Saturday, November 17, 2012

முழிச்சிக்கோங்க : சினிமா டுப்பாக்கி...

இந்தப் படத்தை இயக்குனவர் நிறைய கூகுள்ல ஆராய்ச்சி செய்றவர் போல. எப்படியோ இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் தீவிர தீவிரவாத கண்காணிப்பிற்கு விதையைத் தூவி ஏதோ அவரால் ஆன நாட்டுச் சேவையை ஆத்தி இருக்கார்.

உண்மையான மரணம் வாழும் பொழுதே பயந்து சக மனிதனைக் கண்டு அஞ்சி வாழ்வதுதான். இந்தியாவின் மக்கள் கலப்பு என்பது ரொம்ப சிக்கலானது. அது பல நூற்றாண்டுகளைத் தாண்டிய வரலாற்றை உள்ளடக்கியது.

அதனால் இன்றைய நவீன அமெரிக்கப் பார்வையில் நம் தெருவிற்குள் இந்த உலகளாவிய அரசியலை தெரிந்தோ தெரியாமயோ பரப்புரை செய்வது நன்மை விளைவிப்பதைக் காட்டிலும் அதீத தீமையையே விதைத்துச் செல்லும்.

கீழே இணைத்திருக்கிற புகைப்படம் நான் ஃபேஸ்புக்கில் பார்த்தேன். அதிகம் பேச வேண்டியதில்லை... நீங்களே பார்த்துக்கோங்க.

...ஏன் விஜயகாந்த், அர்ஜூன் வகையறா சினிமா தீவிரவாத ஒழிப்புகளைக் காட்டிலும் முருகதாஸ் வகையறா சினிமா  டுப்பாக்கி சமூக உளவியலுக்கு நச்சு என்பதற்கு கீழ்கண்ட இந்த புகைப்பட ஒருங்கிணைப்பு உதவக் கூடும்.

ரசினி சார் இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்தாராமா! தீவிரவாத விழிப்புணர்வு கொடுத்துக்கிட்டார் போல...

இன்னும் கரம்பக்குடிக்கு வரலங்கிற அளவில எங்கூர்ல தீவிர தீவிரவாத விழிப்புணர்வு பரவலன்னு நம்புறேன்...


தொடர்புடைய மற்றுமொரு பதிவு - 


ஆஃப்கான் புத்தர் சிலை வெடிப்பு - பாபர் மசூதி இடிப்பு!

http://thekkikattan.blogspot.com/2010/10/blog-post.html

3 comments:

வவ்வால் said...

தெ.கா,

ஸ்லீப்பர் செல் என்ற கான்செப்ட் தீவிரவாத குழுக்களில் உள்ளதே,அவர்கள் பெரும்பாலும் சாமானியர்களே தேவை வரும் போது மட்டுமே பயன்படுத்திக்கொள்வார்கள்.

ரமணாப்படத்தில் ஊழலை ஒழிக்க முன் திட்டம் போட்டு மாணவர்களை அரசு அலுவலகத்தில் சேர்ப்பதும் இத்தகைய வேலையே,என்ன அப்போது ஸ்லீப்பர் செல் என்ற சொல்லைப்பயன்ப்படுத்தவில்லை.

2/11 தாக்குதலுக்கு பின்னரே இப்படியான குழுக்கள் மீது பயமும், கண்காணிப்பும் அதிகரித்தது.

இந்தியாவுக்கு அதிக தொல்லை பாக்கினால் எனவே அதனை சித்தரிக்கும் போது மத அடையாளமும் வருவது தவிர்க்க முடியாதது.

விக்கிப்பீடியாவில் படித்து படத்தில் வைத்திருப்பார் முருகதாஸ் என நினைக்கிறேன்.

எதிர்ப்பு தெரிவித்து ஒரு மொக்கை படத்துக்கு ஓசி விளம்பரம் தான் கொடுக்கிறாங்க.

ஜோதிஜி said...

அப்பு மூணு நாள்ல வசூலான தொகை ஏறக்குறைய 11 கோடி.

உலகம் முழுக்க 1000 திரையரங்கில்.

முருகதாஸ்க்கும் விஜய்க்குமே பட்ஜெட்டில் பாதி தொகை.

மொத்தத்தில் தாணுவுக்கு பிரச்சனையில்லை.

கப்பல் கரையேறுடுச்சு. இனி இதைப் பற்றி பேசப்பேச அவங்களுக்கு சந்தோஷம் தானே.

பாவம் 200, 300 ரூபாய் கொடுத்து தியேட்டர்ல்ல போய் உட்கார்ந்து படம் பார்க்கிறவங்க.

ஆமா நீர் பாத்தாச்சா?

Anna said...

Completely agree with you. படம் பார்க்கவில்லை. அநேகமாக தமிழில் படம் எடுப்பவர்களோ நடிப்பவர்களோ கொஞ்சமும் யோசிப்பதில்லை. Most of them are all about reinforcing stereotypes over and over again. They don't think about the harmful consequences. :(

Related Posts with Thumbnails