Thursday, February 08, 2018

பக்கோடா பட்டாதாரிகள்: Pakoda Politics!

துணை ஜனாதிபதி வெங்கட்டு நல்ல டாக்டரை பார்க்கச் சொல்லிருவாரோன்னு பக்குன்னு வருது.

ஒரு போஸ்ட் படிச்சேன். அம்பூட்டு மண்டைக்காரனும் அந்த முகாம்லதான்யா அடைஞ்சு கிடக்காய்ங்க.  ஒரு சில வரிகளை அந்த போஸ்ட்ல இருந்து இங்கே கட் அன்ட் பேஸ்ட் செஞ்சுருக்கேன், நமக்கு பேசு பொருளா இருக்கட்டும்னு.

// *மதுரை வீதிகளில் பானிபுரி விக்கிறவன் எல்லோரும் வடஇந்தியர்கள் தான். ஒரு நாளைக்கு குறையாமல் ₹ 2000 க்கு வருமானம் பார்க்கிறான். அவனுக்கு படிப்பறிவே கிடையாது. ஆனால் அவன் பிள்ளைகள் உயர்தர பள்ளிகளில் படிக்கின்றனர்.

மண்ணின் மைந்தன் BE.. BA.. Bsc படித்து விட்டு 5000 ஓவாவுக்கு வேலையை தேடி செய்றான். இல்லாமல் போனால் வேலை தேடி வெளியூருக்குப் போறான்.

ஏன் ? படித்தப் படிப்பை வைத்து இங்கேயே பிழைக்க முடியலே!* //

இதில இருக்கிற உள்பொருளில் இருக்கக் கூடிய முரண் கூட
தெரியாம இதனை ஒரு பேசு பொருளாக எப்படி முன் வைக்க முடியும்?

ஏற்கெனவே ஒரளவிற்கேனும் விழிப்புணர்வுற்று பள்ளிகளுக்கு அனுப்பி தங்களுடைய குழந்தைகளை தன்னை விட ஓர் உயர்ந்த நிலையில் வைத்து பார்க்க வைக்கத்தானே உயர் படிப்பு கடன உடன வாங்கி படிக்க வைக்கிறது.

B.Tech., B.E (ஆயிரத்தெட்டு உட்பிரிகளில் உள்ள துறைக் கல்விகள்), M.Scல (வைரலாஜி, மைக்ரோபயோலஜி, செல் பையாலஜி, வைல்ட்ஃலைப்) லொட்டு லொசுக்கின்னு படிச்சு திரும்பவும் தன்னோட அப்பன் சுட்டுக்கிட்டு இருக்கிற பக்கோடாவை திருப்பி போடவா 23 வருஷம் செலவு செஞ்சு திரும்பவும் அதே  இடத்திற்கு கொண்டு வருவாங்க.

சரி அந்த படிப்பை எட்ட வைக்க எத்தனை கடன் சுமை இருக்கும்? எத்தனை சிரமப் பட்டிருப்பாங்க படிச்சு முடிக்க. ஒரு படிப்பை படிச்சு அதுக்கு தகுந்த மாதிரி வேல வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியாதது யாரோட தவறு? படித்த துறையில் தன்னோட திறமையை வளர்த்தெடுத்து நாட்டிற்கும், தனது வீட்டிற்கும் கொடுக்கும் வயதில் தெண்டச் சோறு, தடிமாடு என்று திட்டு வாங்கிக் கொண்டு சுவாசித்து திரிவது அத்தனை எளிதா என்ன?

சரி இங்கே ஒரு லாஜிகல் கேள்வி, அந்த பானிபூரி, பக்கோடா விற்கும் படிப்பறிவற்ற வட இந்தியர்கள் தங்களுடைய மாநிலம், கிராமம், மக்கள், மொழி தான்டி ஏன் இத்தனை தொலைவு வந்து ஒரு நாளைக்கு 2000ரூபாய் சம்பாதித்து அந்த பணத்தை கொண்டு என்ன செய்யப் போகிறார்? ஏன் அவர்களின் மாநிலத்தில் வாழ்வாதார வளர்ச்சிப் பணிகள் எங்கே போனது? இதே தமிழர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு செய்ய ஆரம்பித்த வேலையைத் தானே அதே படிப்பறிவற்ற வட மாநிலத்துக் காரர் தன்னுடைய குடும்பத்திற்கு செய்ய எத்தனிப்பார்: ஒரு வீடு, பிள்ளைகளுக்கு படிப்பு இத்தியாதிகள்.

// *ஒரு காலத்தில் TVS. Madura coats,, Fenner, Sitalakshmi mills, Meenakshi mills,, Thiagarajar mills, Visalakshi milll, மற்றும் ஏராளமாக Powerloom,, Handloom .. சில்வர் பட்டறை தொழில்களென பெருந்தொழில் மற்றும் சிறுதொழில் என கொழித்த மதுரை இன்று எல்லா தொழிலையும் தொலைத்து விட்டு சிரம பூமியாக மாறியுள்ளது.

மதுரை க்காரனுக்கு பொறுப்புணர்ச்சியில்லாமல், தொழில் வளம் பெருக செய்யும் எண்ணம் இல்லாமல், ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராடி திருப்தி அடைகிறான்.

விவசாயம் முன்னேற கட்டப்பட்ட வைகை அணை, இன்றைய தினம் குடிநீருக்கு மட்டும் திறக்கப் படுகிறது.
இதனால் விவசாயமும் காலி.
ஆனால் நம்ம தமிழன் தான் விவசாயிக்கு சப்போர்ட் செய்து பேஸ்புக், வாட்ஸ்அப் ல் பொங்குவான்* .//

ஏன் இந்த தொழில்கள் எல்லாம் நலிவடைஞ்சு மூடினார்கள்? குடிநீர் பிரச்சினைக்கான காரணம் என்ன, யார் இதனில் அரசியல் செய்வது? ஏன் மக்கள் சமூக வலைத்தளங்களில் வந்து பொங்க வேண்டும், இந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு எது காரணியாக இருந்திருக்கக் கூடும்? எதற்காக ஜல்லிக்கட்டு ஒரு பிரச்சினையாக மாற்றப்படணும்? எதற்காக மக்கள் தெருவிற்கு வந்து போராடணும்?

அப்போ தண்ணீர் பிரச்சினை, மாநிலங்களுக்கிடையேயான நீர் பங்கீடு, விவசாயத் துறையில் வளர்ச்சி குறித்த முன்னெடுப்புகள் எல்லாம் சிறு பிரச்சினைகள் ஆனால் ஜல்லிக்கட்டு விசயம் முதலில் கையாளப்பட வேண்டியது என்று ஒரு அரசாங்கமே அதனில் கை வைக்க எண்ணியதா?

எதற்காக பக்கோடா விற்ற ஒரு தலைமுறையின் பிள்ளைகள் மீண்டும் இருபது வருடங்கள் கழித்து பக்கோடா, பஜ்ஜி விற்க கடை விரிக்க வேண்டும்? சரி தெருவிற்கு எத்தனை பக்கோடா கடைகள் வேண்டும்?

ஏன்டா இதனையெல்லாம் ஒரு ஆர்க்யூமென்டாக எடுத்துட்டு வாரீங்களே உங்களுக்கெல்லாம் ஏதாவது அடிப்படை அறிவோ அல்லது குறைந்த பட்சம் இரக்கமோ கூட இல்லையா? ஒரு படித்தவன் தன்னுடைய படிப்பிற்கு பிறகு என்னவாக ஆக வேண்டுமென்பது அவனுடைய தேர்வாக இருக்க வேண்டுமே ஒழிய நீங்க சொல்வது போல, எப்படி வயிறு வளர்ப்பதுன்னு நீங்க சொல்லி அவன் செய்யும் நிலையில் இருந்தால் அரசாங்கத்தை இழுத்து மூடி விட்டு நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் முக்கு கடையில் டீ க்ளாஸ் கழுவி, பக்கோட வித்து காமிங்க ஏனைய குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளை B.E., டிகிரியுடன் டீ கடை வைக்க அனுப்புவார்கள்.

நீங்களும் உங்க வாதமும். கடுப்பு டாசா வருது!

0 comments:

Related Posts with Thumbnails