணிப் பண்ணி.. ஒரு மணி நேரத்துக்கும் கம்மியா பாத்து முடிச்சிட்டேன்..:)அம்புட்டு வன்முறை.. எனக்கு உயிர்வதை பிடிக்கரதில்ல..

சரி.. நான் விக்கில படிச்சத சொல்லிட்டுப் போயிடறேன்.. மெல் சொல்லியிருக்காரு - ஆக்ஷன் படம் பண்ணனும்ன்னு ஆசை.. ஆனா எல்லாருக்கும் தெரிஞ்ச கார் சேஸிங் கையே மறுபடியும் பண்ணாம, ஒருத்தன் உயிரைக் காப்பாத்திக்க ஓடுற மாதிரி நிஜமா பண்ணனும்.. ஆக, இப்பிடி ஒரு கருவ முதல்லயே ரெடி பண்ணிட்டு களத்த தேடி அலைஞ்சதுல, இந்த மாதிரி ஒரு பழைய நாகரீகத்த வச்சுப் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணி, அதுல மாயன் களைத் தேர்ந்தெடுத்திருக்காரு.. ஆக, அவரோட நோக்கம், மாயன்களைப் பத்திச் சொல்லறது இல்ல.. ஒரு கர்ண கொடூரமான படத்த மக்களுக்குத் தரனும் :)) அதனால நரபலிய மட்டும் பெருசா காட்டியிருக்காரு..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எனக்கு இப்பல்லாம் வரலாறு படிக்கறதுன்னாலே பயமாயிருக்கு :) ஏன்னா, நான் படிக்கறது தான் நிஜமா நடந்திருக்குமான்னு ஒரு நம்பிக்கையின்மை.. அதனால, ஒரு டைம் மெஷின் கிடைச்சா நானே போயி பாத்துட்டு வந்துடலாம்ன்னு யோசிக்கறேன் :)

நல்ல பின்னூட்ட விவாதங்கள்.. நான் ஏற்கனவே ஒரு "பெரிய" இடத்துல இந்தப் படத்தப் பத்தி திட்டி எழுதியிருந்தத படிச்சிருக்கேன்.. நீங்க நினைச்ச மாதிரியே தான் அங்கயும் போட்டிருந்தது.. அதனால ஒரு முன் முடிவோட தான் அந்தக் கடைசி காட்சிய அணுக முடிஞ்சது.. அவங்கள ஏதோ தேவ தூதர்கள் ரேஞ்சுக்கு கையில ஒரு க்ராஸோட காட்டியிருக்காரு :)

Thekkikattan|தெகா said...

ஆக, அவரோட நோக்கம், மாயன்களைப் பத்திச் சொல்லறது இல்ல.. ஒரு கர்ண கொடூரமான படத்த மக்களுக்குத் தரனும் :)//

அப்போ அந்தாளுக்கு கொஞ்சம் புத்தி டிவிஸ்ட் ஆயிருச்சு போல. ரத்தமும், சகதியுமாவே குரூரமா செய்றது. The passion of christல கூட எடுத்துக் கொண்ட பகுதி ஜீசஸ் வதை படுவதையே அதிகமாக காட்டுவார்.

//எனக்கு இப்பல்லாம் வரலாறு படிக்கறதுன்னாலே பயமாயிருக்கு :) ஏன்னா, நான் படிக்கறது தான் நிஜமா நடந்திருக்குமான்னு ஒரு நம்பிக்கையின்மை.//

இதுக்கெல்லாம் இப்படி பயந்துகிட்டா ஆகுமா... ஹிஸ்ட்ரி சானல்ல ஒரு டாகுமெண்டரி பார்த்தேங்க எப்படியெல்லாம் கொலை செய்றாய்ங்க அட அட ரசிச்சி, ரசிச்சி. ஒரு இடத்தில ஒருத்தன் குடல உருவி ஒரு உருளை மாதிரியில முடிச்சு போட்டு சுத்த விட்டு கொஞ்சம் கொஞ்சமா அதில சுத்துறாய்ங்க குடல ... உவ்வே... உசிரு போறதும் அவரு கண்ணுக்கு முன்னாடியே. Can you imagine that kind of torture?

//ஒரு டைம் மெஷின் கிடைச்சா நானே போயி பாத்துட்டு வந்துடலாம்ன்னு யோசிக்கறேன் :) //

இவரு பார்த்திட்டு வந்திருவாரமா. இப்போ மட்டும் எங்கிருந்து தைரியம் வந்திச்சு. :) அப்படி முடிஞ்சா சொல்லுங்க, நானும் வாரேன்...

//அவங்கள ஏதோ தேவ தூதர்கள் ரேஞ்சுக்கு கையில ஒரு க்ராஸோட காட்டியிருக்காரு :)//

ஏதோ அவரால முடிஞ்ச சமூகச் சேவை, அவர் சார்ந்த மதத்திற்கு... huh!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஆனா படத்துக்காக நல்லா உழைச்சு அந்தக் காலத்துக்கே போயி எடுத்திருக்காங்க..

மொழியை அதாகவே இருக்க விட்டது நல்ல அணுகுமுறை..

தன்னோட உறவுகள பிரியும் போது ஒன்னும் செய்ய முடியலையேன்ற இயலாமையின் வலிய பிரதிபலிக்கிற காட்சிகள்.. நரபலி பீடத்துக்குப் போகும் போது அந்த அடிமைகள் காணும் படங்கள், மக்களோட ஆரவாரம், அடிமைகள் முகத்துல தெரியற பயம், பீதி, அருவருப்பு.. நாமளே அந்த இடத்துல இருக்கற மாதிரி நடுக்கமாவும் இருக்கு.. நல்ல வேளை அந்த இடத்துல இல்லாம போனோம்ன்னும் நிம்மதியா இருக்கு.. தப்பிப் பிழைச்சோமடா சாமி..

ஆனா இன்னைக்கு முன்னேறி இருக்கோம்ன்னு சொல்ல முடியல.. சானல் 4 வீடியோ பாத்தீங்கன்னா அது ஒன்னே போதும், மனுஷனுக்குள்ள இருக்கற மிருகம் இன்னும் உயிர்ப்பு குறையாம ஆளப்படாம அப்பிடியே இருக்குன்னு.. மிருகமாவது வயித்துப் பசிக்காக கொல்லுது.. மனுஷன், ப்லேஷர் கில்லிங் பண்றான்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ண்டரி பார்த்தேங்க எப்படியெல்லாம் கொலை செய்றாய்ங்க அட அட ரசிச்சி, ரசிச்சி. ஒரு இடத்தில ஒருத்தன் குடல உருவி ஒரு உருளை மாதிரியில முடிச்சு போட்டு சுத்த விட்டு கொஞ்சம் கொஞ்சமா அதில சுத்துறாய்ங்க குடல ... உவ்வே... உசிரு போறதும் அவரு கண்ணுக்கு முன்னாடியே. Can you imagine that kind of torture?//

இதென்ன நிஜமாவா? எங்க நடக்குது இப்பிடி?

Thekkikattan|தெகா said...

நல்ல வேளை அந்த இடத்துல இல்லாம போனோம்ன்னும் நிம்மதியா இருக்கு.. தப்பிப் பிழைச்சோமடா சாமி..//

அந்த கால கட்டத்தில நாம இல்லாட்டியிம், இப்ப வந்த இந்த விக்கி லீக்ஸ் (ஈராக்) அப்புறம் நீங்க சொன்ன சானல் 4 விடியோ எல்லாம் பார்த்தா அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி வலிமை உள்ளவன் கடவுள் ரேஞ்சிற்கு நின்னு எளியவனின் உசிரை பறிச்சிருக்கான்னு புரிஞ்சிப்போம். கை கால் எல்லாம் உதறல் எடுத்துச்சு நாம குறிப்பிட்டு பேசிட்டு இருக்கிற இரண்டு காணொளிகளுமே...

//இதென்ன நிஜமாவா? எங்க நடக்குது இப்பிடி?//

இதெல்லாம் 60 வருஷத்திற்கு முன்னாடியில இருந்து அதுக்கு பின்னான நூற்றாண்டுகளில் வருத்தி கொல்வதான தண்டனை முறைகள் போல... அது மாதிரி எத்தனையோ வித விதமா காமிச்சாங்க. இங்க எழுதினா நீங்க மண்டை சுத்தி கீழே விழுந்துடுவீங்க...

ஏன் அவ்வளவு தூரம் நம்ம வர்ண சிரம புத்தகத்தின் அடிப்படையில் சில தண்டனைகள் - நாக்க பிடிச்சு வைச்சு அறுக்கிறது, காதுக்குள்ளர ஈயத்தை காய வைச்சு ஊத்துறதுன்னு இங்கயிம் ரசிச்சு செஞ்சிருக்காய்ங்க போலவே... கண்டிப்பா மிருகமேதாங்க நாம... தேவையான நேரத்தில கொஞ்சம் அந்த மூஞ்சிய மறைச்சிக்க தெரிஞ்ச மிருகம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பல்வேறு வருத்திக் கொல்லும் முறைகள் பத்தி நான் விகடன்ல போட்டிருந்ததை படிச்சிருக்கேன்..

எனக்கு யாரும் சாகறதப் பத்தி பயமில்லைங்க.. ஆனா அதுக்கு முன்னால ஏற்படற வலி.. அந்த உசுருக்கு எப்பிடி இருந்திருக்கும்ன்னு யோசிச்சுப் பாக்கறதால எனக்கு ஏற்படற வலி.. அனேஸ்தீசியா கொடுத்தோ இல்லை செத்த பின்னாடி என்னமோ பண்ணுனா கஷ்டப்பட மாட்டேன்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

// கண்டிப்பா மிருகமேதாங்க நாம... தேவையான நேரத்தில கொஞ்சம் அந்த மூஞ்சிய மறைச்சிக்க தெரிஞ்ச மிருகம்//

மிருகம் எல்லாருள்ளும் இருக்கும்.. மிருகத்த அழிக்க முடியாது.. ஆனா மேல் மனம் கொண்டு மிருகத்தப் பழக்க அடக்க முடியும்.. அதைப் பொறுத்து தான் கொஞ்சம் பேரு சாத்வீகமாகவும் கொஞ்சம் பேரு மிருகமாகவும் நெறைய பேரு நடுவாலயும் இருக்காங்க.. (என்னோட இன்றைய தத்துவம் :) )

Thekkikattan|தெகா said...

அந்த உசுருக்கு எப்பிடி இருந்திருக்கும்ன்னு யோசிச்சுப் பாக்கறதால எனக்கு ஏற்படற வலி.//

இதன் மூலமாத்தான் சொல்ல வேண்டிய இடத்திற்கு செய்தியைக் கொண்டு போயி சேர்க்கிறாய்ங்களாம். அந்த பயம் தானே அந்த வலி பொருட்டு உளவியலா நம்ம மண்டைக்குள்ளர ஏத்தி வைக்கப்படுது; the purpose of the whole capital punishments...

Thekkikattan|தெகா said...

(என்னோட இன்றைய தத்துவம் :) )
//

அட அட எல்போர்ட் கொன்னுபுட்டீய போங்க - கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் :)))

Related Posts with Thumbnails