Thursday, January 10, 2008

யோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்!!

போன வருஷம் நான் "மருத்துவரே வேண்டாம் - *யோகா* செய்யுங்கள்" அப்படிங்கிற தலைப்பில ஒரு பதிவு போட்டிருந்தேங்க. அதுக்கு நம்ம முக்கியமான தலைகள் எல்லாம் வந்து இப்ப என்னய போட்டு கும்முறாங்க. அதிலும், குறிப்பா நம்ம பாரி.அரசு இந்தக் கலையை செய்து கொண்டே எனக்கு தடகள உடற் பயிற்சிக்கும் இந்த யோகாவிற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் தெரியலைன்னு வந்து சொல்லிட்டார்.

நான் இந்தப் பதிவிற்கு சொந்தக் காரன் என்பதால் அதற்கு பதிலுரைக்கும் நிலையில் இருக்கிறேன். இருந்தாலும், இதன் பலன்களை இன்னமும் நிறைவாக தெரிந்தவர்கள் வந்து இங்கே தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். இரு தரப்பினரும் வருக! ஆதரவு தருக!!

கீழே பாரியோட பின்னூட்டங்க...

பாரி.அரசு said...

......ஒரு அற்புதமான பதிவுக்கு வாழ்த்துக்கள் தெகா!

நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக யோகா செய்து வருபவன் என்கிற முறையில்...

யோகா ஒரு உடற்பயிற்சி முறை அது இந்திய சூழலில் உருவானது என்பதை தவிர வேறுவிதமான கற்பனை வாதங்கள் தேவையற்றது.

உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான உடலுக்கு தேவை, அதை தவிர யோகா செய்வதால் எல்லாவிதமான நோயும் குணமடையும் என்பதெல்லாம் பொய் என்பதோட மட்டுமல்லாமல்...


ஒழுங்கற்ற உடல் இயங்கியல்(disorder) எனப்படும் மருத்துவ சவால்களை யோகா வால் எதுவும் செய்ய இயலாது.

புறப்பொருட்களால் ஏற்படும் (diseases) யோகா செய்வதால் காப்பாற்ற இயலாது.

இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

ஆரோக்கியமான உடல் தேவையென்றால் உடற்பயிற்சி அவசியம் அதை வலியுறுத்துங்கள்.
யோகா - இந்திய சூழல் என்றால்
நீச்சல் - ஐரோப்பிய நாடுகளில் அற்புதமான உடற்பயிற்சியாக இருக்கிறது குறிப்பாக ரஷ்யர்கள்.

மரபு சண்டை பயிற்சி கிழக்காசிய நாடுகளில் முக்கிய மன, உடல் பயிற்சியாக இருக்கிறது (சீனா,கொரியா,ஜப்பான்)

யோகா வால் சக்தி கிடைக்கும் (ஒரு புண்ணாக்கும் கிடைக்காது) என்பதெல்லாம் வெறும் கற்பனை! .....

Thursday, January 10, 2008.


அதுக்கு என்னோட பதில ஒரு பின்னூட்டமா நினைச்சித்தான் எழுத ஆரம்பிச்சேன் அது முடியறாப் போல தெரியல உடைச்சிட்டேன் இரண்டாவது பகுதியா. அதுதான் கீழே...

வாங்க பாரி.அரசு,

தாமதமாக வந்தாலும், சூடாக வந்து கொடுத்திருக்கீங்க எனக்கு ஒண்ணு ;).

சில விசயங்களில் உங்களோட நான் ஒத்துப் போகிறேன் என்றாலும், பல விசயங்களில் எழுந்து நிற்க வேண்டியுள்ளது.

ஒவ்வொன்றாக இப்பொழுது பார்ப்போம்.

1) ஒழுங்கற்ற உடல் இயங்கியல்(disorder) எனப்படும் மருத்துவ சவால்களை யோகா வால் எதுவும் செய்ய இயலாது.

நீங்கள் கூற வருவது உடல் சார்ந்த வியாதி முற்றிய நிலை என்று வைத்துக் கொள்வோமா? அதாவது, புற்று நோய், எய்ட்ஸ் போன்ற வியாதிகள் அதுவும் ஒருவரை ஏற்கெனவே பீடித்து முற்றிய நிலையில் அதற்கு கண் கண்ட மருத்துவ முறையாக இந்த கலையை பயன் படுத்த முடியாதுதான்.

இருப்பினும், இந்த இரத்த கொதிப்பு, சுவாச சம்பந்தமான முதல் நிலை இருப்பில் இவைகளை கட்டுக்குள் வைக்கும் பொருட்டேனும் அதன் பிற்கால அவதரிப்புகளான, டாயபெடிஸ், ஆஸ்த்மா போன்ற முழு நிறைவடைந்த வியாதி நிலைகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளலாமல்லவா?

இரத்தக் கொதிப்பே 'ஒருவன்' எப்படி தினசரி வாழ்க்கையில் பிறரிடம் நடந்து கொள்கிறானென்பதனை தீர்மானிக்கும் வல்லமையுடையது. அப்படி இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான இந்த யோகா பயிற்சிகளில் நாம் உடம்பை மட்டுமே முறுக்க வில்லை, அப்பொழுது நாம் சுவாசிக்கும் முறையையும் கவனத்தில் கொள்கிறோம், இல்லையா?

கோபம் தலைக்கேறும் பொழுது நம் முகம் சிவத்து விடுகிறது, மூச்சும் தாருமாறாக எகிறுகிறது அப்பொழுது அங்கே என்ன நடக்கிறது, பாரி? இப்பொழுது நீங்கள் பத்து வருடங்கள் யோகவினை செய்து வந்திருக்கிறீர்களென்றால் முறையாக, கண்டிப்பாக இவையனைத்தும் உங்களுக்கு இந் நேரத்தில் உங்களையுமறியாமல், அதன் தாக்கம் உங்களுக்கு பலனளித்துக் கொண்டுள்ளது என்றே கொள்ளலாம். உங்களுக்கு அடிக்கடி ஜலதோசத் தொந்திரவு முன்புள்ளது போல இப்பொழுது உண்டா? இல்லையெனில், என்ன நடந்திருக்கக் கூடும், உங்கள் உடல் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருவித்துக் கொண்டிருக்க இந்தப் பயிற்சியும் உதவி செய்ததாக எடுத்துக் கொள்ளலாம்.

அதே நோய் எதிர்ப்பு சக்தியும் ஒரு பாசிடிவான நிலையில் தன்னை சிறிதே ஆசுவாசப் படுத்திக் கொண்டு தன் சிந்தனையை ஒரு முகப் படுத்தும் பொழுது, மேலும் மனம் தனக்குத் தேவையான சக்தியை பன்முகமாக தருவித்துக் கொடுக்கிறது. இது போன்ற மனப் பயிற்சி தடகளத்தில் பரவலாக இல்லைதானே?

அதற்குச் சான்றாக எய்ட்ஸ் நோயாளிகளில்... எய்ட்ஸ் நோயாளிக்கு முக்கிய பிரச்சனை நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து கொண்டே போவது...யோகாவினால் இந்த எதிர்ப்பு சக்தி அதிகமாகி நோயாளிகளுக்கு CD4 count ஜாஸ்தியாவது அனைவராலும் ஒத்துக்ககொள்ளப்பட்ட ஒன்று... இது வியாதியை குணமாக்கா விட்டாலும் நோயாளி சந்தர்ப்பவாத நோய்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பயன் படுகிறது, இல்லையா? (நன்றி: மங்கை)

இது போன்ற வியாதி முற்றிய நிலையிலேயே உள்ள ஒருவருக்கு அதிக உடல் உழைப்பு தேவையில்லாது சிறிய, சிறிய மூச்சுப் பயிற்சிகளினாலும், சிறிய உடல் முறுக்கேற்று பயிற்சிகளினாலும் இதனைப் பெற வைக்க முடியுமென்றால்... நீங்கள் கூறிய அயற்சியூட்டக் கூடிய நீச்சல் பயிற்சி, தடகள உடற் பயிற்சிகளை எப்படி அவர்களுக்கு நாம் பரிந்துரைக்க முடியும், பாரி?

உடல் வியாதி முற்றிய நிலையில் ஒரு நோயாளி வியாதியிலிருந்து முழுமையாக குணமடைகிறாரோ இல்லையோ அவருக்குத் தேவை ஆறுதலும், பாசிடிவ் எண்ணங்களும் பெரும் பங்காற்றக் கூடும் தன்னை எழுந்து நிற்க வைக்க (மன ரீதியாகவேணும்)... அதனை இந்த யோகா சிறப்பாகவே வழங்குகிறது.

எனக்குத் தெரிந்தே நூயொர்க் நகரத்தில் வீடு இல்லாமல் தெருவோரங்களில் வசிக்கும் ஒரு ஐம்பது பேரைக் கொண்டு ஒரு ஆராய்சி நடத்தப் பட்டது. அவர்களில் நிறைய பேருக்கு எலும்பு மூட்டு (arthiritis) மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த நோய்கள் இருந்தன. அவர்களை இரு பிரிவாக பிரித்து ஒருவருக்கு அலோபதி மருத்துவமும், மற்றொரு பிரிவினருக்கு இந்த யோகா பயிற்சியும் வழங்கப் பட்டது.

இதில் முதல் குரூப்பில் இருந்தவர்கள் உடனடி நிவாரணம் பெற்றது போல ஆரம்பித்த காலத்தில் இருந்தாலும், மீண்டும் அந்த சிகிச்சை முறையை விட்டவுடன் அவர்கள் அதே நோயால் பீடிக்கப் பட்டனர்.

ஆனால் இரண்டாவது குரூப் மெதுவாக அதன் பலனன ஈன்ற பெற்றாலும், ஆர்த்ரடிஸ், இரத்தக் கொதிப்பு சார்ந்த உபாதைகள் மற்றும் மன நலத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு சிலர் அது போன்ற வாழ்க்கை முறையையே கைவிட்டுவிட்டு நல்லதொரு வாழ்வை அமைத்து கொண்டதாக அறியப் பட்டேன்.

இப்பொழுது இந்த இரண்டாவது குரூப்பிற்கு என்னாயிற்று? அவர்களின் தினப்படி பழக்க வழக்கங்கங்களில் சில மாற்றங்களை திருத்தி அமைத்தார்கள். உதாரணமாக, ஒருவர் எழுந்து அமர்ந்தவுடனே, சரியாக அமரும் ஒரு முறையையும், சரியாக சுவாசிக்கும் ஒரு விசயத்தையும் மனத்தை அதன்பால் குவித்து கவனமாக செய்யும் பொழுது, இரத்த ஓட்டமும், சுவாசமும் சரியாக நடைபெறும் பட்சத்தில் அதனையொட்டிய எண்ணவோட்டமும் சீரடைய வாய்ப்புண்டல்லவா? இதற்கு எதற்கு வியர்வை சிந்த வேண்டும்?

இரத்த ஓட்டமும், சுவாசமும் முறைப்படி நடைபெறும் பொழுது தினப்படி நாம் சேகரிக்கும் இந்த மன அழுத்தத்தை அதன் போக்கிலேயே வந்த வழியிலேயே அனுப்பி விட முடியுமென்பது எனது எண்ணம்.

அது போலவே நிறைய சைக்கோலாஜிகள் டிஸ்ஸர்டர்களுக்கு, சில யோக முறைகளும் பரவலாக இப்பொழுது மேற்கத்திய நாடுகளில் 'குணப்படுத்தக் கூடிய தெரபிகளில்" ஒன்றாக சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தாகி விட்டது.

பாரி, உதாரணமாக உங்களுக்கு 45 வயதாகியும் இன்னமும் கொலஸ்டிரல் மற்றும் இரத்தக் கொதிப்பு தலை வைத்து படுக்க வில்லையென்றால், மறைமுகமாக உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நீங்க செய்யும் அந்த யோகாவும் ஒரு காரணமென்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மற்றபடி தடகள உடற் பயிற்சிக்கும், யோகாவிற்கு நிறைய வேறுபாடுகளுண்டு. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்... இப்போதைக்கு இது போதும். பின்னூட்டங்களிலும் மேலும் பேசுவும். நன்றி! வணக்கம்!!

65 comments:

Thekkikattan|தெகா said...

பி.கு: மீண்டும் ஒரு முறை எல்லோருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது. இங்கு இரு தரப்பினரின் பார்வையையும் வைத்தால் எல்லோருக்கும் நலம் பயக்கும் என்பதே அது.

வவ்வால் said...

தெகா,
உங்களின் முந்தையப்பதிவைப்படிக்கவில்லை, படித்துவிட்டு வருகிறேன்,

ஆனால் அதற்கிடையில் ,பாரி சொன்னது போல யோகாவை தடகள அல்லது உடல்பயிற்சியுடன் ஒப்பிடுவதும் தவறு, அதே போல நீங்கள் சொன்னது போல யோகவை மூச்சுப்பயிற்சியுடனும் தொடர்பு படுத்துவதும் தவறு, மீண்டும் வந்து விரிவாக பேசுகிறேன் !

Thekkikattan|தெகா said...

//அதே போல நீங்கள் சொன்னது போல யோகவை மூச்சுப்பயிற்சியுடனும் தொடர்பு படுத்துவதும் தவறு,//

வவ்ஸ், அதெப்படி யோகாசனங்களுக்கும் மூச்சுப் பயிற்சிக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவீர்கள்? ஓவ்வொரு பொஷிசன் மாற்றி செய்யும் பொழுதும் மூச்சை எவ்வளவு நேரம் உள் வைக்க வேண்டும், எப்பொழுது வெளியேற்ற, உள்ளிழுக்க வேண்டும் என்பதனைப் போன்றல்லாம் இருக்கிறது.

அப்படி முறையற்று செய்யும் பொருட்டுதான் அதுவே தவறான உடல் உபாதைகளுக்கு அடிகோலிடுகிறது.

ஆமாம், ப்ரனயாமம் என்பது யோகாவின் ஒரு உட்பிரிவுதான் என்றாலும், உடற் ஆசனங்கள் பண்ணும் பொழுது இவைகளை இணைத்து விடுகிறோம்...

வாங்க வந்து சொல்லுங்க வேற என்ன இருக்குதுன்னு தெரிஞ்சுக்குவோம்... அப்பாடா, வவ்ஸ் வந்தாச்சு... :)

மங்கை said...

யோகாகெல்லாம் ரணகளம் ஆகிறது உங்க பதிவுல தான்...கீப் இட் அப்

என் ஆஸ்துமா பிரச்சனைக்கு மூச்சு பயிற்சி பண்ண சொல்லாத ஆளே இல்லை..வவ்வால் என்ன இப்படி சொல்றார்...இந்த மூச்சு பயிற்சினால் தான் நான் இப்ப ஃபிரீயா ந்டமாடீட்டு இருக்கேன்...முக்கியமா ஒரு மாசமா

காட்டாறு said...

//யோகவை மூச்சுப்பயிற்சியுடனும் தொடர்பு படுத்துவதும் தவறு//

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? உடற்பயிற்சியாகட்டும், யோகாவாகட்டும், முதலில் நம்மிடம் சொல்லுவது... செய்யும் போது மூச்சு எப்படி உள்ளிழுத்து வெளியிட வேண்டும் என்பது தான். தெகா வெறும் மூச்சுப்பயிற்சி மட்டும் பற்றி சொல்லவில்லைன்னு நினைக்கிறேன். மூச்சுப்பயிற்சி யோகாவுடனோ, உடற்பயிற்சியினுடனோ சேர்ந்திருந்தால் தான் நன்று. Both go together.

நான் சிறுவயது முதல் உடற்பயிற்சி செய்து வருகிறேன். என் மாஸ்டர் முதல்ல எங்களுக்கு சொல்லித்தந்தது மூச்சுப்பயிற்சி தான். அதன் நன்மை தீமைகளையும், ஏன் செய்ய வேண்டும், எப்போது செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லித்தந்தார். அப்புறம் யோகா கற்கும் வாய்ப்பு கிடைத்த போதும், இதே மாதிரி தான் சொன்னார்கள். எல்லாரும் சொல்லித் தந்ததால், சரி தவறு என்று கூட வரவில்லை. இரண்டும் சேரும் போது நம்முள் நடக்கும் மாற்றங்களை அறிந்ததால் தான் சொல்கிறேன்.

இன்னும் விளக்கனுமின்னா... தெகா பதிவுக்கு மறுமொழி எழுதுறதுக்கு பதில்... பதிவு எழுதுன மாதிரி ஆயிரும். ஆகவே.. ஜூட்..

வவ்வால் said...

தெகா,
//அப்பாடா, வவ்ஸ் வந்தாச்சு... :)//

என்னமோ என்னை மாட்டி விட்டு நீங்க எஸ் ஆகலாம்னு பார்க்கிறாப்போல இருக்கே!

//ஓவ்வொரு பொஷிசன் மாற்றி செய்யும் பொழுதும் மூச்சை எவ்வளவு நேரம் உள் வைக்க வேண்டும், எப்பொழுது வெளியேற்ற, உள்ளிழுக்க வேண்டும் என்பதனைப் போன்றல்லாம் இருக்கிறது.//

ஆமாம் ஆனால் ஒவ்வொரு பொசிஷனிலும் எத்தனை முறை அப்படி மூச்சை இழுத்து வெளியிடுவீர்கள், அந்த நிலைக்கு போகும் முன்னர் இழுத்தால் அந்நிலை மாறும் வரை அடக்கி வைத்திருப்பீர்கள்,அதே போசிஷனில் இழுது விட்டு என்று எதுவும் செய்ய மாட்டீர்கள்.

ஆனால் மூச்சுப்பயிற்சி என்பது ஒரு நிமிடத்திற்க்கு எத்தனை முறை மூச்சு இழுத்து வெளியிடுகிறீர்கள் என்பதை செய்வதே.

எந்த யோகா நிபுணரும், ஆசனங்களும்(யோகா), மூச்சு பயிற்சியும்(பிரணாயமம்) ஒன்று என்று சொல்ல மாட்டார்கள்.

மூச்சுப்பயிற்ச்சி என்பது யோகாவின் "precursor" யோகா செய்வதற்கு முன்னர் சிறிது மூச்சு பயிற்சி அவசியம். ஏன் எனில் ஆசனங்களில் அமரும் போது மூச்சடக்க நேரிடும் அது கடினமாக தெரியாமல் இருக்க , யோக ஆரம்பிக்கும் முன்னர் பிராணயமம் பற்றி சொல்லி அதை செய்ய வைப்பார்கள்.

மங்கை, இப்போது புரிந்து இருக்கும் மூச்சு பயிற்சி என்பது யோகா செய்யாமலே செய்யக்கூடியது, நீங்கள் தனியாகவும் செய்யலாம்.

ஏன் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.உடல் யோகா செய்ய தயார் ஆகும்(warm up) மேலும் மூச்சு அடக்குதல், உடல் நெகிழ்தல் எல்லாம் அப்போது தான் ஆசனங்கள் செய்ய எளிதாக வரும்.

சாதாரணமாக நாம் ஒரு தடவை மூச்சை இழுக்கும் போது அதில் உள் வரும் அத்தனை பிராணவாயுவும்(ஆக்சிஜனை) நாம் உடல் பயன்ப்படுத்துவதில்லை, மேலும், நம் உடலில் இருக்கும் அத்தனை கரியமில வாயுவும்(co2) முழுவதும் வெளியேறுவதில்லை, இந்த விகிதாச்சாரம் சரியாக நடந்தால் நம் உடல் ஆரோக்கியம் நன்கு இருக்கும், அதற்கு தான் மூச்சுப்பயிற்ச்சி செய்ய வேண்டிய நிலை.

அதே போல ஒரு நிமிடத்திற்க்கு சராசரியாக இத்தனை முறை சுவாசிக்க வேண்டும் என்று நியதி, ஆனால் அவர் அவர் உடல் நிலைப்பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ சுவாசிப்போம் அதை எல்லாம் போக்கி ஒரு நிலையான சுவாசம் செய்ய வழி செய்வது தான் முச்சுப்பயிற்சி!

இதைப்பொறுத்தே உடல் நாடி அமையும், நம் நாடிப்பிடித்து வைத்தியம் செய்வதும் இப்படித்தான்,ஆங்கில மருத்துவர்கள் கூட இதயத்துடிப்பையும் நம் மூச்சு இழுத்து விடுவதையும் ஸ்டெத் வைத்து கவனிப்பது இதனால் தான்.

ஒருவனுக்கு பித்த நாடி ஒடுங்கி விட்டால் மரணம் அருகில் என்பது வைத்தியம் கூறும் உண்மை, பெரும்பாலும் கை ரேகை ஜோதிடம்ப்பார்ப்பவர்கள் நம் நாடியை வைத்து தான் நமக்கு ஜோதிடம் சொல்வார்கள்!ஆயுசுக்கெட்டி என்றெல்லாம் அதை வைத்தே சொல்வார்கள்(விரல் நுனி,மணிக்கட்டில் நாடிப்பார்க்கலாம்)

ஆனால் யோகா என்பது முற்றிலும் வேறு!

உடல் பயிற்சி என்பது ஒரு எடை அல்லது எதிர்ப்பை உடல் அனுபவிக்க செய்வது, அதாவது உடலை முறுக்கேர வைத்து பண்படுத்துவது, அதே சமயம் யோகா என்பது தசைகளின் மேல் எடை, அல்லது டென்சன் இல்லாமல் அதே சமயம் அப்படி இருந்தால் ,செய்தால் கிடைக்கும் பலனை அடைய செய்வது.

உடல் தசைகளை நெகிழ செய்வதன் மூலம் செய்யும் பயிற்சி, மேலும் உடல் தசைகள் மட்டும் அல்லாமல் உடல் உள் உறுப்புகளையும் பயிற்சி செய்ய வைப்பது.

பொதுவாக யோகா செய்த பிறகு உடல் பயிற்சிகள், வெயிட் தூக்கி செய்யும் பயிற்சிகள் செய்ய கூடாது, ஏன் எனில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்றுக்கு எதிரான வகை சார்ந்தது.

காலையில் யோகா செய்தால் மாலையில் உடற்பயிற்சி செய்யலாம்!

ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது, அதனால் தான் இதனை உடற்பயிற்சி எனக்கருதுவது தவறு என பாரிக்கும் சொன்னேன்!

பிராணயமம், யோகா , தியானம் இந்த வகையில் வருது தான் சிறந்த முறை!

ஒன்று மற்றதுக்கு நம் உடலை தயார் செய்யும் பயிற்சி!

உடற்பயிற்சி தனியாக செய்துக்கொள்ள வேண்டும்.அப்படி செய்யவில்லை என்றாலும் ஒன்றும் சேதம் இல்லை. மேற் சொன்ன மூன்றே போதும் நலவாழ்விற்கு!

Unknown said...

தெக்ஸ்,
யோகா பத்தி எனக்கு எதுவும் தெரியாதுங்கறதுனாலே. கப் சிப்! ஆனா, யோகா நோயைக் குணப்படுத்தும் என்பதை விட, நோய் வராமல் கொஞ்சம் தள்ளிப் போடும்னு சொல்லலாமா?

வவ்ஸ், இவ்ளோ சின்ன வயசில(!?) அவ்ளோ தெளிவு... யப்பா..

அமெரிக்காவுல, யோகா ஒரு பெரிய பிசினஸா ஆகிட்டு வருது. பயன் இருக்கோ இல்லையோ!
இங்கேதான் எதையுமே விட்டு வைக்க மாட்டானுங்களே, வெயாபாரமா ஆக்கிப் புடுவானுங்களே. யோகா இந்தியாவில் தோன்றியதுங்கறதுல, இந்தியன் என்ற முறையில், கொஞ்சம் சந்தோஷம்!

Thekkikattan|தெகா said...

தஞ்சாவூராரே,

வாங்கானும் வாங்க!

//யோகா நோயைக் குணப்படுத்தும் என்பதை விட, நோய் வராமல் கொஞ்சம் தள்ளிப் போடும்னு சொல்லலாமா?//

அதே, அதே. நீண்ட காலங்களாக தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு அப்படி ஏதாவது ஒன்று எட்டிப் பார்த்த மாதிரி இருக்கான்னு என் வட்டத்திற்குள் இருக்கும் வரை பார்த்தால் கண்ணுகெட்டிய தூரம் வரைக்கும் யாரும் தென்படவில்லை.

வவ்ஸ்_ஆ, அவர எதில சேர்க்கிறது :-)).

//அமெரிக்காவுல, யோகா ஒரு பெரிய பிசினஸா ஆகிட்டு வருது.//

ஆமாம, இன்னிக்கு இது இங்க ஒரு மல்டை பில்லியன் டாலர் வியாபாரம். எல்லாத்துக்கும் ஒரு டூல்ஸ் இருக்கு, அதெல்லாம் பார்த்தா ஒரே காமெடியா இருக்கு. இதனின் அடிப்படை விசயத்தையே அசைத்துப் பார்ப்பது போல் உள்ளது.

இன்னொரு விசயம் தஞ்சாவூரார், நான் அடுத்த மாதம் உங்கூருக்கு வாரேன்... கொஞ்சம் ஈமெயில் ஐ.டி கொடுங்க சொல்றேன்.

வவ்வால் said...

தெகா,

//வவ்ஸ்_ஆ, அவர எதில சேர்க்கிறது :-)).//

காலை வாருவது போல இருக்கே :-))

கொஞ்சம் மேலும் சில விவரங்களை சொல்லிவிடுகிறேன்,

காட்டாறு,மங்கை போல நிறையப்பேரு இப்படி யோகா, பிராணயமம் எல்லாம் ஒன்று என்று குழப்பிக்கொள்கிறார்கள்.

B.A படித்துவிட்டு M.A படிப்பதால் இரண்டும் ஒன்றாகி விடுமா அது போல தான். பிராணயமம், ஆசனம், தியானம் எல்லாம் தனித்தனி கலை, ஆனால் பெரும்பாலும் ஒரே ஆசான் இவற்றைக்கற்றுத்தருவதாலும், ஒன்றுக்கு அடுத்து ஒன்று போனால் பலன் என்பதாலும் ஒன்று போல மக்கள் நினைத்து விடுகிறார்கள்!

ஒருவர் பிராணயமம் மட்டுமே செய்து வந்தாலும் பலன் உண்டு, யோகா செய்யாமல்.

ஆர்ட் ஆப் லிவிங்கில் எல்லாம் வெறும் பத்மாசனம்,கொஞ்சம் மேலே போனால் வஜ்ராசனம் சொல்லிவிட்டு பிராணயமம் சொல்லித்தந்து விட்டு பெரிதாக சொல்லிவிட்டதாக காட்டிக்கொள்வார்கள். அவர்கள் சொல்லித்தருவது எளிதாக இருப்பதாலே அனைவரும் பின் பற்றுகிறார்கள்.கூட்டம் சேர்கிறது!

தஞ்சாவூரார், மற்றும் நீங்கள் சொன்னது போல இது பெரும் வியாபாரம் ஆகி விட்டது இப்போது, இதனுடன் இயற்கை உணவு, உணவே மருந்து என்ற கான்செப்டும் சேர்ந்து சக்கைப்போடு போடுகிறது. இதை எல்லாம் 1000 வருஷம் முன்னரே நம்மாளுங்க சொல்லியாச்சு என்பது தான் கவனிக்கதக்கது!

வெறும் பச்ச தண்ணி குடிச்சா அது அமிலத்தண்மை, அதுவே சுடு நீர் குடித்தால் அது காரத்தண்மை என எல்லா வகை உணவுக்கும் ஒரு இயல்பு இருக்கு நம் உடல் வாகுக்கு ஏற்ப சாப்பிட்டால் ஆயுள் கூடும்.

இது போல உணவே மருந்தில் நிறைய இருக்கு!

the monk who sold his ferrari by robin sharma என்ற புத்தகம் படித்தாலே தெரியும், பெஸ்ட் செல்லர் புத்தகம் அது அமெரிக்காவில்.இயற்கை உணவு , மூச்சுப்பயிற்சி பற்றி இந்தியாவில் சொல்லப்பட்டதை வைத்து எப்படி அமெரிக்காவில் காசு பண்ணுகிறார்கள் என்பது.

யோகாசனங்களை முறைப்படி தொகுத்தவர் பதஞ்சலி என்ற முனிவர் தான், சித்தர் என்றும் சொல்லலாம்.

பெரும்பாலான ஆசனங்கள் மிருகங்களின் வாழ்க்கையில் இருந்து பெறப்பட்டது தான்(postures of animal). காட்டில் வாழும் மிருகங்கள் எல்லாம் நோய் இல்லாமல் வாழ்வதைப்பார்த்து அதன் பயன்களை ஆய்ந்து ஆசனங்களாக மனிதர்களுக்கும் சொல்லி இருக்கிறார்கள்.வாத்யசானர் கூட மிருகங்களினை வைத்தே பல முறைகளை வகுத்தார் என்பது உபரி தகவல்!
--------------

தஞ்சாவூரார்,
//வவ்ஸ், இவ்ளோ சின்ன வயசில(!?) அவ்ளோ தெளிவு... யப்பா..//

இப்போ என்னை என்னவென்று சொல்கிறீர்கள், கிழவன்/குமரன் ? என்ன அநியாயம் இது, ஒரு சின்னப்பையன் ஒருத்தன் எதுவும் விவரமா சொல்லக்கூடாது போல இருக்கே!

Thekkikattan|தெகா said...

தஞ்சாவூரான் said...

//இன்னொரு விசயம் தஞ்சாவூரார், நான் அடுத்த மாதம் உங்கூருக்கு வாரேன்... கொஞ்சம் ஈமெயில் ஐ.டி கொடுங்க சொல்றேன்.//

ரொம்ப சந்தோசம். என்னோட மெயிலுக்குத் தகவல் அனுப்புங்க. ஓடி ஒளிய வசதியா இருக்கும் :)
சும்மா சொன்னேங்க. கண்டிப்பா வீட்டுக்கு வாங்க. தனியா வரீங்களா, குடும்பதோடவா?

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

//காலை வாருவது போல இருக்கே :-))//

பார்த்தீங்களா, என்னயே நம்ம மாட்டீங்கிறீங்க :-).

உண்மையைத்தானே சொன்னேன், உங்களை எதிலும் வைத்து வகைப் படுத்த முடியாதென்று.

பாருங்க வந்திங்க எவ்வளவு விசயம் வெளியில வந்திருக்கு, இனிமே யாருக்காவது சந்தேகம் வருமா ;). நெறைய சொல்லி இருக்கீங்க, நன்றி! திரும்ப வாரேன்.

Anonymous said...

Hello The ka

you know வவ்ஸ் one of the assanam

like reverse position of Sirrasasanam so our friend vowwel
do yoga their own life so we learn
yoga through nature creation one who said that is true because it is more closer.

and one more thing
காலை வாருவது போல இருக்கே :-))//

wovvel is small bird it can not
slip our leag dont worry.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

உடல் என்கிற இயந்திரத்தை எப்படி பராமரிப்பது? அதில் உடற்பயிற்சியின் பங்கு என்ன?

உடற்பயிற்சியில் இருக்கிற வகைகள் என்னென்ன?

மூச்சுப்பயிற்சிக்கும், தியானத்திற்க்கும் உள்ள தொடர்பென்ன? (ஏற்கனவே கல்வெட்டு சொல்லியிருக்கிறார் தூங்குவதே மிகச்சிறந்த தியானம் என்று) இதையும் விளக்கணும்.

வவ்வால்,

ஃஃ
அதே சமயம் யோகா என்பது தசைகளின் மேல் எடை, அல்லது டென்சன் இல்லாமல் அதே சமயம் அப்படி இருந்தால் ,செய்தால் கிடைக்கும் பலனை அடைய செய்வது.
ஃஃ

யோகா உடலை எப்படி பயிற்றுவிக்கிறது என்பது (முறைகள்) வேறுபடுகிறது. அதே உடற்பயிற்சி கூடத்தில் செய்யப்படும் முறைகள் வேறு, இரண்டும் எதிர்திசைகள். ஆனால் இரண்டுமே உடலை பயிற்றுவிக்கிறது என்பதே உண்மை.

நான் மேலே கேட்ட கேள்விகளுக்கு, தனியாக பதிவெழுதி போடுகிறேன்.
கொஞ்சம் தாமதமாகும் :))

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

ஃஃ
அமெரிக்காவுல, யோகா ஒரு பெரிய பிசினஸா ஆகிட்டு வருது. பயன் இருக்கோ இல்லையோ!
இங்கேதான் எதையுமே விட்டு வைக்க மாட்டானுங்களே, வெயாபாரமா ஆக்கிப் புடுவானுங்களே. யோகா இந்தியாவில் தோன்றியதுங்கறதுல, இந்தியன் என்ற முறையில், கொஞ்சம் சந்தோஷம்!
ஃஃ

தஞ்சாவூரான்,

மற்ற உடற்பயிற்சி முறைக்கு ஒன்று உடற்பயிற்சிக்கூடம் (gym) தேவை அப்புறம் அதற்க்கு உபகரணங்கள் தேவை. நீச்சலுக்கு நீச்சல் குளம் தேவை. அதிகரித்து வரும் வணிக உலகில் இவற்றுக்கான பொருளாதாரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால்...

யோகா விற்க்கு 10x10 அறை போதும், வேறெதுவும் உபகரணங்கள் தேவையில்லை. கற்று தருவதும் எளிது.

என்னுடைய அனுபவம், நீச்சலே மிகச்சிறந்த பயிற்சி. வாரத்திற்க்கு இரண்டு மணி நேரம், பல்வேறு வகை நீச்சல் செய்தால் உடல் வடிவாகவும், பொலிவுடனும் இருக்கும்...

நன்றி

வவ்வால் said...

மேலே போட்டு இருக்கும் இரண்டு பின்னூட்டத்தையும் பார்த்தால் பாரி அரசு தெளிவா குழம்பி போய் இருக்கார்னு மட்டும் தெரியுது! :-))

Anonymous said...

யோகா செய்வது உடல் உபாதைகளைக் குறைக்கும் என்பது இருக்கட்டும். நரம்புத்தளர்ச்சி (வரிக்கோஸ்) உள்ளவர்களுக்கு அது ஏற்றதா?

ஏற்றதெனில் அதற்கான ஆசனங்களைப் பரிந்துரைக்க முடியுமா? (பெயர் மட்டும்)

இங்கே யோகாசன experts பலர் இருப்பதாக நம்புகிறேன்... :)

(mostly theks and vows)

சுரேகா.. said...

எனக்கு தெரிஞ்சு மூச்சுப்பயிற்சி, யோகாவோடு சம்பந்தப்பட்டதுதான்.!

மூச்சுப்பயிற்சி இல்லாததுதான் உடல்பயிற்சியா ஆகிடும்!

ஏன்னா..சில ஆண்டுகளா நான் செய்துவரும் யோகாவால், என் ஒவ்வாமை நீங்கிடுச்சு!
(நீண்டநாள் உடற்பயிற்சியால் சாதிக்கமுடியாதது)

Anonymous said...

//மூச்சுப்பயிற்சி, யோகாவோடு சம்பந்தப்பட்டதுதான்//

காலில் பரம்பரையாக வரும் நரம்புத்தளர்ச்சி நீங்குமா?
நீங்கா விட்டாலும் பயிற்சிகளால்
விபரீதம் ஏற்படுமா?

(எனக்கு நரம்புத்தளர்ச்சி வலது காலில் மட்டும் இலேசாக உள்ளது.
பரம்பரையாக வந்ததுதான் (தாய் வழியில்.. அவருக்கு இரண்டு
காலிலும் அதிகமாக இருக்கிறது)

சிலர் செய்யக்கூடாது என்கின்றனர்.

பிற்காலத்தில் அறுவை சிகிச்சையின்றி இப்பொழுதே யோகா மூலம் குணப்படுத்த முடியுமா என்பதே
என் பிரச்சினை.

(3 நிமிடங்களுக்கு மேல் தியானம் செய்வதற்கு விறைப்பு ஏற்படுவதால் முடியாததும் பள்ளியில் கராத்தே பழகமுடியாததும் தனிப்பட்ட சோகங்கள்)

நன்கு அறிந்தவர்கள் தயவு செய்து விளக்குங்கள்.

மீண்டும் அதே அனானிமஸ்

வவ்வால் said...

சுரேகா,
அதான் தெளிவா மூச்சுப்பயிற்ச்சி யோகாசனாவின் "precursor" ஆக சொல்லலாம் என்று சொல்லி இருக்கேனே.தொடர்பு என்றால் அப்படிப்பட்ட தொடர்பு தான் இரண்டும் ஒன்று சொல்வது அல்ல!

இரட்டையர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.

யோகாவை அனைவரும் செய்யக்கூடாது, உ.ம் கர்ப்பிணிகள், இதய நோய் , மற்றும் ஆபரேஷன் செய்துக்கொண்ட உடனே , மேலும் சிலருக்கும் செய்வது சரி அல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் மூச்சுப்பயிற்சி அனைவருக்கும் ஏற்றது. இரண்டும் தனி தனிக்கலை. எனவே பிராணமயத்தை யோகா என்று சொல்வது குழப்பித்தினால் தான்.

-----------
அனானி,
நான் எல்லாம் யோக மாஸ்டர் இல்லை எதாவாது சொல்லி எதாவது ஆகிடப்போகுது.தெகாவுக்கு தெளிவாக தெரிய வாய்ப்பிருக்கு!

//நரம்புத்தளர்ச்சி (வரிக்கோஸ்) உள்ளவர்களுக்கு அது ஏற்றதா?//

வெரிக்கோஸ் என்பது நரம்புதளர்ச்சியா , நீண்ட நேரம் நிற்பவர்கள், சைக்கிள் அதிகம் மிதிப்பவர்களுக்கு கெண்டைக்கால் நரம்பில் வரும் முடிச்சு தானே அது!

நரம்பு தளர்ச்சிக்கு மூச்சுப்பயிற்சியுடன் கூடிய யோக,மேலும் தியானம் செய்யலாம். நரம்பு தளர்ச்சி வருவதே பதட்டத்தினால் தான். உங்கள் இதயதுடிப்பு சீராகிவிட்டாலே சரியாகிவிடும்.

இன்னொரு மூலிகை மருத்துவமும் இருக்கு, வல்லாரை கீரையை உலரவைத்து பொடி செய்து தேனில் குழைத்து உண்டால் நரம்பு வலுப்பெறும்.மூளைக்கும் நல்லது.அதே பொடியை மோரில் கரைத்து காலையில் குடித்தாலும் நல்லது.பொடி ஒரு டீஸ்பூன் தான் ஒரு நாளைக்கு! :-))

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

//
மேலே போட்டு இருக்கும் இரண்டு பின்னூட்டத்தையும் பார்த்தால் பாரி அரசு தெளிவா குழம்பி போய் இருக்கார்னு மட்டும் தெரியுது! :-))
//
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் திரு.வவ்வால் அவர்களே!
என்ன குழம்பி இருக்கிறேன் என்றால் விளக்கவும்!

Thekkikattan|தெகா said...

அனானி,

//இங்கே யோகாசன experts பலர் இருப்பதாக நம்புகிறேன்... :) //

Experts என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. அனுபவிப்பதை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற நல்லெண்ணத்தின் பெயரிலேயே இடப்பட்டதே இவ் இடுகை.

//காலில் பரம்பரையாக வரும் நரம்புத்தளர்ச்சி நீங்குமா?
நீங்கா விட்டாலும் பயிற்சிகளால்
விபரீதம் ஏற்படுமா?//

இது போன்ற கேள்விகளை, அருகில் உள்ள நல்ல யோகா மையங்களில் உங்களின் தனிப்பட்ட உடம்பு சார்ந்த ப்ரச்சினைகளை சொல்லி அதற்கான முறைகளை பின் பற்றவும்.

இது போன்ற உபயோகமான கேள்விகளைக் கூட கேற்பதற்கு எதற்கு அனானி பெயரில் வரிகிறீர்கள்? பெயராவது கூறலாமே, பார்க்க நன்றாக இருக்குமே...

Anonymous said...

வவ்ஸ்,

//எதாவாது சொல்லி எதாவது ஆகிடப்போகுது//

மன்னிக்கவும். பதிலுரைத்தமைக்கு நன்றி.

/தெகாவுக்கு தெளிவாக தெரிய வாய்ப்பிருக்கு../

அவர் கூற விரும்பவில்லை போலும்.. :(

தெக்ஸ்,

//இது போன்ற கேள்விகளை, அருகில் உள்ள நல்ல யோகா மையங்களில் உங்களின் தனிப்பட்ட உடம்பு சார்ந்த ப்ரச்சினைகளை சொல்லி அதற்கான முறைகளை பின் பற்றவும்.//

அறிவுரைக்கு நன்றி.

//இது போன்ற உபயோகமான கேள்விகளைக் கூட கேற்பதற்கு எதற்கு அனானி பெயரில் வரிகிறீர்கள்? பெயராவது கூறலாமே, பார்க்க நன்றாக இருக்குமே...//

-

ரவீந்திரன்,
சிங்கப்பூர்

Thekkikattan|தெகா said...

வாங்க வாங்க டாக்டர்,

பயணமெல்லாம் நல்ல படியாக முடிந்ததா?

வந்ததும் வராததுமா எனக்கு சப்போர்ட்டோட வாரீங்க... நன்றி, நன்றி!

வவ்வால் said...

ரவிசந்திரன் என்கிற அனானி,

//அவர் கூற விரும்பவில்லை போலும்.. :(//

அவரை தப்பாக நினைக்க வேண்டாம் , நான் நேரடியாக சொன்னதை தான் தெகாவும் சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் நேரடியாக எதாவது யோகா மாஸ்டரிம் கேட்டு, அவர் ஆலோசனை பேரில் செய்வது தான் சரி!

எந்த வித தீங்கும் வராத ஒரு மாற்று மூலிகை மருத்துவமும் நான் சொல்லியுளேன், அதனால் உங்களுக்கு பலன் இருக்கோ இல்லையோ தீமை எதுவும் வராது.

வல்லாரை என்பது நரம்பு , மூளைக்கு மிகவும் நல்லது. தினசரி கூட வல்லாரை கீரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஆனால் முக்கியமான ஒன்று அப்படி கீரை சமைக்கும் போது தாளிக்க கூடாது!(தாளித்தல் என்றால் தெரியும் தானே)

எந்த கீரையும் சரி அதனுடன் 3:1 (3 கைப்பிடி ஆய்ந்த கீரை , ஒரு கைப்பிடி பாசி பருப்பு)என்ற விகிதத்தில் பாசி பருப்பு சேர்த்து சமைத்து கடைந்து ... சுடு சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் முழு பலனும் கிடைக்கும்! எண்ணை சேர்ப்பது தாளிப்பது செய்ய கூடாது!

உங்கள் பிரச்சினைக்கு யோகாவில், பிராணயமத்தில் நல்ல பலன் கிடைக்கும் கொஞ்சம் நாள் ஆகும், நம்பிக்கையுடன் அருகில் உள்ள ஒரு யோகா மாஸ்டரை அணுகவும்.

வவ்வால் said...

//கருவுற்ற 3 வது மாதத்திலிருந்து யோகா செய்து வந்தால் சுக பிரசவத்திற்கு நல்ல வாய்ப்புண்டு..//

டாக்டர் சொல்லி இருப்பதால் எதாவது தெரிந்திருக்கலாம் என கேட்கிறேன், 3 மாதத்தில் இருந்து எத்தனை மாதம் வரை செய்யலாம், நிறை மாதக்கர்ப்பிணி என்ப்படுகிற 8,9,10 இல் செய்யலாமா?

எனக்கு தெரிந்த வரைக்கும் அவர்கள் செய்யக்கூடாது என்பார்கள்!

ஒரு வேளை நீங்கள் பத்மாசனம் போட்டு (அல்லது சும்மா சப்பளங்கால் போட்டு உட்கார்ந்து மூச்சுப்பயிற்சி செய்வதை யோகா என்கிறீர்களா)

அப்படி எல்லாரும் எக்காலமும் செய்யலாம்!

முழுவதாக யோகாசனம் செய்வது என்பது வேறு என்று நான் நினைப்பதால் இதனைக்கேட்டேன்!

Thekkikattan|தெகா said...

//அவரை தப்பாக நினைக்க வேண்டாம் , நான் நேரடியாக சொன்னதை தான் தெகாவும் சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் நேரடியாக எதாவது யோகா மாஸ்டரிம் கேட்டு, அவர் ஆலோசனை பேரில் செய்வது தான் சரி!//

வவ்ஸ், மிகச் சரியாக எனக்காக விளக்கமளிப்பதற்கு எனது நன்றிகள். அடிச்சி விளையாடுங்க.

எனது முதல் பதிவில் இதற்கான விளக்கத்தை தெளிவாக சொல்லியிருக்கேன். இது போல அரைகுறையாக தெரிந்து கொண்டு செய்யும் பொழுது கிடைக்கும் பலன்களை விட, பாதகங்களே அதிகம் கொண்டு வந்து சேர்க்கும்.

நேரடியாக முறைப்படி கற்றுகொள்வதுதான் சாலச் சிறந்தது.

வவ்ஸ், மாசமுற்ற சமயத்தில் செய்யக் கூடிய யோகா சார்ந்த புத்தகங்கள் நிறைய கிடைக்கிறது. அதில் சில சிறப்பு யோகசனங்களுமுண்டு.

வவ்வால் said...

தெகா,
//எனது முதல் பதிவில் இதற்கான விளக்கத்தை தெளிவாக சொல்லியிருக்கேன். இது போல அரைகுறையாக தெரிந்து கொண்டு செய்யும் பொழுது கிடைக்கும் பலன்களை விட, பாதகங்களே அதிகம் கொண்டு வந்து சேர்க்கும்.//

இதனால் தான் எதாவது சொல்லி எதாவது ஆகிடப்போகுதுனு சொன்னேன்! யோகானு இல்லை மருத்துவ குறிப்புகள் சொன்னாலும் அப்படித்தான், கேள்விக்கேட்டவர் ஏதேனும் கவனக்குறைவாக சரியாக சொல்லாமல் இருந்து இருப்பார், நாம் ஒரு மருத்துவம் சொல்ல அவர்களாகவே முயற்சி செய்து வினையாகிவிடவும் வாய்ப்புள்ளது!

இயற்கை மருத்துவத்தில் மட்டும் பலன் இருக்கோ இல்லையோ ஆனால் பக்க விளைவு இருக்காது, ஒன்றே ஒன்று அந்த மருத்துவம் மூலம் சரி ஆகிடும்னு சும்மா இருந்தேன்னு அப்புறமா சொல்லக்கூடாது!

ஆலோசனைக்கேட்பர் தைரியமாக இருக்கணும்!

நீங்கள் சொன்னது போல போல ஒரு அறிமுக உரையாக மட்டுமே இதை எல்லாம் எடுத்துக்கணும்!

//வவ்ஸ், மாசமுற்ற சமயத்தில் செய்யக் கூடிய யோகா சார்ந்த புத்தகங்கள் நிறைய கிடைக்கிறது. அதில் சில சிறப்பு யோகசனங்களுமுண்டு.//

இப்போலாம் பலரும் அப்படி கிளம்பி இருக்காங்க ,சாதாரண மூச்சு பயிற்ச்சி , பத்மாசனம் எல்லாம் யோகானு சொல்லிக்கிட்டு.

ஒருத்தர் யோகாசனம் செய்றார்னா 10-12 ஆசனங்கள் பழக வேண்டும் அது தான் யோகாசனம் , மற்றப்படி ஒரு பொசிஷன் மட்டும் சொல்லிவிட்டு ஆசனம் சொன்னால் அது ஏமாற்று வேலை காசு வாங்கும் செயல்!

கர்ப்பிணிகள் செய்யலாம், ஆனால் 3-5 மாதங்கள் சரி, 3வது மாசம் வரைக்குமே பலருக்கும் கர்ப்பம்னு கண்டுப்பிடிக்க முடியாமல் இருப்பார்கள்!

பொதுவாக கர்ப்பமாக வயத்தை தள்ளிக்கிட்டு போய் எதாவது ஒரு யோகா மாஸ்டரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் என்ன சொல்வார்கள்! "they never admit that person" அதைத்தான் நான் சொன்னேன்!

மற்றப்படி சில பயிற்சிகள் சில மாசங்கள் வரை மட்டும் செய்யலாம்,அனேகமாக 5-6 மாதங்கள் , ஆனால் அதனை முழுசாக யோகாசனம் செய்தேன், கற்றேன் என சொல்லிக்கொள்வது சரி அல்ல!

மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்கிறேன் பொதுவாக கர்ப்பிணிகள் செய்வதை யோகா மாஸ்டர்கள் வேண்டாம் , (தவிர்க்க)என்று சொல்வார்கள்(ஏன் எனில் அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்), ஆனால் அவர்களும் செய்யலாம் என்றே இருக்கிறது.

Thekkikattan|தெகா said...

சில பயன்கள் குறிப்பிட்ட காலங்கள் வரை கர்பமுற்ற பெண்கள் சில எளிமையான யோகா பயிற்சிகள் செய்வதால்...

திருடிப் போட்டது... :)

Yoga and Pregnancy:

Yoga Asanas or exercises are ways of moving or holding the body in different positions.

Yoga has several exercises or postures that work wonders on a woman’s health and in pregnancy conditions. Varying widely in application and style, these exercises (postures) gently stretch and explore all parts of your body.

During pregnancy, yoga Asanas are a gentle way to keep active and supple. The remarkable effects of these postures in pregnancy show the power of yoga for ensuring a smooth pregnancy, natural childbirth and restoration of body shape after childbirth.

How Pregnancy Yoga Exercises Can Help?

* Relieving edema (fluid retention) and cramping which can be quite common in the last months.

* Influencing the position of the baby and turning it in advance if needed. Strengthening and massaging the abdomen which help stimulate bowel action and appetite.

* Raising the level of energy while also helping in slowing the metabolism to restore calm and focus.

* Helping to reduce nausea, morning sickness and mood swings in combination with pranayamas (yogic breathing).

* Focus on relieving tension around the cervix and birth canal.

* Focus on opening the pelvis to make labor easier and quicker.

வவ்வால் said...

தெகா,
//திருடிப் போட்டது... :) //

ஆனாலும் இதிலும் எத்தனை மாத கர்ப்பத்திலிருந்து எத்தனை மாதம் வரைக்கும்னு சொல்லவே இல்லைப்பார்திங்களா?

கர்ப்பமாதல் முன்னரே அப்பெண் யோகா பயிற்சி செய்து இருந்தால் கைமேல் பலன் இருக்க அதிக வாய்ப்புண்டு!

எல்லாம் முடிஞ்ச பிறகு யோகா மாஸ்டரிடம் போனால் என்ன சொல்வார்?

Thekkikattan|தெகா said...

விட மாட்டீங்களே :-)) வவ்ஸ்,

ஒகே இந்தாங்க பிடிங்க...

First Trimester இங்கே...
http://www.healthandyoga.com/html/pfirst.html

Second Trimester இங்கே...

http://www.healthandyoga.com/html/psecond.html

Third Trimester இங்கே...

http://www.healthandyoga.com/html/pthird.html

படங்களுடன் போட்டு விளக்கியிருக்காங்க... சந்தோஷப் பட்டா பகிர்ந்துக்கங்க. அட்வான்ஸ்ட் வாழ்த்துக்கள் சுய ப்ரசவத்திற்கு, வவ்ஸ் ;))

வவ்வால் said...

தெகா,

நீங்கள் போட்ட சுட்டி பயனுள்ளதே, ஆனாலும் நான் சொன்னது கர்ப்பிணியாக முதன் முதலில் யோகா வகுப்புக்கு சென்றால் என்ன சொல்வார்கள் என்பதன் அடிப்படையில்(நானும் 5-6 மாதங்கள் வரைக்கும் சரி என்றே சொல்லியுள்ளதை கவனிக்கவும், நான் கொஞ்சம் நடை முறை ரீதியாக சொன்னேன்)

தியரிடிக்கலி வாய்ப்புள்ளது, ஆனால் எத்தனை பேர் 10 மாத பிரசவகாலம் வரை செய்வார்கள் , அல்லது எத்தனை யோகா மாஸ்டர்கள் அவர்களுக்கு சொல்லித்தர முன்வருவார்கள்!

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

கொடுத்த தொடுப்பில் உள்ள படங்களை நன்கு கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் தெரியும், செய்யப் போகும் பயிற்சிகள் ஒன்றும் கஷ்டமனதொன்றாக இல்லையென்று தெரிய வரும்.

எல்லா பயிற்சிகளிலும் வெறும் கால்களை நீட்டியும், மடக்கியும் செய்யும் சிறு, சிறு பயிற்சிகளே. அப்படியிருக்கும் பட்சத்தில் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் இவைகளை சரியான மேற்பார்வையில் கற்றுக் கொண்டு வீட்டிலேயே செய்து வரலாம்.

ரிஸ்கியான, அதாவது ரொம்ப உடலை முறுக்கேற்றி செய்தால்தான் பலன் என்றில்லையே. படுத்த படுக்கையில் இருந்து கொண்டே வெறும் மணிக் கட்டையும், கால் கணுக்காலை முறைப்படி சுழற்றுவதும் கூட ஒரு வகை யோகாதான். அது போல பல எளிய பயிற்சிகள் பயப்பட தேவையில்லாமலேயே கர்ப்பத்தின் இறுதி கட்டம் வரையிலும் செய்ய முடியும்.

அதனால், எந்தவொரு யோகா மாஸ்டரும் அடித்து விரட்டி விடமாட்டார்கள் அப்படி அணுகினால். :-)

வவ்வால் said...

தெகா,
//அதனால், எந்தவொரு யோகா மாஸ்டரும் அடித்து விரட்டி விடமாட்டார்கள் அப்படி அணுகினால். :-)//

நான் சொன்னது அனானியாக வந்து கேட்ட ரவிச்சந்திரன் என்பவருக்கு , யோகாவில் பொதுவாக தவிர்க்கவும் என்று சொல்லும் ஒரு கருத்தை, மற்றப்படி கர்ப்பிணிகள் செய்யவே கூடாது என்று சொல்ல வரவில்லை, அதற்கு சில மேற்ப்பார்வை, கட்டுப்பாடுகள் இருப்பதால் சொன்னே, பொதுவாக சொல்வதை ரொம்பவும் தனியாக ஏன் கூடாது என்றுப்பார்த்தால் சரியாக வராதே!

எந்த யோகா மாச்டரும் அடிக்கவரவில்லை எனினும், தவிர்க்கப்பார்ப்பார் என்பதை நேரடியாக பேசிப்பார்த்தால் தெரியும்.

உதாரணமாக நீருக்கடியில் பிரசவம்ப்பார்த்தால் வலி தெரியாது என்று சொல்வார்கள்(தண்ணீர் தொட்டியில் இருந்துக்கொண்டு) ஆனால் அப்படி செய்ய வேண்டும் என்று ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சொன்னால் தவிர்ப்பார்! இப்படி எத்தனையோ தியரி அதற்கு எதிரான நடை முறை என உள்ளது!

பொதுவாக யோகா செய்வது எல்லாருக்கும் நல்லது!(கேன்சர் தீர்க்குமா, எய்ட்ஸ் போகுமா என்பதெல்லாம் அப்பாற்ப்பட்டது) எப்போ எப்படி, யார் உதவியுடன் என்பது தான் முக்கியம்!

"there must be a proper guidance"

Anonymous said...

//உங்கள் பிரச்சினைக்கு யோகாவில், பிராணயமத்தில் நல்ல பலன் கிடைக்கும் கொஞ்சம் நாள் ஆகும், நம்பிக்கையுடன் அருகில் உள்ள ஒரு யோகா மாஸ்டரை அணுகவும்//

மறுபடியும் நன்றி..நன்றி..

இங்கே அருகில் ஒரு புத்த மடாலயம் ஒன்றில் இலவச யோகாப் பயிற்சி நடத்துகிறார்கள். முயற்சிக்கிறேன்..

பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி மற்றும் ஆரம்ப நிலை ஆசனங்கள் பற்றிய குறிப்புக்களுடன் தமிழில் pdf file உங்களிடம் இருக்கிறதா?

ஐயங்காரின் யோகாசனம் ஒரு சிறந்த வழிகாட்டிநூல் என்று இங்கு சிலர் என்னிடம் பரிந்துரைக்கின்றனர்.

- ரவி

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

//மற்றப்படி கர்ப்பிணிகள் செய்யவே கூடாது என்று சொல்ல வரவில்லை, அதற்கு சில மேற்ப்பார்வை, கட்டுப்பாடுகள் இருப்பதால் சொன்னே, பொதுவாக சொல்வதை ரொம்பவும் தனியாக ஏன் கூடாது என்றுப்பார்த்தால் சரியாக வராதே!//

நானும் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை, வவ்ஸ். நீங்க கூறிய படியேத்தான் நானும் சரியான மேற்பார்வையுடன் அணுக வேண்டுமென்று சொல்ல வருகிறேன்.

//பொதுவாக யோகா செய்வது எல்லாருக்கும் நல்லது!(கேன்சர் தீர்க்குமா, எய்ட்ஸ் போகுமா என்பதெல்லாம் அப்பாற்ப்பட்டது) எப்போ எப்படி, யார் உதவியுடன் என்பது தான் முக்கியம்!

"there must be a proper guidance"//

அதே, அதே! எந்த வயதிலும், எந்த நிலையிலும் செய்யத்தக்கதே. அட, சுவாசிப்பதையே ஒரு வித முறையுடன் செய்தால் அதுவே யோகாதானே (சரி விடுங்க ப்ரணாயமம்:) ?

Integrate the both in everyday life to beat the stress and negation...

Thekkikattan|தெகா said...

Anony(Ravee),

//பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி மற்றும் ஆரம்ப நிலை ஆசனங்கள் பற்றிய குறிப்புக்களுடன் தமிழில் pdf file உங்களிடம் இருக்கிறதா?//

யோகா சார்ந்து என்னிடம் ஒரு PDF ஃபைல் இருக்கிறது. என்னுடைய முதல் பதிவில் என்னுடைய மின்னஞ்சல் முகவரி உள்ளது, அதனைக் கொண்டு உங்களுடைய ஈமெயில் ஐ.டி கொடுத்தால் அனுப்பி வைக்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

தெ..கா நான் நேற்றுப் போட்ட கமெண்ட் எங்கே? இதோ இன்னொரு முறை போடுகிறேன்
வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு, உயரத்தில் இருக்கும் சாமான்களை எடுக்க எம்புவோமே அதுப் போல , உடலின் பாரத்தை, காலின் விரல்களில் கொண்டு வந்து. குதிகாலை உயர்த்த வேண்டும். இப்படி ஒரு இருபது முறையாவது, காலை மாலை தொடர்ந்து செய்துப் பாருங்கள். அதீத பருமன் இல்லாவிட்டால் செய்யலாம் என்று நினைக்கிறேன். இது எங்கோ படித்தது. மருந்தில்லா மாற்று மருத்துவத்தில் விருப்பம் அதிகம்.

Thekkikattan|தெகா said...

அட நம்ம உஷா,

எப்படி இருக்கீங்க, ரொம்ப நாளாச்சு நம்ம வீட்டாண்டைப் பார்த்து.

//தெ..கா நான் நேற்றுப் போட்ட கமெண்ட் எங்கே? இதோ இன்னொரு முறை போடுகிறேன்.//

அட நீங்க வேற வந்திருந்தா இன்னேரம் போட்டு பட்டைய கிளப்பியிருக்க மாட்டேன். அனானி காமெண்ட்களை நானே போட்டுக்கிட்டு காலத்தை இங்கே ஓட்டிக்கிட்டு இருக்கும் பொழுது இப்படி ஆதெண்டிக்கா வாரதை விடுவேணா, சொல்லுங்க.

நெசாமாலுக்குமே வரலைங்க. அட நம்புங்க.

அப்புறம் உங்க டிப்ஸ்க்கு நன்றி!

எனக்குக் கூட ஆல்டேர்னெடிவ் மருத்துவம் ரொம்பப் பிடிக்கும் :).

Anonymous said...

usha,

பதிலுரைத்தமைக்கு நன்றி

theks,

எனது ஈ-மெயில்
ravi8642_siva@yahoo.com

தமிழில் இல்லையா?

-ரவி

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நிறைய தவறான தகவல்களை வவ்வால் சொல்லியிருக்கிறார்..

/////////

//ஓவ்வொரு பொஷிசன் மாற்றி செய்யும் பொழுதும் மூச்சை எவ்வளவு நேரம் உள் வைக்க வேண்டும், எப்பொழுது வெளியேற்ற, உள்ளிழுக்க வேண்டும் என்பதனைப் போன்றல்லாம் இருக்கிறது.//

ஆமாம் ஆனால் ஒவ்வொரு பொசிஷனிலும் எத்தனை முறை அப்படி மூச்சை இழுத்து வெளியிடுவீர்கள், அந்த நிலைக்கு போகும் முன்னர் இழுத்தால் அந்நிலை மாறும் வரை அடக்கி வைத்திருப்பீர்கள்,அதே போசிஷனில் இழுது விட்டு என்று எதுவும் செய்ய மாட்டீர்கள்.//////////

இவ்வாறான மூச்சை ஒரு யோகா நிலையில் முழுக்க அடக்கி இருக்க வேண்டுமென்றோ அல்லது முழுக்க வெளிவிட வேண்டும் என்றோ நியதி இல்லை.
பெரும்பாலும் ஒரு நிலைக்குப் போகும்போது மூச்சை உள்ளிழுக்கவும்,அந்த நிலையில் இருந்து பழைய நிலைக்கு வரும்போது வெளிவிடவும் குறிப்புகள் இருக்கும்;பழகப் பழக இது மிக எளிதாகவே இருக்கும்.
மறாத ஒரு நிலை சொல்லப் பட்டிருந்தால்,எ-டு ஆக சிரசாசனம்,சர்வாங்காசனம் போன்றவை பழகியவர்கள் 30 நிமிடம் கூட நிற்கலாம்,அது போன்ற சமயங்களில் லேசான சாதாரண மூச்சு விடுதலே பரிந்துரைக்கப் படுகிறது.


/////////ஆனால் மூச்சுப்பயிற்சி என்பது ஒரு நிமிடத்திற்க்கு எத்தனை முறை மூச்சு இழுத்து வெளியிடுகிறீர்கள் என்பதை செய்வதே.////////
மூச்சுப்பயிற்சி என்பது இது அல்ல.1:4:1 எனபதுதான் மூச்சுப் பயிற்சியின் தாத்பரியம்.
அதாவது ஒரு பங்கு நேரம் மூச்சை இழுத்து 4 பங்கு நேரம் உள்நிறுத்தி பின் 1 பங்கு நேரம் வெளிவிட வேண்டும்.
அதாவது 3 வினாடிகள் இழுத்துக் கொண்டே இருந்து 12 வினாடிகள் உள்நிறுத்தி பின் 3 விநாடிகள் வெளிவிட வேண்டும்.
யோக மொழியில் இது ரேசகம்,கும்பகம் எனப்படுகிறது.


///////////மூச்சுப்பயிற்ச்சி என்பது யோகாவின் "precursor" யோகா செய்வதற்கு முன்னர் சிறிது மூச்சு பயிற்சி அவசியம். ஏன் எனில் ஆசனங்களில் அமரும் போது மூச்சடக்க நேரிடும் அது கடினமாக தெரியாமல் இருக்க , யோக ஆரம்பிக்கும் முன்னர் பிராணயமம் பற்றி சொல்லி அதை செய்ய வைப்பார்கள்./////////
இவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.



////////ஏன் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.உடல் யோகா செய்ய தயார் ஆகும்(warm up) மேலும் மூச்சு அடக்குதல், உடல் நெகிழ்தல் எல்லாம் அப்போது தான் ஆசனங்கள் செய்ய எளிதாக வரும்./////////
இதுவும் தவறான கருத்து.உண்மையில் மூச்சுப் பயிற்சி அல்லது பிராணாயாமம் என்பது சவாசனத்திற்கு முன் செய்ய வேண்டியது.




////////ஒருவனுக்கு பித்த நாடி ஒடுங்கி விட்டால் மரணம் அருகில் என்பது வைத்தியம் கூறும் உண்மை///////
அவசியமில்லை.வாத நோய் உள்ளவர்களுக்கு பித்தநாடி குறைவாகவே பேசும்.மரணம் வந்தால்தான் குறைய வேண்டும் என்ற அவசியமில்லை.

/////////பெரும்பாலும் கை ரேகை ஜோதிடம்ப்பார்ப்பவர்கள் நம் நாடியை வைத்து தான் நமக்கு ஜோதிடம் சொல்வார்கள்!ஆயுசுக்கெட்டி என்றெல்லாம் அதை வைத்தே சொல்வார்கள்(விரல் நுனி,மணிக்கட்டில் நாடிப்பார்க்கலாம்/////////
இது ஒரு ஜோக்.உங்கள் சொல்படி சோதிடர்கள் அனைவரும் நாடி பார்க்க கற்றுவைத்திருக்க வேண்டும்;உண்மையில் பல ஆய்ர்வேத சித்த மருத்துவர்கள் கூட சரியாக நாடி பார்க்கதெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.இந்நிலையில் சோதிடர்கள் ஒழுங்காக லக்னக் கணக்கைக் கணித்தாலே அது பெரிய விஷயம் !
மேலும் விரல் நுனியிலெல்லாம் நாடி பார்க்க முடியாது,மணிக்கட்டில் மட்டும்தான்.
நகத்தின் அடிப்பகுதியை ஆராய்ந்து ரத்தத்தின் நிலையைப் பற்றி அறியலாம்.விரல் நுனியும் இரத்த நிலையை ஆராயவே..



//////////உடல் பயிற்சி என்பது ஒரு எடை அல்லது எதிர்ப்பை உடல் அனுபவிக்க செய்வது, அதாவது உடலை முறுக்கேர வைத்து பண்படுத்துவது, அதே சமயம் யோகா என்பது தசைகளின் மேல் எடை, அல்லது டென்சன் இல்லாமல் அதே சமயம் அப்படி இருந்தால் ,செய்தால் கிடைக்கும் பலனை அடைய செய்வது///////
முழுக்கத் தவறு.
உடற்பயிற்சி மேல்த்சைகளில் தசைநார்களில் வேலை செய்கிறது;யோகா 80 சதம் உள் உறுப்புகளை,நிணநீர் சுரப்பிகளைத் தூண்டி செயற்படுத்துகிறது.தசைகளில் செயல்பாடு மிகச் சிறிய பங்கே.



////////பொதுவாக யோகா செய்த பிறகு உடல் பயிற்சிகள், வெயிட் தூக்கி செய்யும் பயிற்சிகள் செய்ய கூடாது, ஏன் எனில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்றுக்கு எதிரான வகை சார்ந்தது.

காலையில் யோகா செய்தால் மாலையில் உடற்பயிற்சி செய்யலாம்!////////

சரி.



////////பிராணயமம், யோகா , தியானம் இந்த வகையில் வருது தான் சிறந்த முறை!///////

தவறு.யோகா,பிராணாயாமம்,சவாசனம் அல்லது தியானம்,இதுவே சரி.
பொதுவாக தியானத்தை யோகா,பிராணாயாமத்துடன் குழப்ப தேவையில்லை.

Thekkikattan|தெகா said...

நன்றி, அறிவன்!!

எனது முதல் பதிவில் மிகவும் விளக்கமாக நீங்கள் கொடுத்த சில விளக்கங்களை கொடுத்துள்ளேன். ஆனால், முழுமையாக அங்கு படித்து புரிந்து கொண்டமாதிரி தெரியவில்லை, எதிர் வினையாற்றியவர்கள். இப்பொழுது மேலும் நீங்கள் வந்து கூறியிருக்கிறீர்கள்.

மீண்டும் நன்றி!

Anonymous said...

இங்கே யோகாசானம் பற்றியும் மூலிகை வைத்தியம் பற்றியும் தகவல்கள் வழங்கிய பலருக்கும் நன்றி.

என்னுடைய பங்குக்கு,

ஹத யோகம் பதஞ்சலி முனிவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு அரிய பொக்கிஷம்

கணனியே கதி என்று இருப்பவர்களின் பிற உடலுறுப்புக்கள் இதனால் பயன் பெறும்.. :) (வேற ஒன்னுமில்ல உங்க வீட்டுப்பக்கம் கொஞ்சம் தலைகாட்டனும்னு..)

வவ்வால் said...

//தவறு.யோகா,பிராணாயாமம்,சவாசனம் அல்லது தியானம்,இதுவே சரி.
பொதுவாக தியானத்தை யோகா,பிராணாயாமத்துடன் குழப்ப தேவையில்லை.//

அறிவன்,

நான் சொல்லியது பலதும் தவறென சொல்லியுள்ளீர்கள், எவை எல்லாம் தவறு, நீங்கள் ஒரு யோகக்கலை நிபுணர் எனில் அது உங்களின் அனுபவத்தின் அடிப்படையில் எனில் ஏற்றுக்கொள்ளத்தயாராகவே இருக்கிறேன்.

நான் சொல்வதும் யோகாவுடன் , பிராணயமத்தை குழப்பக்கூடாது என்பது தான்!
எனக்கு தெரிந்து யாரும் பிராணயமத்திற்கு பிறகு சவாசனம் சொல்ல மாட்டார்கள்.

எப்போது ஆசனம் என வந்துவிட்டதோ அது பிராயணமத்திற்கு பிறகு தான்!

பிராணயமம் தான் ஆரம்பம்.




//இது ஒரு ஜோக்.உங்கள் சொல்படி சோதிடர்கள் அனைவரும் நாடி பார்க்க கற்றுவைத்திருக்க வேண்டும்;உண்மையில் பல ஆய்ர்வேத சித்த மருத்துவர்கள் கூட சரியாக நாடி பார்க்கதெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.இந்நிலையில் சோதிடர்கள் ஒழுங்காக லக்னக் கணக்கைக் கணித்தாலே அது பெரிய விஷயம் !
மேலும் விரல் நுனியிலெல்லாம் நாடி பார்க்க முடியாது,மணிக்கட்டில் மட்டும்தான்.
நகத்தின் அடிப்பகுதியை ஆராய்ந்து ரத்தத்தின் நிலையைப் பற்றி அறியலாம்.விரல் நுனியும் இரத்த நிலையை ஆராயவே..//

எல்லா நாடி ஜோசியர்களுக்கும் தெரியும் என சொல்ல வரவில்லை, அதை தெரிந்துக்கொண்டுத்தான் அப்படி சொல்கிறார்கள் என சொல்லியுள்ளேன், தெரியாமலே டுபாக்கூர்ராக ஜோதிடம் சொன்னால் நான் என்ன செய்வேன்!

பாரம்பரியமாக அப்படி செய்வது வழக்கம் என்று சொல்லியுள்ளேன், ரேகை எல்லாம் அப்புறம், தான் , உண்மையில் சிறந்த ஜோதிடக்காரர் இப்படிப்பல மருத்துவக்குறிப்புகளை ரகசியமாக கையாள்வது வழகக்ம்!

விரல் நுனியில் நாடித்தெரியாது எனில் , உங்கள் விரல் நுனியை(நடு விரல் எனில் உத்தமம்) இன்னொரு கையின் விரல்களால் பற்றி சிறிது நேரம் வைத்திருக்கவும், நாடி தெரியும். மருத்துவமனைகளில் கூட இதனால் தான் விரல் நுனியில் ஒரு கிளிப் போல மாட்டி நாடி/ இதய துடிப்பைப்பார்ப்பார்கள்.icu வில் இருக்கும் நோயாளியிடம் எப்படி அவர்கள் உடலை "monitor" செய்வார்கள் என்பதைப்பாருங்கள்.

//உடல் பயிற்சி என்பது ஒரு எடை அல்லது எதிர்ப்பை உடல் அனுபவிக்க செய்வது, அதாவது உடலை முறுக்கேர வைத்து பண்படுத்துவது, அதே சமயம் யோகா என்பது தசைகளின் மேல் எடை, அல்லது டென்சன் இல்லாமல் அதே சமயம் அப்படி இருந்தால் ,செய்தால் கிடைக்கும் பலனை அடைய செய்வது///////
முழுக்கத் தவறு.//

நான் என்ன சுரப்பியை தூண்டாது என்றா சொன்னேன், வெயிட் தூக்கி செய்யாமல் உடலுக்கு கிடைக்கும் பலன் கிடைக்கும் என்று தான் சொல்லியுள்ளேன். எப்படி என சொல்லவில்லை.

நீங்களே சொல்லுங்கள் வெயிட் தூக்கி செய்வதால் கிடைக்கும் பலன் கிடைக்காதா யோகசனத்தால்!

முழுக்க யோசனம் செய்தவரின் உடல் ஆரோக்கியம், வெயிட் தூக்கி உடற் பயிற்சி செய்தவருக்கு இணையாக கிடைக்கும் என சொல்ல வருவது தான் நான் சொன்னது. இல்லை என்கிறீர்களா?

உங்களுக்கு தமிழ் புரியாதா இல்லை எல்லாவற்றையும் புட்டு புட்டு சொல்லணுமா?

சும்மா சொல்வதற்கு எதிராக சொல்வது தான் உங்கள் நோக்கம் எனில் சொல்லிட்டு போங்கள்! :-))

எந்த அடிப்படையில் நான் சொன்னதை முழுக்க தவறு என்று சொல்ல வந்தீர்கள்?

நான் சொல்வது உடம்பை முறுக்கி செய்வது எடைப்பயிற்சி, , உடம்பை நெகிழ்த்தி செய்வது யோகா, ஆனால் இரண்டும் ஒரே மாதிரி உடம்புக்கு பலன் தரும் என்பதே!(இன்னும் சொல்லப்போனால் யோகாவல் அதிகப்பலன்)

வவ்வால் said...

நவன்,

//யோகாசனங்களை முறைப்படி தொகுத்தவர் பதஞ்சலி என்ற முனிவர் தான், சித்தர் என்றும் சொல்லலாம்.//

இது ஏற்கனவே நான் சொன்னது.

நீங்க ஹத யோகம் என்று மட்டும் சொல்லி செல்கிறீர்கள், ஹதம் எனில் அழுத்தம் கொடுத்து உடலை வலைப்பது என பொருள்!(forcefull excercise of body)(சரிதானா அது?)இன்னும் கொஞ்சம் உள்ளேப்போய்ப்பார்த்தால் ஹட என்றால் உடல் என்றும் ஒரு அர்த்தம் வரும்(சூரியன், சந்திரன் (குளிர்ச்சியும் வெப்பமும்)சேர்ந்தது நம் உடல் , என்பதால் ஹட என்று சொல்வார்கள்.

எனவே யோகாசன கலையின் பிதாமகனே பதஞ்சலி தான்!
பிறகு ஏன் அவருக்கு ஒரு டிவிஷன மட்டும் தறனும்?

Anonymous said...

யோகா பத்தி ஒன்னுமே தெரியாதுன்னு சொல்றத விட தெரிஞ்சதை திருப்பிச் சொல்லலாம்னு
தான்.. (ரிப்பீட்டேய் :) )

அப்பிடிச்சொன்னேன். ஹத யோகம் யோகக்கலைகளின் மூலம்.

பதஞ்சலி முனிவர் பற்றி நிறையத் தெரியும். அது இங்கு அவசியமா?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//////!(இன்னும் சொல்லப்போனால் யோகாவல் அதிகப்பலன்)/////////

இது ஒன்றுதான் சரி(மீண்டும் !!) உங்கள் கருத்துக்கள் கன்னியாகுமரி இருக்கும் திசை என்று சொல்லிக்கொண்டு,பலர் சொல்லியும் கேளாமல்,தில்லி இருக்கும் திசை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பவன்,கடைசியில்,இல்லை நான் தில்லிக்குப் போகத்தான் ஆரம்பத்திலிருந்தே முயற்சித்தேன் எனச் சொல்வது போல இருக்கிறது.

ஒன்றே ஒன்று மட்டும் சொல்ல விழைகிறேன்,நான் ஒன்றும் யோக நிபுணன் என claim செய்யவில்லை;ஆனால் என் கருத்துக்களில் யோகம் பற்றிய சுமார் 20 வருடகால ,படிப்பு மற்றும் அனுபவத்தின்,வாயிலாக நான் சந்தேகமற கொண்ட முடிவுகளையே சொன்னேன்;மற்றபடி இதில் வாதம் வளர்த்து என நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை.
உண்மையில் யோகம் பற்றிய மேலும் அறிய ஆசைப்பட்டால் சுந்தர யோகசிகிச்சை-யோகாச்சார்யா சுந்தரம் எழுதியது-இப்போது அச்சில் இருக்கிறதா என்றே தெரியவில்லை-படிக்கவும்...
நிறைய தெளிவடைவீர்கள் !

வவ்வால் said...

அறிவன்,
//இது ஒன்றுதான் சரி(மீண்டும் !!) //

ஆஹா ... இனிமே உங்களிடம் இருந்து மிக அதிக சரி என்று வாங்கும் வகையில் பின்னூட்டம் போடக்கத்துக்கிறேன், அதை விட எனக்கு வேறென்ன வேலை :-))

அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று எதுவும் சொல்லாமல் அடுத்தவர்கள் சொல்வதை ஆங்காங்கே துண்டு துண்டாக பிரித்து "சரியா , தவறா" என மதிப்பெண் போடும் உரையாடலும், இலக்கின்றி பேசிக்கொண்டிருப்பதிலும் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததும் இல்லை, யாரிடம் இருந்தும் சான்று வாங்கவும் ஆசைப்பட்டதில்லை.

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

அறிவன் கூறியபடியே நானும் கற்றுக் கொண்ட இடத்திலே முறையே - முதலில் வார்ம் அப்புக்காக, சூர்ய நமஸ்காரம் அதில் கிட்டத்தட்ட மற்ற கடினமான யோகாசனங்கள் செய்வதற்குதக்க உடலை தயார் பண்ணிக் கொடுப்பதற்கான அத்துனை போஸ்களும் வந்துடும். அந்த ஒவ்வொரு நிலைகளிலும் சுவாசத்தை கட்டுப் படுத்தி வைத்தும், வெளியேற்றியுமே இருப்பதனைப் போல அமைந்திருக்கும்.

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வருவதே ப்ராணாயாமம். அங்கே சவாசனத்திலோ அல்லது பத்மாசனத்திலோ தியானத்திற்கு நம்மை ஆட்படுத்துவதற்கு முன்பு இந்த யோகாசனங்களும், ப்ராணாயாமமோ மேலும் உதவுக் கூடும் என்றே செய்யப் படுவது.அதாவது உடலும், சுவாசமும் மற்ற inconvenienceகளை கொடுக்காமல் செவனேன்னு உட்கார்ந்து மனதை ஒன்றுமற்ற நிலைக்கு வழி நடத்தி செல்வற்கே.

இதனை எனது முதல் பதிவில் வரிசைக் கிரமத்தில் சொல்லியிருப்பேன் and this is, what we call integrated yogic technique :).

Thekkikattan|தெகா said...

காட்டாறு மற்றும் மங்கை,

தங்களின் பங்களிப்பிற்கு நன்றி!

ஆறு, இன்னும் கொஞ்சம் உங்களின் சொந்த அவதானிப்பின் பேரில் கூடுதலாக இங்கு பகிர்ந்தளித்திருக்கலாம். எப்ப வேண்டுமானாலும் இந்தப் பதிவை தூசி தட்டி எடுத்துவிடாலாம்தானே, அப்பொழுது பார்த்துக் கொள்வோம் ;).

வவ்வால் said...

தெகா,
//எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வருவதே ப்ராணாயாமம்.//

யோகா செய்ய முடியாத உடல் வாகினைக்கொண்டவர்கள் கூட பிராணயம் செய்யலாம் என்பதை அறிவீர்கள் தானே!

எனக்கு சொன்னவர்கள் யோகா ,பிராணயமம் இரண்டும் தனிக்கலைகள் ஆனால் ஒன்றாக பாவிக்கப்படுகிறது என்றே சொன்னார்கள்.

எடுத்ததும் யோகாவுக்கு போனால் மூச்சு திணறிப்போய்விடும், அதற்கு ஏற்ப முதலில் மூச்சுப்பயிற்சிக்கொடுத்து நுரையீரலை தயார் செய்ய வேண்டும்.

////உடல் பயிற்சி என்பது ஒரு எடை அல்லது எதிர்ப்பை உடல் அனுபவிக்க செய்வது, அதாவது உடலை முறுக்கேர வைத்து பண்படுத்துவது, அதே சமயம் யோகா என்பது தசைகளின் மேல் எடை, அல்லது டென்சன் இல்லாமல் அதே சமயம் அப்படி இருந்தால் ,செய்தால் கிடைக்கும் பலனை அடைய செய்வது///////
முழுக்கத் தவறு.//

நான் யோக குறித்து சொன்ன இந்த உதாரணத்தை முழுக்க தவறு என்று சொல்லி இருக்கிறார் அறிவன், உங்கள் கூற்று என்ன தெகா?

Thekkikattan|தெகா said...

யோகா செய்ய முடியாத உடல் வாகினைக்கொண்டவர்கள் கூட பிராணயம் செய்யலாம் என்பதை அறிவீர்கள் தானே! //

ஆமாம், வவ்ஸ் அதிலென்ன சந்தேகம்.

//எனக்கு சொன்னவர்கள் யோகா ,பிராணயமம் இரண்டும் தனிக்கலைகள் ஆனால் ஒன்றாக பாவிக்கப்படுகிறது என்றே சொன்னார்கள்.//

அதுவும் உண்மைதான் - the integrated version.

//எடுத்ததும் யோகாவுக்கு போனால் மூச்சு திணறிப்போய்விடும், //

Not necessarily வவ்ஸ், it depends what kind of yoga postures that you are going to pursue. Perhaps, some advanced postures if you are practicing then you might need some strong lungs to hold more air. Even for that also, if you are already in the practicing of Pranayama, that will fall in place when you do that advanced Asana, so I think.

//நான் யோக குறித்து சொன்ன இந்த உதாரணத்தை முழுக்க தவறு என்று சொல்லி இருக்கிறார் அறிவன், உங்கள் கூற்று என்ன தெகா?//

வவ்ஸ், அவர் யோகா சார்ந்து கூறிய 'வரிசைக்கிரமம்' நான் பழகிவரும் முறையை சார்ந்திருப்பதால் so i do go with him. மற்றபடி எனக்கு இந்த நாடி விசயங்கள் பற்றி ஏதும் தெரியாததால் ஒண்ணும் சொல்வதற்கில்லை... :)

வவ்வால் said...

தெகா,

தற்ப்போது உங்களை எங்கே நாடிப்பற்றிக்கேட்டேன், உடலை முறுக்கேற்றி செய்யும் உடல்ப்பயிற்சி, தளர்த்தி செய்யும் யோகா என்பதுப்பற்றித்தானே கேட்டேன்.

மேலும்,

//Not necessarily வவ்ஸ், it depends what kind of yoga postures that you are going to pursue. Perhaps, some advanced postures if you are practicing then you might need some strong lungs to hold more air. Even for that also, "if you are already in the practicing of Pranayama," that will fall in place when you do that advanced Asana, so I think.//

நான் சொன்னது,
//எடுத்ததும் யோகாவுக்கு போனால் மூச்சு திணறிப்போய்விடும், அதற்கு ஏற்ப முதலில் "மூச்சுப்பயிற்சிக்கொடுத்து" நுரையீரலை தயார் செய்ய வேண்டும்.//

இதில் வரும் மூச்சுப்பயிற்சி என்பதை கட் செய்து விட்டு பிராணயமம் செய்தால் போதும் என்று சொன்னதையே திரும்பவும் சொல்கிறீர்கள்! நான் சொன்னதை விட நீங்கள் சொன்னதில் என்ன வித்தியாசம்?


எல்லாருமே என்னை விட மப்பாக இருப்பாங்களோ! :-))

Thekkikattan|தெகா said...

எல்லாருமே என்னை விட மப்பாக இருப்பாங்களோ! :-))//

ஓஹோ கதை அப்படிப் போகுதா :-)).

Thekkikattan|தெகா said...

பாரி.அரசு,

நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள், இதுசார்ந்து. நன்றி, மீண்டும் வந்து பதிலுரைத்தமைக்கு :-).

சுரேகா,

மிக்க மகிழ்ச்சி, யோகாவின் சுகத்தை அனுபவிக்கிறாய் என்பதனை அறியும் பொழுது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நண்பர்களே,
என்னைப் பொறுத்தவரையில் எழுத்து என்பது ஆழ்ந்த,அகன்ற படிப்பும்,அவற்றின் பாலான சிந்தனையும்,இவை இரண்டும் தரும் அனுபவமும் சேர்ந்த கலவை !

இணையம் அளிக்கும் கட்டற்ற சுதந்திரம் புதுவெள்ளம் கொண்டுவரும் ஆற்றுநீராய் பதிவுலகில் பொங்கிவரும் எழுத்துக்களை தருகிறது.
இதில் வேண்டியது எடுக்க வேண்டியது படிப்பவர் பாடு !

யோகம் பற்றிய பல குழப்பக் கருத்துக்கள் ஏற்கனவே பலரிடம் உண்டு.அறிவியல் சார்ந்து எழுதுவதாகக் கருதும் சுஜாதா போன்ற பல மூத்த எழுத்தாளர்கள் கூட யோகம் பற்றிய மூடக் கருத்துக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் பார்ப்பதுதான்.காரணம் அவரின் கருத்துக்களுக்கும் சரியான எதிர்வினை கிடைக்காமல் இருந்திருக்கலாம்....


படிப்பவர் சகலருக்கும் கட்டாயம் உபயோகப்பட வேண்டிய ஒரு விதயத்தில் சில சரியல்லாத கருத்துக்கள் காணக்கிடைக்கும் போது,அவற்றுக்கான மறுப்பைப் பதிவு செய்தால் கொள்பவர் சிந்தித்து வேண்டுவன கொள்ளலாம்;அல்லது தள்ளலாம்;

கருத்துக்களுக்கு சான்றாவணமாக ஒரு சுட்டியும் கொடுத்திருந்தேன்.இந்தியாவில்,தமிழில் யோகக்கலையைப் பற்றிய எளிய,சிறந்த புத்தகம் அதுவே என்று நினைக்கிறேன்.

அதற்காகவே வவ்வால் எழுதியவற்றிற்கு எனது கருத்துக்களைப் பதிவு செய்தேன்.
எவரெவர் சரியாக எழுதுகிறார்,எவரெவர் தவறாக எழுதுகிறார் எனக் கண்காணிக்கும் முடிசூடலை அவரெனக்கு அளிக்க முன்வரும் போதும்,அதைசெய்வதை விட முக்கிய வேலைகள் பல எனக்கிருக்கின்றன.

மற்றபடி வவ்வால் அல்லது எக்ஸ் அல்லது ஒய் என்ற ஒருவரை மறுத்தே எழுத வேண்டிய கட்டாயங்கள் எனக்கில்லை என்பதை அவரும் உணர்வார் என்றே நம்புகிறேன்!

அன்பும்,நன்றியும்,
அறிவன்

வவ்வால் said...

அறிவன்,
//எழுதியவற்றிற்கு எனது கருத்துக்களைப் பதிவு செய்தேன்.//

கருத்துக்களை சொல்லலாம், இப்போ தப்புனு சொல்றிங்க, சரியானது என்னனு சொல்லுங்கன்னு சொன்னா ஒரு புத்தகம் பேரை போட்டு அதுல இருக்கு பார்த்துக்கோனு சொல்வது கருத்துப்பரிமாற்றம் அல்ல, நான் குழம்பி போய் தப்பாக சொல்கிறேன், மற்றவர்களையும் குழப்புகிறேன் என்றே வைத்துக்கொள்வோம், நீங்க இப்படி சொல்லிக்கிட்டு இருக்கும் நேரத்தில் சரியான விஷயத்தை சொல்லி மற்றவர்களை காக்கலாமே. அதை விட்டு ஒரு புத்தகம் பேரை சொன்னேன் என்றால்.நான் கூட ஒரு புத்தகம் பேரை போட்டு பார்த்துக்கோ சொல்லிட்டு போனா , யாருக்கு என்ன பயன்?

அப்படிலாம் இல்லை நாங்க எல்லாம் சொன்னா சரியாத்தான் இருக்கும் , தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இருந்தா, நீ தான் புத்தகம் வாங்கி படிக்கணும்னு வாத்தியார் மனோபாவத்தில் இருப்பீர்கள் எனில் , ஆளை விடுங்க , இந்த ஆட்டம் நமக்கு ஒத்து வராது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

http://sangappalagai.blogspot.com/2008/01/40.html

ஒரு பதிவாகவே போட்டிருக்கிறேன்; தெளிவைத் தேடும் பொருட்டு விவாதம் செய்யலாம்,ஆனால் வறட்டு விவாதம் செய்ய வேண்டிய சூழ்நிலைகளைத் தவிர்க்கலாமே என்ற எண்ணமே ஒதுங்கியதன் காரணம் !
ஆர்வம்(இருக்கும் பட்சத்தில்!) கொண்டவர்களுக்கு தெளிவான தகவல் கிடைக்க ஏதுவாகவே புத்தக விவரம் குறிப்பிட்டேன்...சிறிது முயன்றால் நூலகங்களில் கட்டாயம் இருக்கும் !

Thekkikattan|தெகா said...

திரு. அறிவன்,

மிக நீண்ட விளக்கங்களுக்கு நன்றி. என்னுடைய பதிவிலும் உங்களுடைய இணைப்புள்ளதால், எந் நேரத்திலும் என் பதிவில் குழப்பிக் கொண்டவர்கள் உங்கள் தனிப் பதிவிற்கு தாவி வந்தால் முடிந்து விடும் அவர்களின் குழப்பம்.

வருத்தம் வேண்டாம், பொது சேவையில் இருக்கும் பொழுது இதெல்லாம் சகஜம்தானே... :-)).

மீண்டும் நன்றி, தனிப்பதிவாக இட்டமைக்கு.

வவ்வால் said...

தெகா,

பல வெப் சைட், புத்தகங்களில் தப்பு தாப்பாக போட்டு இருக்காங்க போல என்னைப்போல ஆளுங்க அதைத்தான் படிச்சுட்டு குழம்பி இருக்கோம் போல :-))



முதலில் எடுத்ததும் மூச்சுப்பயிற்ச்சினே சொல்றானுங்க இவனுங்க எல்லாம்.யோக கற்க ஆரம்பிக்கும் முறைனு இதைத்தான் சொல்றாங்க.

//First Day: Complete Breathing Exercises, Spinal Roll, Cobra Pose, Sun Salutation, Corpse Pose.


Second Day: Complete Breathing Exercises, Sun Salutation, Corpse Pose.

Third Day: Complete Breathing Exercises, Bow Pose, Cobra Pose, Posterior Stretch, Corpse Pose


Fourth Day and on: Repeat sequence.//

http://www.truthstar.com/yoga/howtostartyoga.asp

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

http://www.truthstar.com/yoga/howtostartyoga.asp//

It seems like you landed up onto a wrong web sites.

நிறைய அதெண்டிக்கான வலைத் தளங்கள் இருக்கு, வவ்ஸ். பின்பு வந்து தருகிறேன்.

நண்பர் அறிவனின் புதிய பதிவினை சென்று படித்தீர்களா? இல்லையென்றால், அவசியம் சென்று படிக்கவும்.

நன்றி!

வவ்வால் said...

தெகா,
//நண்பர் அறிவனின் புதிய பதிவினை சென்று படித்தீர்களா? இல்லையென்றால், அவசியம் சென்று படிக்கவும்.//

பார்த்தேன் சொல்லிக்கொள்ளும்ப்படியாக எதுவும் இல்லை.

நான் சொன்னதை துண்டு துண்டாக பிரித்து படித்து விட்டு குழப்பிக்கொண்டார் அவர். அதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

தெகா,

உங்களின் பல நன்றிகள் என்னை பனிக்க வைக்கின்றன;உண்மையில் சில நல்ல தகவல்களை பதிவுலகத்திற்கு அளிக்க ஏதுவாக இருந்த உங்கள் பதிவுக்கே நன்றி.

//////என் பதிவில் குழப்பிக் கொண்டவர்கள் இங்கே தாவி வந்தால் முடிந்து விடும் அவர்களின் குழப்பம்////////

குழப்பம் தீர்ந்தால் மகிழ்ச்சிதான்.

யோகம் மட்டுமல்ல,வாழ்வியல் சார்ந்த பல நுண்கலைகளிலும் எனக்கு உள்ள இயல்பான ஆர்வமே,இப்பதிவு சம்மந்தமாக எழுந்த பல தவறான புரிதல்களை நீக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

//////இதுக்கே கண்ணைக் கட்டுதுன்னா, இன்னமும் எவ்வளவோ இருக்கே... :)///////

வாங்க,வாங்க,வாழ்ந்து பாத்துடுவோம் !

Anonymous said...

ஐயா, எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். வௌவால் மற்றும் நீங்கள் மற்றும் அறிவன் கூறுவது ஒவ்வொருவகையில் சரி. ஆசனா மற்றும் ப்ராணாயாமா வெவ்வேறானது. யோகா எட்டு அங்கங்களை கொண்டது. அஷ்டாங்க யோகா. அதில் ஆசனா(இப்பதிவில் யோகா என குறிப்பிடப்படுவது) மற்றும் ப்ராணாயாமா அதில் அங்கமாகும். அறிவன் மற்றும் நீங்கள் கூறுவது போல் ஆசனா முதல் ப்ராணாயாமா பிறகு. எட்டு அங்கங்களும் பின்வருமாறு. இயமா, நியமா,ஆசனா, ப்ராணாயாமா,ப்ரத்யாகாரா, தாரணா, த்யானா, சமாதி. ஒவ்வொன்றாக செல்வது யோகா முறை. பிறகு நம் வசதி. ஆனால் ஒவ்வொரு ஆசனத்திலும் மூச்சு பயிற்சி உண்டு. மூச்சு ப்ராண சக்தியை எடுத்து செல்லும் வாகனம். ஒவ்வொரு ஆசனத்திலும் ஒவ்வொரு இடம் ப்ராண சக்தியை பெறும். பத்மாசனத்தில் கால்களுக்கு ப்ராண சக்தி குறைவாக கிடைக்கும். மாற்ற இடங்கலுக்கு அதிகம் போகும். ஒவ்வொரு ஆசனத்திலும் மூச்சை இழுத்து, தரித்து, விடும் கணக்குகளும் உண்டு. These are few things i learned long back. I wa told that each step prepares you for thhe next.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இந்த அனானி முகத்துக்குப் பின்னால யாருன்னு தெரியலை,இருந்தாலும் என் கருத்தையும் சொல்றேன்.

//////ஆசனா(இப்பதிவில் யோகா என குறிப்பிடப்படுவது)//////

நான் விளக்கப் பதிவிலேயே யோகாசனம் பற்றிய சில கேள்விகளும் கருத்துகளும் என்றுதான் கூறியிருக்கிறேன்.இங்கு விவாதித்த அனைவருமே யோகாசனத்தைப் பற்றியே விவாதித்தார்கள் என்றே நினைக்கிறேன்,முழுமையான யோகத்தைப்(அஷ்டாங்க யோகம்,எண்குணத்திறைவன்,திருமந்திரக் கருத்துக்கள்,சமாதி நிலை என அது ஒரு பெரிய டொமைன்) பற்றி அல்ல !

//////ஆனால் ஒவ்வொரு ஆசனத்திலும் மூச்சு பயிற்சி உண்டு///////
யோகாசனத்திலும் ஒவ்வொரு நிலையிலும் முச்சைப் பற்றி சொல்வது,உள்ளிழுப்பதா,அல்லது வெளிவிடுவதா என்பதைப் பற்றியே என நான் நினைக்கிறேன்,அது logical ஆனதும் கூட.அது முழுமையான மூச்சுப் பயிற்சி ஆகாது;மூச்சு விடுதலே முச்சுப் பயிற்சிதான் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்ப விரும்புகிறேன்.

யோகாசன மொழியில் அனைத்து ஆசனங்களுக்குக் கடைசியாகத் தான் மூச்சுப்பயிற்சி அல்லது பிராணாயாமம் பரிந்துரைக்கப் படுகிறது.
இதை அழகு தமிழ்,யோகாசன மொழியில் நாடிசுத்தி என அழைக்கிறது.

Giriraj said...

//யோகாசன மொழியில் அனைத்து ஆசனங்களுக்குக் கடைசியாகத் தான் மூச்சுப்பயிற்சி அல்லது பிராணாயாமம் பரிந்துரைக்கப் படுகிறது.
இதை அழகு தமிழ்,யோகாசன மொழியில் நாடிசுத்தி என அழைக்கிறது.//
நாடிசுத்தி என்பது நாடியை திறக்கும் ஒரு குறிப்பிட்ட பயிற்சி. சில சக்திவாய்ந்த யோகப்பயிற்சிகள் செய்வதற்கு முன் நாடிசுத்தி மிகமிக முக்கியம்(சில சமயம் 7 முதல் 12 வருடங்கள் கூட பரிந்துரைக்கப்படும்). இதன் குறிப்புகள் மிகவும் எளிமையாக இருக்கும்.

20 வருடம் செய்தாலும் யாரிடம் கற்றோம், என்ன காரனத்திற்காக செய்கிறோம், அதற்கு நம் வாழ்வில் என்ன முக்கியத்துவம் கொடுக்கிறோம், தொடற்சியாக செய்கிறோமா என்பதைப் பொறுத்து பலன் கிடைக்கும்.

Related Posts with Thumbnails