Wednesday, September 08, 2010

*வெளி...*


சோம்பலாக தலையுயர்த்தி
அவசரமொன்றும் எனக்கில்லை
என்றுணர்த்திவிட்டு அரைக்கண்ணால்
பார்த்தவாறு தூங்கிப்போனது
தெருநாயொன்று...

கண்ணில் அறையும்
வாஸ்து பார்த்து நிறமூட்டிய
வீடொன்றில் தேக்கிலிழைத்த
மரக் கதவை பிறாண்டியவாறு
தூக்க மருந்து கொடுத்தும்
திமிர்ந்து எழுந்த நாயொன்று
எஜமான் வரவிற்காய்
கோடிட்டு
பொழுதைக் கழிக்கிறது!




P.S: Photo Courtesy - Net

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல சுதந்திரம் தான்..

\\வாஸ்து பார்த்து நிறமூட்டிய
வீடொன்றில் தேக்கிலிழைத்த//

என்ன ஒரு அவதானிப்பய்யா..
வாஸ்து கலரில் வீடுகளெல்லாம் மிரட்டுராங்க ஊருல.. பாதிக்கப்பட்டிருப்பீங்க போல..:)

cheena (சீனா) said...

அன்பின் பிரபா

வாஸ்து கலர் - அடிக்கும் கலர் - தேக்கு மரக் கதவு - மருந்திற்குக் கட்டுப்படாத திமிருடன் நாய் - எஜமான் வரவிற்குக் காத்திருக்கிறது.......

மற்றொரு தெரு நாய் தூங்குகிறது எக்கவலையுமின்றி ......

வேறுபாடு கண்டீர்களா ?

நல்ல சிந்தனை பிரபா
நட்புடன் சீனா

படியுங்கள் - ரசியுங்கள் - மறுமொழி இடுங்கள்

http://pattarivumpaadamum.blogspot.com/2010/09/blog-post.html

பழமைபேசி said...

அடைபட்ட நாய்னு சொல்றாங்கள்ள??

Related Posts with Thumbnails