Sunday, February 11, 2018

நடுநிலைவாதம் என்ற ஒன்று இருக்கிறதா?

ஒரு காலத்தில நான் நடுநிலைவாதி என்று கூறிக் கொள்வதில் ஒரு வசதி இருந்தது. காலம் போகப் போக காட்சிகள், தேவைகள், அனுபவங்கள், வாழும் சூழல் என்று நம்முடைய அறிதலின்றியே ஒர் சார்பு நிலை நம்மை இயக்கியே வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

இன்று எனக்கான சார்பு நிலையை எடுத்துக் கொண்டேன். அதற்கான வலுவான காரணங்களுடன். அது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உலக பொது நெறிக்கு பொருந்துமொரு தத்துவ நோக்கில் அமைந்த சார்பு நிலை.

பிழைப்பு வாதத்திற்கென சில நேரங்களில் இந்த நடுநிலை அரிதாரம் மிக்க வசதியாக இருந்து போய்விடுவதுமுண்டு. இதனில் இன்னொரு வகையான மனிதர்களுடனான அதாவது "காலத்தை வாங்கிப் போட்டு திரிதலை கவனிப்பவர்களுடைய" அணுகு முறையுடன் இந்த சந்தர்ப்ப வாத நடுநிலையும் ஊடுருவ வசதியாக இருப்பதால் பிழைப்பு வாத பேச்சுக்களுக்கு இடம் அமைத்து கொடுத்து விடுகிறது.

எதன் பொருட்டும் கருத்து இல்லாத மனிதர்கள் இருக்கக் கூடுமா? இடம், பொருள் வைத்து பேசுவதையன்றி வேறு என்ன நம்மை தடுத்து விட முடியும்?

இல்லன்னா குறள் சொன்ன சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் நெறியை நடுநிலைவாதிகள் பின்பற்றி வாழ்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா? இல்லை கள்ள மெளனம் is being practiced for convenienceகாகன்னு எடுத்துக்கலாமா?

0 comments:

Related Posts with Thumbnails