Thursday, February 22, 2018

திராவிடத்தால் வாழ்ந்தோம்: Impact of Dravida Movement

திராவிட ஆட்சிகாலங்களில் ”அ, ஆ, இ, ஈ...” என்று
பள்ளிகளுக்கு சென்று படிக்க ஆரம்பித்தவர்களுக்கு...

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். என்னை போன்ற ”இந்தியா 2” (have not) பகுதியிலிருந்து படித்து முன்னேறியவர்களின் அறைகூவலிது. திராவிட இயக்கம் மட்டும் தோன்றாமலிருந்து இருந்தால் இன்னமும் நானெல்லாம் ஏதாவது ஒரு பொட்டல் காட்டில் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருப்பேன்.

ஹிந்துத்துவா பிள்ளை பிடிப்பவர்கள் என் கையில் ஒரு காவி கொடியை சொருகி அவனை அடி, இவனை பிடி என்று ஏவும் வேலைகளை செய்து கொண்டிருப்பேன்.

எதுவும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாதுதானே? அப்படி கிடைத்துப் போனால் அதற்கு பின்னான உழைப்பின் மகிமையை நாம் உணர்ந்திருக்க மாட்டோம் தானே?

அந்த இடத்தை நாம் அடைய நிறைய இழப்புகளை நமக்கு முன்னானவர்கள் அனுபவித்திருப்பார்கள். அதன் பலனை மட்டும் நாம் அனுபவிக்க அனுபவிக்க நம் பாதையின் அருமை மறப்போம்... அப்பொழுதான் இந்த குறளை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
**********************

வரலாறு வாசிக்கிற நேரம் வந்திருச்சு. மேலோட்டமான திரித்தலுக்கு மீண்டும் பலியாகிவிட்டால் மீண்டு எழ பல யுகங்கள் ஆகலாம். ஆழ சிந்திக்க வாசிப்பு அவசியம். இதுவே தூசி தட்ட சரியான தருணம்.

0 comments:

Related Posts with Thumbnails